Tuesday, December 24, 2013

Merry Christmas and Happy New Year


Wednesday, December 4, 2013

மயக்கமா கலக்கமா....!


வந்த துன்பம்  எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

Wednesday, November 20, 2013

4 THE POWER OF VIRTUE - அறன் வலியுறுத்தல்


From virtue weal and wealth outflow:

What greater good can mankind know?


Virtue enhances joy and gain;

Forsaking it is fall and pain.


Perform food deeds as much you can

Always and everywhere, o man.


In spotless mind virtue is found

and not in show ans swelling sound.


Four ills eschew and virtue reach,

Lust, anger, envy, evil-speech.


Do good enow; defer it not

A deathless aid in death if sought.


Litter-bearer and rider say

Without a word, the fortune's way.


Like stones that block rebirth and pain

Are doing food and good again.


Weal flows only from virtue done

The rest is rue and renown gone.

Worthy act is virtue done

Vice is what we ought to shun.




சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.


அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும் வாய் எல்லாம் செயல்


மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற.


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.


அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்றுஅது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.


அறத்துஆறு இது என வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.


வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அது ஒருவன்

வாழ்நாள் வழி அடைக்கும் கல்.


அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்

புறத்த புகழும் இல.


செயற்பால் தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

Sunday, November 17, 2013

Astonishment

I had the flu. It was a constant irritant and I was suffering lots of pain. I did not want to spread this terrible flu to others. My suffering was bad enough. So I decided to take the day off work. I sent an email to my office and went back to bed.

However, I found I could not stay in bed. I am, by nature, a workaholic. As I lay in bed, I looked around my room.
There were a few more clothes in the laundry basket, so I woke up properly, had some of the ginger tea which helps to relieve the flu symptoms and took the clothes to the launderette, which was 50 metres from my room.

No-one was there. As it was about 10am on a Friday, most of the usual customers were at work. But when I entered, I noticed a suitcase in the middle of the floor.

I loaded my clothes into the machine and turned it on. I had an hour to spend while my clothes were washing and drying, so I started to read the magazines I had brought along. But I found I could not concentrate on reading because of the suitcase in front of me.

No-one was there. All the machines were off except the one I was using. There were too many questions bubbling up in my mind about the suitcase. In the end, I decided to open the suitcase and see what was in it - but still I was scared. What was inside? Who had brought it there? Why had they placed it in the middle of the floor? If someone had forgotten it, it should have been near one of the seats or on top of one of the machines, but it was in the middle of the floor.

So it had been someone's deliberate plan to place it there in full view of anyone who entered the launderette. It might contain explosives.

There are lots of movies showing such incidents. An anonymous box is in a place where people gather. Someone tries to open it. The box explodes and the people are killed.

But, despite my fears, my mind kept insisting that I should open the suitcase and there would be money inside. Because it was my dream to adopt children who have lost their parents through the horrors war or other circumstances, those who are poor, are craving for food or are seeking to study.

I was thinking seriously about the suitcase and whether to open it or not. If it contained money, my dream would come true. If it contained explosives, my life would end with a big bang and it would hit the headlines the next day in all the newspapers in the country, perhaps even the world. I had spent 30 minutes in the launderette.

Still no-one came. I looked in the street. There was no-one there too. My mind, eaten up with curiosity, was pushing me forward to look inside the suitcase.

Christians have a saying, "Knock at the door and it will open for you. Do not think that it is locked. Sometimes it is just closed." So I prayed to God and took a coin and tossed it. Heads and I would call the police. Tails and I would open the suitcase.

Tuesday, November 5, 2013

கந்தர சஷ்டி கவசம்

Sunday, November 3, 2013

குடும்பத்துக்கா பணத்துக்கா முன்னுரிமை?

சுபா தனது திருமணத்திற்காக குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்திருந்தாள். அங்கு வந்ததும் முதல் வேலையாக எல்லோருக்கும் தொடர்பு கொண்டு தனது திருமண விபரத்தைத் தெரிவித்தாள்.

அவ்வாறே சாம்பவிக்கும் சுபா தொடர்பு கொண்டு, " எனது திருமணம் இன்னும் இரு நாட்களில் நடைபெற இருக்கிறது. சித்தப்பாவிடம் சொல்லி விடுங்கள் " என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

சுபா, சாம்பவியின் கணவரின் அண்ணனின் மகள் ஆவாள்.
ஆனாலும் சாம்பவி தனது வேலை அசதியால் உடனடியாகத் தன் கணவனிடம் சொல்லாவிட்டாலும் மறு நாள் சொல்லி விட்டாள்.

ஆனாலும் சுபாவினது தொடர்பிலக்கத்தை குறித்து வைக்கவோ அல்லது அவளது தொலைபேசியில் சேமித்து வைக்கவோ நினைக்கவில்லை. ஏனென்றால் குடும்பத்தினர் தானே... பின்னரும் தொடர்பு கொள்வார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு.

மென்மேலும் வந்த தொடர்புகளால் சுபாவினது இலக்கம் தொலைபேசியில் இருந்து மறைந்து போய்விட்டது. ஏனென்றால் கடைசியாக உள்வந்த தொடர்புகளுக்கான 10 இலக்கங்களே சேமித்து வைக்கக்கூடியவாறு தொலைபேசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் மறுபக்கம் சுபாவோ, சித்தியிடம் சொல்லிவிட்ட பின்னரும் திருமணமாகி 10 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் சித்தப்பா தனக்கு தொடர்பு கொண்டு வாழ்த்தவில்லையே என்று கோபத்தில் இருந்தாள்.
அவளது தொடர்பிலக்கம் தொலைபேசியில் இருந்து அழிந்து விட்டது என்பதும் சாம்பவியின் கவலையீனத்தால் நடந்தது என்பதும் சுபாவுக்குத் தெரியாது.

ஆனால் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து வந்த தொடர்புக்கு விடையளித்து விட்ட சாம்பவி முதல் வேலையாக அவ் வாடிக்கையாளரின் தொடர்பிலக்கத்தை தொலைபேசியில் இருந்து எழுதி விட்டு இலக்கங்கள் சரியாக எழுதப்பட்டுள்ளதா என்று ஒவ்வொரு இலக்கமாக பார்த்து மீள உறுதிப்படுத்திய பின்னரே மறு வேலை பார்த்தாள்.

Saturday, November 2, 2013

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

may the Divine light of Diwali
Shine with
Peace
Prosperity
Happiness
and Good Health
in your life.

Happy Diwali

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும்
உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும்
எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

இன்றைய நன்னாளில்
தங்களைச் சூழ்ந்திருக்கும்
துன்பங்கள் மறைந்து
இன்பங்கள் சூழ
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

என்றும் அன்புடன்

சிவநாதன்.

Thursday, October 31, 2013

THE BALD MAN AND THE FLY

A Fly settled on the head of a Bald Man and bit him.

In his eagerness to kill it, he hit himself a smart slap.

But the Fly escaped, and said to him in derision,

"You tried to kill me for just one little bite; what will you do to yourself now, for the heavy smack you have just given yourself?"

"Oh, for that blow I bear no grudge,"
he replied,

"for I never intended myself any harm; but as for you, you contemptible insect, who live by sucking human blood, I'd have borne a good deal more than that for the satisfaction of dashing the life out of you!"

From Aesop story

Monday, October 21, 2013

முதற் பயம்

" தம்பி இந்த தேத்தண்ணியைக் வயலுக்குக் கொண்டு போய் அம்மாக்களிட்ட குடுத்திட்டு வாறியோ.... அச்சாப்பிள்ளை...." என்று அப்போது தான் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு இருந்த நேரத்தில் சுடுதண்ணீர் போத்தலினுள் தேனீரை ஊற்றி மூடிக் கொண்டே என்னிடம் கேட்டாள் என் அக்கா.

நானும் வயலுக்குப் போய் அந்த பச்சைப் பசேல் என்ற நெல்வயலைப் பார்க்கும்ஆர்வத்தில் " ஓமோம் தாங்கோ கொண்டு போய் குடுக்கிறன்.." என்று வாங்கிக் கொண்டேன்.

அப்போது அக்கா " இண்டைக்கு களி வயலுக்குத் தான் புல்லுப் பிடுங்கப் போறதெண்டு அம்மா சொன்னவா. அங்கை போய்ப் பார். அங்கை இல்லையென்றால் பெரியக்காவின்ரை வயலுக்குப் போய்ப் பார்" என்று சொன்னாள்.

" ஓமோம் " என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வயலை நோக்கிப் பறந்தேன்.

எமது ஊர் ஓர் அழகான ஊர். எங்களது வீட்டிலிருந்த 200 மீற்றருக்கு முன்னாடி ஒரு கிலோ மிற்றர் வரை சுமார் ஆயிரம் ஏக்கர் வரையான நிலத்தில் நெற்பயிர்ச செய்கை செய்வார்கள்.

இது மழை காலத்தில் மட்டும் அதாவது ஒரு போகம் மட்டுமே நெற்பயிற் செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அந்தக் காலத்தில் வயல்வெளியில் வீசும் குளிர்காற்றை அனுபவிப்பதற்காகவும் அக்காற்றினில் அலை போன்று அசைந்தாடும் நெற்கதிரின் பச்சைப் பசேல் என்ற கண்ணுக்கு குளிற்சியான அவ் வண்ணத்தை ரசிப்பதற்காகவும் நான் அங்கு செல்ல ஆசைப்படுவேன்.

ஆனாலும் எனக்கு அப்போ சிறிய வயது என்பதால் மழை காலத்தில் வெளியில் சென்றால் வருத்தங்கள் வந்து விடும் என்று தாய்மை உள்ளத்தோடு கண்டிப்பாக வயல்வெளிக்குச் செல்ல அம்மா அனுமதிப்பதில்லை.

சில சமயங்களில் அம்மாவுக்குத் தெரியாத வகையில் ஓடிப் போய் வயல்க் காட்சிகளை ரசித்து விட்டு வந்து அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டதும் உண்டு.

எமது வீட்டினருகில் வயல் வெளியிருந்தும் அக்காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்று பலமுறை ஏங்கியதும் உண்டு.

இப்படியான ஏங்கங்கள் இருந்த காலத்தில் தான் அக்காவும் அம்மாவுக்க தேனீர் கொண்டு சென்று கொடுக்குமாறு கூற சந்தோசத்தில் பறந்து வயல் வெளிக்கு வந்தேன்.

அக்கா சொன்ன களி வயலில் அம்மாக்கள் இல்லாதது எனக்கு மிக்க சந்தோசத்தைக் கொடுத்தது. ஏனென்றால் களிவயல் இருப்பது வீதியோரத்தில். ஆகையால் நான் தேனீரை அம்மாவிடம் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுமாறு கூறி விடுவார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திரும்பியிருக்க வேண்டியிருக்கும். அதனால் தான் சந்தோசத்துடன் வயல்களின் நடுவே இருந்த பெரியக்காவின் வயலை நாடிச் சென்றேன்.

அங்கே அம்மா, சித்தி, பெரியக்கா, பெரியண்ணா, ஐயா எல்லோரும் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "அம்மா, குட்டியக்கா தேத்தண்ணி தந்துவிட்டவா..." என்றேன்.

Tuesday, September 3, 2013

இருந்தும் இல்லாதவர்கள்


எனக்கு அம்மா இல்ல... …..........
அப்பா இல்ல.....................
அண்ணா இல்ல.................
யாருமே இல்ல...............
நான் ஏன் உயிரோட இருக்கணும்..............
நான் சாகப் போறன்.......................”
என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள் பொற்கொடி.

பொற்கொடிக்கு 21 வயது தான் ஆகிறது. செந்தளிப்பான, அழகான வட்ட முகம். நேர்த்தியாக வாரியிழுத்துப் பின்னப்பட்ட தலைமுடி, முத்துப் போன்ற பல்வரிகள் என அனைத்து அழகையும், அவளுக்குக் கொடுத்த இறைவன், அவளது வயது, உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் சற்று உருவத்தில் பெரிய உடலை அவளுக்கு கொடுத்திருந்தான்.

பொற்கொடி வீட்டில் ஒரே பொண்ணு. கடைசிப்பிள்ளையும் கூட. முத்த இருவரும் அண்ணன்கள். அவர்கள் இருவரும் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு, தமக்கும் அந்தக் குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்றவாறு ஏனோ தானோ என்று இருந்தார்கள்.

இவளுக்கு 14 வயது இருக்கும் போது, தாயாருக்கும் தந்தையாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சிறிய பிரச்சனை பெரிய பிரச்சனையாகி நீதிமன்றம் வரை சென்றது. பிறகென்ன? விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். நீதிமன்றம் இவர்கள் மீண்டும் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதைப் பரிசீலிப்பதற்காக, ஒரு வருட கால அவகாசம் வழங்கி தீர்ப்பைத் தள்ளிப் போட்டது.

இந்த ஒருவருடத்தில் அவர்களது வீடே இரண்டாகப் பிரிந்து விட்டது. சமையல், படுக்கைய‌‌றை இரண்டானது... வீட்டு வாசல் இரண்டானது என அனைத்துமே இரண்டானது. யாரும் யாரையும் பார்த்துக் கொள்வதில்லை. பார்க்கும் சந்தர்ப்பங்களிலும் முகத்தினைத் திருப்பிக் கொண்டார்கள்.

Sunday, August 4, 2013

நீ ஆபரணமா...? அல்லது பொக்கிஷமா....?


வழமை போலவே அன்றும் தன் மனைவி பரிமளத்துக்கு கோல் எடுத்தார் அம்பலத்தார். அப்போது மற்றைய போனில் பரிமளம் கதைத்துக் கொண்டிருந்ததால் போனில் காத்திருந்தார் அம்பலத்தார். சொந்த மொழிக் காரன் ஒருவருடன் வீடு ஒன்று வாடகைக்கு எடுப்பது தொடர்பாக ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தாள்.

பரிமளத்துக்கு நம்பிக்கையுடன் ஆங்கிலம் கதைக்கத் தெரிந்திருந்தாலும், கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு விளங்குமோ என்னவோ.....? ஆனாலும் பரிமளம், தான் என்ன நினைத்தாளோ, அதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பரிமளம், போனில் கஷ்ரப்பட்டு விளங்கப்படுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அம்பலத்தார், அவள் தனது உரையாடலை முடித்து விட்டு கணவர் அம்பலத்தாருடன் கதைத்த போது,

"வீடு வாடகைக்கு எடுத்தல் தொடர்பாக கதைக்கும் போது எமது மொழிக் காரருடன் எமது மொழியிலேயே கதைப்பது நல்லது. ஆங்கிலத்தில் கதைத்தால், அவர்கள் உங்களை வெளிநாட்டவர் என நினைத்து வாடகையைக் கூட்டிச் சொல்வார்கள்......"

என்று சொன்னார்.

"முதலில் எங்கள் மொழியில் தான் கதைத்தேன். ஆனால் அவர் தான் ஆங்கிலத்தில் கதைத்தார். பின்னர் நான் தொடர்ந்து கதைத்தேன்"
என்றாள் பரிமளம்

" சரி..... சரி..... ஏதோ அவனுக்கு விளங்கப்படுத்த முயற்சிப்பது போலிருந்தது அது தான் சொன்னேன்....... அதை விட ஆசிய நாடுகளில், வெளிநாட்டுக்க காரர் என்றால், வாடகையைக் கூடச் சொல்லி வாங்குவதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்..... அது தான் ....."
என்றார் அம்பலத்தார்.

" சரி கதையை விடுங்கோ.... அதெல்லாம் கதைச்சாச்சு..... நீங்கள் தேவையில்லாமல் இதுக்குள்ளை தலையை விடாதையுங்கோ..... இது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்......."
என்று கோபமாகச் சொன்னாள் பரிமளம்.

Saturday, July 13, 2013

ஒரு தாயின் கனவு


" என்ரை பிள்ளை தனியப் போய் இருக்குது.

பிள்ளையை என்ரை காலத்திலேயே ஒருத்தன்ரை கையில பிடிச்சுக் குடுத்து கரையேத்திவிட வேணும் முருகா.. ஜேசப்பா... !"

என்று ஓயாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கமலம்.


அவளுக்கு மதி, கவி, பவி என்று மூன்று பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.

இவர்களில் மதி தான் மூத்தவள். கமலம் புலம்பிக் கொண்டிருந்ததும் இவளைப் பற்றித் தான்.


ஏனென்றால், அவளது இரண்டாவது மகள் கவி திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் நாட்டினது கொடூர யுத்தம், அவர்களது குடும்பத்தையே மதியிடம் இருந்து பிரித்து தனிமைப் படுத்தியது.


நீண்ட காலமாக குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாததால், தையல் கொம்பனி ஒன்றில் சேர்ந்து வேலை செய்து, தனது வாழ்க்கையை ஓட்டி வந்தாள் மதி.


நாட்டில் சமாதானம் நிலவி, போர் முடிவுக்கு வந்திருந்த போதும், மதி, தனது ஊருக்குச் சென்று, பெற்றோருடன் சேர்ந்திருப்பதற்கு, அந்த நாட்டின் பயங்கரவாதச் சட்டம், பயங்கரச் சட்டங்களாக, அவளை விடாது துரத்திக் கொண்டே இருந்தது.

அதனால் அவள் வேறு நாடு ஒன்றுக்கு குடிபெயர்ந்து அகதியாக அடைக்கலம் கோரியிருந்தாள்.


ஆனாலும், அவள் தஞ்சம் கோரியிருந்த நாட்டின் சட்டங்களும் கொடுமையாகவே காணப்பட்டன. அந்தக் கொடுஞ்சட்டம் அவளையும் விடவில்லை. விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அவள் மீதும் பாய்ந்து அழுத்தியது.


எப்போது அவளது விடுதலை என்று தெரியாது தவித்தாள். தத்தளித்தாள். தாய் கமலத்திடமும் சொல்லிப் புலம்பினாள். ஆனாலும் சட்டங்களுக்குத் தான் மனச்சாட்சி, கண் என்று எதுவும் இல்லையே. சாட்சிகள் என்று எதுவும் கிடைத்தால் போதுமே. அவை பொய்யானதாகவோ போலியானதாகவோ இருப்பதைப் பற்றிப் பிரச்சனை எதுவும் இல்லை.


தஞ்சம் கோரிய நாட்டுச் சட்டத்தைப் பொறுத்தவரை சாட்சியும் தேவையில்லை. விசாரணையாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் சட்டமாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் சென்று தமக்கிழைக்கப்பட்ட அநியாயத் தீர்ப்புக்கு நியாயம் கேட்டு முறையிடுவதற்கு, சட்டம் இடம் கொடுக்கவில்லை.

Sunday, July 7, 2013

ஐஸ் பிரியாணி




" காலைத்தென்றல் பாடிவரும் கானம் ஒரு கானம்...." என்று கைத்தொலைபேசியின் இரண்டு மூன்று தடவை பாடி ஓய்ந்த பின்னர் கண்ணை விழித்துப் போனைப் பார்த்த அரசு 5 மிஸ்ட் கோல் இருக்கவும் நேரத்தைப் பார்த்தான். மணி 11 ஐத் தாண்டிக் கொண்டிருந்தது.


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சற்று நீண்ட நேரம் தூங்குவதற்காக அலார மணியை நிறுத்தி விட்டிருந்தான்

. மற்றைய நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களது பலசரக்குக் கடையில் வேலை செய்வதற்காக 6 மணிக்கே எழுந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.

அரசு கடையில் வேலை என்றால் அவனது அம்மா சுதாவுக்கு வீட்டிலும் கடையிலும் என இருபடி வேலை அவளுக்கு


. பிள்ளைக்கு 3 வேலை சாப்பாடு தயாரித்து கடைக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதிலிருந்த வீட்டில் வேலை முடித்து கடையில் வேலை செய்வதிலிருந்து அவளது தலையிலும் ஆயிரம் வேலைகளை தன் தலையில் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.

அன்று அரசுக்கு விடுமுறை என்றால் தாய் சுதாவுக்கும் விடுமுறை தான்

அவளும் சற்று நீண்ட நேரம் தூங்கித் தான் விட்டாள்.

அதனால் தாயும் மகனும் தூக்கம் விட்டு எழுந்து குளித்து வர

12 மணிக்கு மேலாகி விட்டது. ஒரு சோறும் கறியும் சமைக்க எப்படியும் 2 மணிநேரமாவது எடுக்கும் அதுவரை அரசு பசி தாங்க மாட்டான் என்று நினைத்த தாய், உடனடிச் சாப்பாடு என்ன உள்ளது என்று பார்த்த போது முதல் நாள் இரவு மீதியிருந்த சோற்றை படுதாகாமல் இருப்பதற்கு தண்ணீர் ஊற்றி வைத்தது நினைவுக்கு வந்தது.

Tuesday, July 2, 2013

திருப்தி கொள்




எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்.

எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகு



இறைவன் உனக்குக் கொடுத்த நேரம் சொற்பமே

அந்த நேரத்தினை பிரயோசனமாகப் பயன்படுத்து.



கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே

எதிர்காலத்தைப் பார்த்து ஏங்காதே



உனக்காக இறைவன் கொடுத்தது அவ்வளவே

கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக்கொள்



எதையும் தொடர்ந்து முயற்சி செய்

அந்தந்த நேரத்தில் அதன் பயன் கிடைக்கும்.



அனைவரிடமும் ஆலோசனையைப் பெற்றுக் கொள் - ஆனால்

ஆணித்தரமான முடிவை நீயே எடு



எப்போதும் உன்னருகில் நல்லவரை வைத்துக் கொள்

இல்லையேல் உனைச்சுற்றி கெட்டவர்கள் கூடுவர்

Monday, July 1, 2013

தந்தையர் தினம்



"உங்களுடைய அப்பா என்ன வேலை? "

" Engineer..."

"உங்களுடைய அப்பா...?"

" Doctor...."

"உங்களது..."

" Teacher....."

"உங்களது..."

" He is in Home"

" No problem.... what was his job before "

" He always is in the house ...
Clean the Kitchen and house and washe the vessels..."

எல்லோரும் பெரிதாகவே சிரித்து அவனை சேலி செய்தார்கள்.

" உனது அப்பா என்ன சோம்பேறியா.....? இன்னும் ஏதேதோவெல்லாம் கேட்டு கேலி பண்ணினார்கள். அன்று முழுவதும் அவன் சோகமாகவே காணப்பட்டான்.


அன்று தந்தையர் தினம். அதனால் வகுப்பறையில் ஆசிரியர் தனது மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தந்தையார் என்ன வேலை செய்கின்றார்கள் என்று கேட்டுக்கொண்டு வந்து, அபியிடம் கேட்ட போதே அவன் அந்தப் பதிலைச் சொன்னான்.

Saturday, June 15, 2013

மூத்தவன்.




" இதை ஏனணை வாங்கினியள்...?

எனக்கு தேவையானதை நான் வாங்குவன் தானே...?

ஏன் உங்களுக்கு உந்த தேவையில்லாத வேலை...?

உங்களுக்கு இந்தக் கால நாகரீகத்தைப் பற்றித் தெரியுமோ...?

இவ்வளவு காச சிலவழிச்சு வாங்கியந்திருக்கிறியள்...

இது எனக்குப் பிடிக்வேல்ல...

எனக்கு வேண்ணடாம்......

உங்கட அடுத்த பிள்ளையளுக்குக் குடுங்கோ...

இனி எனக்கொண்டும் வாங்க வெண்டாம். சொல்லிப்போட்டன்...."


என்று அம்மாவைத் திட்டிக்கொண்டு பாடசாலைக்குப் புறப்பட்டான் சிவாகரன்.


அன்னம்மாவோ எவ்வளவு ஆசையாக தான் உழைத்த பணத்தில் அவனுக்கென ஒரு சேட் எடுத்துக்கொடுக்க அவன் தாயாரைத் திட்டியதோடல்லாமல் அவளின் மனதையும் நோகடிக்கச் செய்து விட்டான். .


"உந்த வயலில, வெய்யில்ல, காஞ்சு, கூலிக்கு அரிவி வெட்டி, சூடடிச்சு ஆம்பிளை மாதிரி 40 பரப்பு வயல் விதைச்சு இப்படியெல்லாம் சேத்த காசில தான இவனப் படிப்பிச்சனான்.

படிப்பிக்கேக்க, அதுக்கு காசு, இதுக்கு காசு எண்டு 300/400 எண்டு கேக்கேக்க இந்த நாகரீகமெல்லாம் எங்க போனது...?

இப்பவும் அவன்ர உழைப்பில நான் வாங்கிக் குடுத்தனானோ...?

3 நாள் அரிவி வெட்டி, கூலி கிடைச்சாப் போல, பெரியவனுக்கு ஒரு சேட்டெடுப்பம் எண்டு எடுத்தன். அது பிழையோ...?

உவன் உந்தத் திட்டு திட்டிப் போட்டுப் போறான்...."

Saturday, June 8, 2013

நொந்து போன பிஞ்சு



காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பூங்கா, கவலையாகவே காணப்பட்டாள். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கோ, பிள்ளை ஏன் கவலைப் படுகின்றாள் என்று தெரியாது தவித்துக் போனாள்.

பூங்காவைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்ட கண்ணம்மா,

"ஏனம்மா கவலையாயிருக்கிறீங்கள்...?
உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அம்மா அப்பாவுக்குச் சொன்னால் தானே தெரியும்...?
பிள்ளை கவலையாயிருந்தால் அம்மாவுக்கும் தானே கவலையாயிருக்கும்...."
என்று கண் கலங்கினாள்.

அவளது கண் கலங்கியதும் அந்த எட்டு வயதேயான பிஞ்சு பூங்காவின் கண்கலங்கி கண்ணீர் வழிந்தோடியது. தாயின் கண் கலங்கக் கூடாது என்பதற்காக தனது கவலையைச் சொல்லத் தொடங்கினாள்.

" நான் நப்பிளான்ட் ரெஸ்ற் எழுத மாட்டேன் அம்மா..."
 என்றாள் பூங்கா

" ஏன் பிள்ளை எழுத மாட்டீங்கள்.....?
நீங்கள் எழுதி சித்தியடையாவிட்டாலும் பறவாயில்லை....
எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.
ஆனால் பிள்ளை அந்த ரெஸ்ரை எழுதினால் தானே, அது கஸ்ரமானதா அல்லது சுலபமானதா என்று தெரியும்...?
அப்போ தானே அடுத்த ரெஸ்ருக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்...? "
என்றாள் தாய் கண்ணம்மா.

Wednesday, June 5, 2013

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

 யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணு நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே



Sunday, May 26, 2013

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பழமொழிகள்



1. ஒல்லியான உடம்பு உறுதியான உடம்பு.

2. கொழுப்பு மண்டி குண்டி பெருத்தால் குந்தி எழுந்தால் கூட கூப்பாடு போடணும்.

3. அன்றே கொல்வது காட்டுப்புளி. நின்று கொல்வது வீட்டுப் புளி.

4. அளவான உறக்கம் வளமான வாழ்வு

5. உழைக்காத உடம்பு உழுத்துப்போன உலக்கை.

6. மூன்று வேளை உள்ளே. மூன்று வேளை வெளியே.

7. சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்.

8. உண்ணா நோன்பு உயிர் வாழும் நோன்பு

9. உடற்பயிற்சி உடம்புக்கான கவசம்.

10. வெயிலை மறந்தால் வாழ்வெல்லாம் துயரே.

Tuesday, May 21, 2013

உனைவிட இல்லை புதுமையே

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு

காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன்

துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே

உனைவிட இல்லை புதுமையே  

Monday, May 20, 2013

பாசத்துக்கு ஏங்கிய பாலன்


" அங்கை போகாதே ... அங்கே போனால் பேய் பிடிக்கும்..... "

என்று அவளது வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சனசமூக நிலையத்துக்கு தனது மகன் பாலாவை போகவிடாது வெருட்டிக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.

பாலாவுக்கு அப்போது தான் 2 வயது ஆகிக் கொண்டிருந்தது. அவனுக்கு 8 வயதில் அக்காவும் 5 வயதில் அண்ணாவும் இருந்தனர். பாலன் சரியான சுட்டிப் பயல். அவனுடைய சில வேடிக்கையான நடவடிக்கைகளை கண்ணம்மா அயலவர்களிடமும் காண்பவர்களுக்கும் சொல்லி மகிழ்வாள்.


யாராவது அவனது வீட்டுக்கு வந்திருந்தால் அவர்களுடன் பாலா ஒட்டிவிடுவான். அவர்கள் மீது பாசமழை பொழிந்து தன்னை அவர்கள் மறக்க முடியாத அளவுக்குச் செய்து விடுவான்.

Sunday, April 21, 2013

போக்குவீரா என் துன்பம்





காலை வணக்கம் சொல்லி என்னை

கட்டி அணைத்து உச்சி முகர்ந்து

எழுப்பி என்னைத் துாக்க வேண்டும்



குளிக்கும் போது முதுகு தேய்த்து

சோப்புப் போட்டு தண்ணீர் ஊற்றி

கழுவி என்னைத் துடைக்க வேண்டும்

Thursday, April 18, 2013

சாமிக்கு அப்பா இல்லையா?


டும் ..டும் ...டும் என்று எங்கு பார்த்தாலும் செல் சத்தங்களும் விமானக்குண்டு வீச்சுக்களும் டட் டட் டட் டட்.......என்று துப்பாக்கிச் சத்தங்களும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தன.


சனங்களும் ஒவ்வொரு ஊர்களாக, ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். ஆனாலும் இராணுவ அணிகள் தொடர்ந்து மக்களது உயிர்களையும் பாராது குடியிருப்புக்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் என அனைத்தின் மீதும் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றதோடல்லதமல் அவர்களை அவ்விடங்களில் இருந்து துரத்தியும் அடித்தன.


இராணுவத்தின் குண்டுத்தாக்குதல்களில் செத்தவர்கள் சாக, மற்றவர்கள் அஞ்சி ஓடி ஓய்ந்து ஓதங்கிய இடம் தான் முள்ளிவாய்க்கால். ஏலக்கூடியவர்கள் தொடர்ந்து ஓடுவதற்கு இடமிருந்தால் ஓடியிருப்பார்கள். ஆனால் அங்கு அவர்களை ஆர்ப்பரித்து வழிமறித்தது இந்து சமுத்திரம்.


சனம் எல்லாம் தங்களால் இயன்றவரை அந்த கடற்கரை மண்ணில் பங்கர் வெட்டி, கொழுத்தும் வெயிலில் இருந்து தம்மைக் காக்க அதன்

Sunday, April 14, 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


இன்றைய புத்தாண்டுத் திருநாளில்

அனைத்து வளங்களும் கிடைத்து

பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.

Friday, April 12, 2013

எத்தனை அழகு கொட்டி கிடக்குது


எத்தனை அழகு கொட்டி கிடக்குது

எப்படி மனசு கட்டி பறக்குது.. !

Tuesday, April 2, 2013

நிஜம்.


மலர்

பொய்மை நிறைந்த உலகில்

இன்னும் மாறாதிருக்கும் நிஜம்.



மனம்

யாவரையும் ஆட்டிவைக்கும்

யாருமறியா அங்கம்



முகம்

ஒவ்வொருவரது மனத்திரையின்

புகைப்படப் பிரதி.

Thursday, March 28, 2013

இனிய ஈஸ்ரர் வாழ்த்துக்கள்.




ஈஸ்ரர் விழாவினைக் கொண்டாடும் அனைத்துக் கிறிஸ்த்தவ அன்பர்களுக்கும் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய இத்திருநாளில்

கேட்டவை கிடைத்து,

நினைத்தவை நிறைவேறி,

பதினாறு பேறும் பெற்று,

இறைவனருள் கூடி வர

வாழ்த்துகின்றோம்.

Thursday, March 21, 2013

பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு


பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு


பூத்திருச்சு வெட்கத்தை விட்டு...

Tuesday, March 12, 2013

தொலைபேசியும் தொந்தரவும்.



கைத்தொலைபேசி


தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, சகல வசதிகளையும் உள்ளடக்கிய, அனைவரலும் பாராட்டப்பட்ட, இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு இரண்டு என்னும் வீதத்தில் பாவிக்கப்படும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத அங்கமாக உள்ளது கைத்தொலைபேசி.


ஒரு நூற்றாண்டின் முன்னர் ஒரு செய்தி அனுப்புவதற்கு பத்துப் பேர் பலத்த பாதுகாப்புடன் பல நாட்கள் பயணம் செய்தார்கள். ஆனால் இன்று இந்த உலகத்தையே ஒரு வீடாகச் சுருக்கி எமது உள்ளங்கையில் கொடுத்துள்ளது தொழில்நுட்பம்.


உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் நேரில் பார்த்துப் பேசுவது போல் இணையம் மூலமாக ஒருவரைப் பார்த்து ஒருவர் நினைக்கும் நேரத்தில் பேசி விடலாம்.

அப்படிப்பட்ட அரும் பொருளாக அனைவராலும் விரும்பப்படும் அத்தியாவசியப் பொருளாக; அன்பினை வளர்த்துக் கொள்ளும் இணைப்புப் பொருளாக; வசதியை வளர்த்துவிடும் வாணிபப் பொருளாக; அத்தியாவசியச் செய்திகளை உடனுக்குடன் பரிமாறி மற்றவரைக் காப்பாற்றும் காத்தல் பொருளாக; இன்னும் எத்தனையோ வசதிகளை எம் காலடிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பொருளாக கைத்தொலைபேசி உள்ளது.


இவ்வளவு வசதிகளைக் கொண்டதாக கைத்தொலைபேசி உள்ள போதும், அதனை தமது வாழ்க்கைக்கு இடைஞ்சலாக; சுமையாக; இருப்பதாகவும் நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


ஏனென்றால் கைத்தொலைபேசியின் அருமைகள்; அதனால் செய்யக் கூடிய வேலைகள்; அதனால் வளர்க்கக்கூடிய உறவுகள்; என்று பலவிதமான நன்மைகளை அறிந்து கொள்ளாதவர்கள் தான் அதனை சுமையாக நினைக்கிறார்கள்.


உரையாடல் - 01


அரவிந்தன்: ட்றிங்... ட்றிங்.....

கஸ்தூரி: ட்றிங் ..... ட்றிங்...... திஸ் இஸ் ரியூன்ரோக் வொயிஸ் மெயில் றெக்கோடிங்   சிஸ்ரம்................

Sunday, March 10, 2013

தகிட ததிமி தகிட ததிமி தந்தான......!




இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது.

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே

பாவம் இங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை

காதல் என்னைக் காதலிக்கவில்லை..!

உணர்வுகள்

அறிவுரை


கொடுப்பதற்கு இலகுவானது

வாங்குவதற்கு கடினமானது....!


காதல்


ஈருடல்

ஓருயிர்....!


கோபம்


உயிரினங்களுக்குள்

உறங்கிக் கொண்டிருக்கும்

மிருகக் குணத்தின்
திடீர் எழுச்சி

Friday, March 8, 2013

தாய்

பெண்


உலகில் உள்ள

உயிரினங்களின் தாய்.....!





பூமி


எந்தவித பேதமுமின்றி

உயிரினங்களை வாழவைக்கும்

உன்னத தாய்....!

Sunday, February 24, 2013

ஆபத்தாக மாறிவிடும் அனுதாபங்கள்.



" கண்ணய்யா... நீங்கள் நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு வரவேண்டி இருக்கும். ஏனென்றால் 3000 இடியப்பம் ஓடர் வந்திருக்கிறது. காலை 7.30க்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். "

என்று கண்ணய்யாவுக்கு மறுநாளுக்கான வேலையை சொல்லிக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.


அது ஒரு பெரிய உணவு உற்பத்திக் கம்பனி. அதில் உடனடி இடியப்பம் தான் அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுகளில் ஸ்பெஷல். பல உணவகங்கள், திருமண வைபவங்கள், கோவில்கள், மற்றும் என்ன நிகழ்வுகள் எல்லாம் மதிய உணவு நேரம் தவிர்ந்த காலை , மாலை உணவு நேரங்களில் நடக்கின்றனவோ அவையெல்லாம் இவர்களிடம் தான் ஓடர் கொடுக்க வருவார்கள்.


ஒரு மணி நேரத்தில் 1000 இடியப்பங்களைப் பிழிந்து அவித்து விடக் கூடிய மெசினறியைக் கொண்டிருந்தது அந்தக் கம்பனி. இடியப்பத்தைக் கொடுக்கும் போது அதற்குரிய சாம்பார், சட்னியையும் கொடுக்கும் பொறுப்பும் இந்தக் கம்பனியுடையதே.


அதனால் தான் கஸ்தூரி அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு, மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

Tuesday, February 19, 2013

புரோகிதரும் கடவுளும்

புரோகிதர்


கடவுளுக்கும் பக்தர்களுக்குமான

மொழி பெயர்ப்பாளர்.


கடவுள்


மனிதனால் படைக்கப்பட்ட

மாயை....!

Monday, February 18, 2013

"சக்தி இன்றேல் சிவம் இல்லை"



சிவன் தனது உடலில் பாதியை தனது மனைவியான உமையம்மைக்குக் கொடுத்தார்.

மனைவி என்பவள்; பெண் என்பவள் சக்தி  என்று பொருள். அதனால் தான் "சக்தி இன்றேல் சிவம் இல்லை" என்று சித்தர் ஒருவர் சொன்னார்.

அது தான் ஒரு ஆண் திருமணத்திற்கு முன்னர் ஒரு கட்டுக்கடங்காத காளையாக எப்படியெல்லாமோ இருப்பார்.

ஆனால் அவனுக்கென்று ஒரு பெண் நிச்சயிக்கப்பட்ட பின்னர் அந்த ஆணில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அதாவது சக்தியின்றி இருந்த ஒரு மனிதனுக்கு மனைவி; பெண் எனும் வடிவில் சக்தி கிடைக்கின்றது.

Thursday, February 14, 2013

காதலர் தின நல்வாழ்த்துக்கள்

இன்று காதலர் தினத்தைக் கொண்டாடும்

அனைத்துக் காதலர்களுக்கும்

இப்போதும் தனது துணைவரைக்

காதலித்துக் கொண்டிருக்கும்

காதல் உள்ளங்களுக்கும்

எமது காதலர் தின

நல்வாழ்த்துக்கள்.

என்றென்றும் காதல் செய்வீர்.

Tuesday, February 12, 2013

சீதனம்


01. ச்சீ....

      தனம்...!


02. அன்பளிப்பு எனும் பெயரில்

      அடாத்தாகப் பெறப்படும்

      அவாச் சொத்துக்கள்....!


03. பெற்றோரால் பேசப்படும்

      மாப்பிள்ளைகளின்

      ஏலப் பெறுமதி.....!

Saturday, February 9, 2013

8 Secrets of success

Tuesday, January 29, 2013

அவர்கள் பயங்கரமானவர்கள்



அது ஒரு அகதிகள் தடுப்பு முகாம். அங்கு குழந்தைகள், குடும்பங்கள்,

தனிநபர்-ஆண்கள், பெண்கள் என பல நாடுகளில் இரந்து வந்தவர்களும்

தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.


சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், அங்கு வருவார்கள் . அவர்களுக்கு

அனைவரையும் போன்று குடிவரவுத் துறையால் வழங்கப்படும் சேவைகள்

அனைத்தும் வழங்கப்படும். அதாவது அவர்களை உண்மையான அகதிகளா

என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதற்காக சட்ட ஆலோசகர் சேவை

இலவசமாக வழங்கப்படும்.

Monday, January 14, 2013

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



இன்றைய தைத்திருநாளில்,

தமிழரைச் சூழ்ந்திருந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி,

சமாதானத்துடன் இன்பங்கள் நிறைந்து,

பதினாறு பேறும் பெற்று வாழ,

எல்லாம் வல்ல இறைவன்,

அருள் பாலிப்பாராக.

இன்றைய தினத்தில் தைப்பொங்கலைக் கொண்டாடும்,

இனிய தமிழ் அன்பர்களுக்கு,

எமது இதயம் கனிந்த,

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Thursday, January 3, 2013

கட்டிக்கரும்பே கண்ணா

Tuesday, January 1, 2013