Friday, September 28, 2012

கடவுள் வாழ்த்து - THE PRAISE OF GOD



அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

'A' leads letters; the Ancient lord
leads and lords the entire world


கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.


That lore is vain which does not fall
At His good feet who knoweth all


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

Long they live on earth who gain
The feet of God in florid brain


வேண்டுதல் வேண்டாமை இலான்எடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.


Who hold his feet who likes nor loathes
Are free from woes of human births.



இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.



பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

They prosper long who walk his way
who has the senses singed away.


தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

His feer, whose likeness none can find
Alone can ease the anxious mind.


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீத்தல் அரிது.

Who swims the see of vice is he
who clasps the feet of virtue's sea.



கோள்இல் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

Like senses stale that head is vain
Which bows not to eight-virtued Divine.


பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

The sea of births they alone swim,
who clench his feet and cleave to him.





Thursday, September 27, 2012

திரையில் தெறித்தவை



மயக்கமா கலக்கமா

ஏழை மனதை மாளிகையக்கி


இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு


கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

மண்குடிசை வாசல் என்றால்


தென்றல் வர வெறுத்திடுமோ?

மாலை நிலா ஏழை என்றால்

வெளிச்சம் தர மறத்திடுமோ?




Tuesday, September 25, 2012

Saturday, September 22, 2012

மறக்க முடியாத நினைவுகள்.



மாலதி தேவகி என்ற இரு சகோதரிகள் தமது நாட்டில் நடந்த யுத்தம்

காரணமாக தந்தையை அநியாயமாக பலி கொடுத்து தாயை தவற விட்டு

யாருமே இல்லாது வேறோர் நாட்டுக்கு அகதித் தஞ்சம் கோரிச் சென்று

குடிவரவுத்துறையின் தடுப்பு முகாமில் காத்திருந்தார்கள்.



தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மனநலங்களை பேணும்

அமைப்பொன்று அங்கு செயற்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் தினமும்

தடுத்து வைக்கப்பட்டவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களை

பரிசீலித்து அதில் உள்ள துயரம் நிறைந்த சம்பவங்களை தூக்கிப்பார்த்து

அவற்றினடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சிலரை அழைத்து

கதைத்து அவர்களது மனோபலங்களை கூட்டுவதற்கு முயற்சி

செய்வார்கள்.



இந்த வகையான பரிசீலனையின் வரிசையில் அடுத்த படியாக தேவகியும்

மாலதியும் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு

அழைக்கப்பட்டிருந்தார்கள்.



அது ஒரு விசாலமான அறை. நான்கு பக்கச் சுவர்களுக்கும் வெள்ளை

நிறத்திலான வர்ணம் பூசப்பட்டிருந்தது. நடுவில் ஓர் வட்ட மேசை

போடப்பட்டு அதில் மேசை விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அந்த விரிப்பிலே

புள்ளிமான் கலைமான் இரண்டும் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

அவற்றினைத் தொடர்ந்து இரண்டு குட்டி மான்கள் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த மேசையைச் சுற்றி நான்கு பச்சை நிறத்திலான பிளாஸ்ரிக்

கதிரைகள் போடப்பட்டு அக்கதிரைகளில் இருப்பவர்களின் பாவனைக்கென

நான்கு தண்ணீர்ப் போத்தல்களும் வைக்கப் பட்டிருந்தன.



இங்கு தான் மாலதியும் தேவகியும் அழைத்து வரப்பட்டு உட்கார

வைக்கப்பட்டிருந்தார்கள். சில நிமிடங்களில் மனநலம் பேணும்

அமைப்பைச் சேர்ந்த அம்மையார் ஒருவரும் மொழிபெயர்ப்பாளர்

ஒருவரும் உள்ளே வந்து மற்ற இரு கதிரைகளிலும உட்கார்ந்த

அம்மையார் தனது பெயர் திருமதி மாக்கிரட் என்றும் தாம் வந்த

நோக்கத்தையும் சொல்ல மொழிபெயர்ப்பாளர் அப்படியே மொழி

பெயர்த்தார்.



இவ்வாறே அம்மையார் சொல்லச் சொல்ல ஒரு சொல்லுத்தப்பாது

விளக்கமாக விபரித்துக் கொண்டிருந்தார் மொழிபெயர்ப்பாளர்.



" நீங்கள் உங்களது வீட்டைப் பற்றியும் அப்பாவின் இழப்பைப் பற்றயும்

அம்மாவை தவற விட்டதைப் பற்றியமே எண்ணிக் கவலைப்பட்டுக்

கொண்டிருப்பீர்கள்........

இரவு நித்திரைக்குப் போனாலும் அந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

திரும்பத்திரும்ப நினைவுக்கு வந்து பழைய வற்றை மீட்டும்....,...

நித்திரையும் வராது... அப்படியிருந்தும் உடல் அசதியில் தூங்கி விட்டாலும்

கனவுகளில் பழைய நினைவுகள் வந்து துன்புறுத்தும்............



இது மட்டுமல்லாமல் ஒரு செயலில் மனதை நிலை நிறுத்த முடியாமல்

மனம் தத்தளிக்கும்....



உதாரணத்துக்கு உங்கள் மொழி மேம்பாட்டுக்காக இங்கு நடக்கும்

ஆங்கில வகுப்புக்களில் கலந்து கொள்வீர்கள் ஆனாலும் உடல் வகுப்பில்

இருக்கும், ஆனால் மனம் உங்களது பழைய துயரங்களையும்

ஏக்கங்களையுமே நினைவு படுத்தி ஊசலாடும்................

இதனால் கிரகிக்கும் தன்மை இல்லாதிருக்கும்...............

திடீர் திடீரென அடக்க முடியாத கோபம் வரும்.... .....

சில வேளைகளில் குற்ற உணர்ச்சிகள் உங்களை தாழ்வு

மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும்..... ...............

அடிக்கடி ஞாபக மறதிகள் உண்டாகும்....................



இவ்வாறு பல கஸ்ரங்களுக்கு முகம் கொடுப்பீர்கள்.............

இவற்றை எல்லாம் திரும்பத்திரும்ப மனதில் ஓட விடுவதால் ஏற்படும்

பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.



புதியவர்களுடன் நட்பாக பழக முடியாதிருக்கும்..............

வேலைகள் தேடுவது கஸ்ரமாக இருக்கும்..............

ஆங்கில மொழி படிப்பது போன்ற இன்னும் பல விடயங்கள் உங்களுக்கு

கடினமாக இருக்கும்...........



இதனால் இதனை நீங்கள் மறக்க முற்பட வேண்டும். இவற்றை மறக்க

அல்லது குறைக்க காலையில் எழுந்து சிறிதளவேனும் உடற்பயிற்சி

செய்யுங்கள்.............

உடல் அசதியினால் இரவு நித்திரை விரைவில் வந்து விடலாம்.



அதே போல், மூச்சுப் பயிற்சி ஒன்றுள்ளது............

அதனை நீங்கள் செய்யலாம்.



அதாவது மூச்சை உள்ளிளுக்கும் போது ஒன்று...... இரண்டு.... மூன்று ... என

ஒரே இடைவெளியில் ஐந்து வரை எண்ணி மூச்சை இழுத்து அடி

வயிற்றில் சேமித்து அப்படியே ஒன்று தொடக்கம் ஏழு வரை எண்ணி

அடக்கி வைத்திருந்து பின்னர் ஒன்று தொடக்கம் எட்டு வரை எண்ணி

வெளியில் விட வேண்டும்.



வெளிவிடும் போது உங்களது துன்பங்கள் எல்லாம் வெளியில் செல்வதாக

கற்பனை பண்ணி மூச்சை வெளிவிட வேண்டும்.



இவ்வாறு நான்கு அல்லது ஐந்து தடவைகள் செய்யலாம். இப்படி

செய்வதால் உங்களது கவலைகள் துன்பங்கள் சிலதை குறைத்து மனதை

ஒருநிலைப்படுத்தலாம். இதனூடாக உங்களது துன்ப துயரங்களை

குறைக்க முயற்சி செய்யலாம்.



என்று கூறி முடித்த மொழி பெயர்ப்பாளர் அம்மையாரைப் பார்க்க .............



ஏதாவது கேள்வியிருக்கிறதா என்று அவர்களிடம் கேட்கும் படி

முன்பிருந்த சகோதரிகளைக் காட்டினார்.



மொழிபெயர்ப்பாளரும் அவர்களிடம் கேட்டார். ஆனாலும் இருவரும்

குனிந்த தலை நிமிராது மாலதி மேசைவிரிப்பிலிருந்த கலைமானைத்

தடவிக்கொண்டிருந்தாள்.



தேவகி அவற்றையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். மேசை விரிப்பில்

இருந்த மான்குட்டிகள் மீது இரண்டு மூன்று கண்ணீர்த்துளிகள் விழுந்து

கிடந்தன.



மொழிபெயர்ப்பாளர் கேட்டும் பதிலும் சொல்லாமல் நிமிர்ந்தும் பாராமல்

இருந்த சகோதரிகளை பார்த்து பரிதாபப்பட்ட மொழிபெயர்ப்பாளர்

மாலதியின் கையில் தட்டினார்.



" ஐயோ... அம்மா.... " என்று பலத்த சத்தத்துடன் வீறிட்டுத் துள்ளினாள்

மாலதி. அவளைப் பார்த்து தேவகியும் திடுக்கிட்டு " ஆ............." என்று கத்தி

விட்டாள்.



இதனை சற்றும் எதிர்பார்க்காத அம்மையார்,



" சரி நீங்கள் சென்று உங்களது அறையில் ஓய்வெடுங்கள்.. பிறகு மீண்டும்

சந்திப்போம்.... " என்று கூறி அனுப்பி விட்டார்.



வரும் வழியில் மாலதியும் தேவகியும் கதைத்துக் கொண்டு வந்தார்கள்...



" தேவகி.... அந்த மேசை விரிப்பிலிருந்த மான் கூட்டத்தைப் பார்க்க எங்கட

வீட்டு நினைவு தானெடி வந்தது........."



" ஓமக்கா..... எனக்கும் தான்... அந்த கலைமானைப் பார்க்க அம்மாவின்ர

நினைப்புத் தான் வந்தது....?



கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவாறே சொன்னாள் தேவகி.

Thursday, September 20, 2012

என் ஆசைகள்




உன் விழியில் என் முகம்பார்த்து

உன் உதட்டில் என் சுவையறிந்து

உன் மார்பில் என் தலையணைத்து

ஒரு கோடி ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டும்



என் வாழ்நாளில் உனை இந்த

உலகம் சுற்றிக் காட்ட வேண்டும்

உன் ஆசைக் கனவு அறிந்து

அவற்றை நனவாக மாற்றிட வேண்டும்



பொன் போலே உனை நானும்

பண்ணோடு இசை அமைத்து

எப்போதும் என்னுயிர்ச் சுருதி

ஆசையாக மீட்டிட வேண்டும்



உன் மடியில் தலை வைத்து

உன் முகத்தைப் பார்த்துக் கொண்டு

என் உதட்டில் புன்னகையிட்டு - நான்

ஒரு நொடியில் சாக வேண்டும்.



இவ்வாசை என்வாழ்வில்

மாறாமல் நடந்துவிட்டால்

இவ்வுலகில் பாக்கியசாலி

எனையன்றி யாருமில்லை.

Monday, September 17, 2012

எல்லாமே காலனிட்ட கட்டளை..!



பரந்தவான் பரப்பினிலே ஒளிர்கின்ற வெண்ணிலவே

பறந்தஎன் பெற்றோரை பார்த்திருந்தால் சொல்நிலவே

தங்கையைநான் உமைப்போலே காத்திடுவேன் பார்த்திருப்பேன்

உங்கள்பிள்ளை நானென்றும் உறுதியோடு வாழ்ந்திடுவேன்



பெற்றோரை இழந்தோரை அநாதையென்று சொல்கின்றார்

மற்றோரை இருப்போரை இயலாதவரென்று ஏசுகின்றார்

கற்றோரை படித்திருக்கும் முட்டாளென்று இகழ்கின்றார்

எப்பேரை இவர்களின்னும் விட்டாரென்று தெரியவில்லை.



வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசுமிந்த உலகினிலே

அலையாடும் வழியினிலே அசைந்தாடும் நாணல்போலே

அவரோடு சேர்ந்திருந்து வாழ்ந்திட வேண்டுமம்மா

எம்மோடு துணையிருந்து நல்லவழி காட்டிடம்மா.



சொல்வோரின் கதைகேட்டு சோர்ந்துபோகும் இதயம்

கல்லாகி விடுகிறது மறுநாளின் உதயம்

சொல்லாலே கொல்கிறார்கள் ஒவ்வொரு செல்களாய்

வேலாலே கொன்றிடலாம் ஒரேயொரு நொடியினிலே.



என்மைநீ தவிக்கவிட்டு ஏனம்மா சென்றுவிட்டாய்

நான்செய்த குழப்படிகள் உனக்கன்று பிடிக்கலையோ

தங்கைக்கு பேனாகொடுக்க மறுத்தது பொறுக்கலையோ

நானிப்போ நல்லபிள்ளை எம்மோடு வந்துவிடம்மா.



காலத்தில் எல்லாமே காலனிட்ட கட்டளைதான்

நாமென்ன செய்துவிட்டோம் உமைக்கொன்ற பாவியர்க்கு

காலமொரு பதில்சொல்லும் கயவர்செய்த கொடுமைகட்கு

துக்கங்கள் ஏதுமின்றி சுதந்திரமாய் உறங்கிடம்மா.

Friday, September 14, 2012

சிந்தனைக்கு

Wednesday, September 12, 2012

புரிந்திடாத அர்த்தங்கள்





பெண்ணவளின் பார்வையிலே பலகோடி அர்த்தங்கள்

பெருங்கணக்குப் போட்டாலும் புரிந்துவிடாது அதன் நுட்பங்கள்

இமைவேறு புருவம்வேறு அர்த்தங்கள் சொல்லும் - கண்

மணி அங்கு நடனமாடி கதை ஒன்று பேசும்



ஏக்கமாய் தூக்கமாய் நோமலாய் இருக்கலாம்

கோபமாய் சோகமாய் தாபமாய் இருக்கலாம்

நாணமாய் காதலாய் ஆசையாய் இருக்கலாம்

வேட்மைகயாய் வீரமாய் விவேகமாய் இருக்கலாம்



அவர்களாய் வாய்திறந்து சொல்லாத வரைக்கும் - நாம்

அறிந்து கொள்ள முடியாது அப்பார்வையின் அர்த்தத்தை

பரிந்து பரிந்து நாம் பசுமையாய்ப் பேசினாலும்

பகிரவே மாட்டார்கள் விரும்பாத அர்த்தத்தை



புரியாத புதிராய் இருக்கும் அப் பார்வையை

புதுமை இந்த உலகினிலும் புரியவே முடியவில்லை

இல்லாத ஒன்றினை கண்டுகொள்ளும் விஞ்ஞானிகள்

ஏனிதனைக் கண்டுகொள்ள முயற்சிகளை எடுக்கவில்லை



காலாதி காலமாய் கைமாறி வரும் அர்த்தம்

கனவிலும் வந்திடாது ஆண்களுக்கதன் நுட்பம்

ஏனிந்த வம்பு என்று ஒதுங்கியே நின்றிடாது

கனிந்த அவள் பார்வைக்கு அர்த்தங்கள் காணவேண்டும்



அப்பார்வை அர்த்தங்கள் இலகுவிலே புரிந்து விட்டால்

முப்புரமும் எரித்த அந்த சிவனாரே வந்தாலும்

அப்புரத்தில் உள்ள இளம் க(ன்)னியவளின் பார்வைக்கு

பதிலளிக்க வருவோரை யாரும் தடுக்க இயலாது.



Monday, September 10, 2012

சொற்பனம்



பால் வெள்ளை நிலவினிலே

பரந்த பெரும் பஞ்சணையில்

ஒய்யாரமாய் நான் இருக்க

ஓரக்கண்ணால் நீ பார்க்க

வெட்கத்தில் நான் தலை குனிய

உன்கரம் என் தலை கோதி

என் தலை நிமிர்த்திப் பார்த்து

இதழ்களில் உன் இதழ் பதித்து

ஊட்டி விட்டாய் உற்சாகத்தை

வெண்ணிலவும் வெட்கத்தில்

தன்னை மறைத்துக் கொள்ள

எமைச் சுற்றி கும்மிருட்டு

கருங்கலரில் படர்ந்திருக்க

இச்சாட்டில் நான் உன்னை

இறுக்கமாகக் கட்டித் தழுவ

தேடினேன் உன்னை என்

இரு கரம் கொண்டு,

புரண்டு வந்து விழுந்து விட்டேன்.

அப்போது

காலைச் சேவலும் கூவிற்று

கடிகாரத்தில் அலாரமும் அடித்திற்று

அப்போது தான் புரிந்து கொண்டேன்

நான் கண்டது கனவு என்று!!!!

Friday, September 7, 2012

எப்போது கூடுவது ஒரு கூட்டில்?




உன்னை நான் கரம் பிடித்து

ஊர் உலகம் கூட்டிச் சென்று

உன்னோடு நான் ஒன்றி இருந்து

ஊஞ்சலாடி மகிழ்வது எப்போது?



காலம் கரைகிறது தன் பாட்டில்

கயவர்கள் இருக்கிறார்கள் அவர் பாட்டில்

நாங்களும் இருக்கிறோம் எம் நாட்டில்

எப்போது கூடுவது நாம் ஒரு கூட்டில்?



கடவுளும் திறக்கவில்லை தன் கண்களை

முப்பொழுதும் தொழுகிறோம் அவர்களை

எப்போதும் நினைக்கவில்லை எங்களை

புகழ்கிறார்கள் மேன்(மென்)மையாக தங்களை.



நாம் இன்னும் நம்புகின்றோம் உம்மை

காத்துவிடும் என்றென்றும் எம்மை

சாத்துவோம் உமக்கு என்றும் மாலை

போற்றுவோம் எப்போதும் எம் வாழ்வில்!.

Wednesday, September 5, 2012

நீ என் பக்கத்தில் இருந்து விட்டால்...!


காலையிலே கண்விழித்து - உன்

கயல் விழிகளைப் பார்க்கையிலே

அணை பிரித்துப் பாய்கிறது

பெரு வெள்ளமாய் உற்சாகம்



சோர்ந்து போய் நானும் தொடர்ந்து படுத்திருக்கையிலே

உந்தனது கண்கள் எனக்குத் மட்டும் துணையாக, 

கட்டளை இடுகின்றன, எழுந்து பணி செய்வதற்கு,

உற்சாகத்துடன் விரைவாய் தொடர்கின்றேன் வேலைகளை.



சோகத்தில், கோபத்தில் சோர்ந்து போய் நானும்

படுக்கையில் விழுந்து துடித்திருக்கும் போது

உந்தனது புன்னகை வடிகாலாய் அமைந்து

எந்தனது உணர்வுகளுக்குத் தெளிவினைத் தருகின்றது.



உன் புருவங்களின் இடையினிலே அழகாக வீற்றிருக்கும்

வட்டமாக ஒட்டியுள்ள கருமை நிறப் பொட்டினிலே

குவிக்கின்றேன் ஒன்றாக்க, எந்தனது மனத்தினையும்

குவிப்பதற்கு எம்வாழ்வில் நன்நான்கு செல்வங்களையும்.



என்றுமே நீ எந்தன் பக்கத்தில் இருந்து விட்டால்

சோகமோ கோபமோ நெருங்கிவிட அஞ்சிவிடும்

காலத்தின் ஆசியுடன் உன்னை நான் கைபிடித்து

என்றும் உன்னை ஆக்கிடுவேன் இவ்வுலகின் ராணியாக.

Saturday, September 1, 2012

முட்டி நாமும் முயற்சி செய்வோம்




தாழ்வு மனப் பான்மை கொண்டு

தரணியில் சும்மா இருந்து விடாது

தொட்டாச் சிணுங்கி போல நாமும்

பட்டதற்கெல்லாம் சுருங்கி விடாது

தன் நகத்தை உடைத்து பட்டை தீட்டி

தன்னைத் தயார்படுத்தும் கழுகு போலே

முன்னுக்கு நாமும் வரவேண்டும்

விந்தைகள் பல படைத்திட வேண்டும்



வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்து - எம்

வழ்க்கைக் காலத்தைக் கரைத்து விடாது

வாய்ப்புக்களைத் தேடிச் சென்று

வரலாறு உலகில் எழுதிட வேண்டும்



"முடியாது" என்று உங்கள் மனதில்

மந்திரம் போல் உச்சரித்திருந்தால்

முடியால் தான் போய் விடும் - உங்கள்

முயற்சிகள் எல்லாம் முடிவினிலே.



"முடியும்' என்று நினைத்து நீங்கள்

முடிந்தவரை முயற்சி செய்தால்

கனியும் அந்த வேலை - உமக்கு

பாலில் பழம் நழுவியது போல்



எம்மை நாமே தாழ்த்திக் கொண்டு

எட்டி நாங்கள் இருந்து விடாது

முட்டி நாமும் முயற்சி செய்வோம்

தொட்டு விட அந்த வெற்றிக் கனிகளை