Monday, August 25, 2008

ஆசி வழங்கிடு ....!!!

வள்ளி தெய்வானையுடன்
பள்ளி கொள்ளும் முருகா..,
துள்ளி எழுந்து வா - பகைக்கு
கொள்ளி எடுத்து வைக்க....!

சொந்த வீட்டை இழந்து
பந்த பாசங்களைப பிரிந்து
கந்தக வெளி தாண்டி
குந்தியிருக்கிறோம் தெருவோரம்...!

கொடிய அரக்கர்கள் - எம்மை
துடிக்கத் துடிக்க கொல்ல
வெடி வெடித்துக் கொண்டு
பிடித்து வருகிறார் எம் தேசத்தை....!

இளக்காரம் தமிழன் என்றெண்ணி
பலாத்காரம் பண்ணி, படை அனுப்பி,
ஆரவாரமாக, ஆர்ப்பாட்டம் பண்ணி,
பூதாகாரமாக செய்கிறார், படையெடுப்பு....!

ஓடி ஓடி ஓய்ந்து விட்டோம்,
தேடிப் பகை அழிக்க - நாம்
கூடி வருகின்றோம் எல்லைகளில்
ஆசி வழங்கிடு, தமிழன் வெற்றி பெற்றிட...!

புசிப்பதற்கு ஏதுமின்றி
பசி பட்டினியோடு - நாம்
தூஸி படிந்த தெருவினிலே
நாசி காய படுத்திருக்கிறோம்....!

காற்றுக் குடித்து பசியோடு காத்திருக்கிறோம் - எம்
சோற்றுக்கே உலை வைத்த கொடியவனுக்கு
வேற்று நாடு உனது என்று விளக்கம் சொல்லி,
சாற்றிட உலகுக்கு , எம் தேசம் வேறென்று.....!

வெயில் மழை அனைத்தும் தாங்கி ,
கையில் துப்பாக்கியோடு காத்திருக்கிறோம்
பையில் போட்டு பொட்டலமாக அனுப்பி
தையில் எம் சுதந்திரம் கொண்டாட....!!!

Sunday, August 24, 2008

பிஷ்னஸ் லேடி ஆனாள் வசிகரி...!!!

வீட்டில் வசிகரி ஒரே பெண் பிள்ளை.. அதை விட முத்தவளும் கூட..!
இரண்டு தம்பிகள். அன்பான அம்மா, பாசமான அப்பா. அனால் வசிகரி
அப்பாவின் செல்லம்...!

அம்மா அப்பா வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். வசிகரியும்
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் வெவ்வேறு நாடுகள்.

அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு நாடுகள் என்பதால், அவர்களது
வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து இருந்த காலங்கள் என்பதை விட
பிரிந்து இருந்த காலங்களே கூடுதலாக இருந்தது.

இருவரது நாடுகளும் விசா எனும் பெரும் சுவரால் தடுத்து
வைத்திருந்தது. இந்த விசா பிரச்சனைகளை தீர்த்து விடலாம்
என்றாலும், அதற்காக அலைந்து திரிந்து பெற்றுக் கொள்ளும்
வல்லமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஏன் பொறுமையை
பெற்றிருக்கவில்லை என்றே சொல்லலாம்.

இந்த இருவரும் வாழ்க்கையில் சேர்ந்து இருக்காததால், பிள்ளைகளுக்கு
சரியான பாசத்தை ஊட்டி வளர்க்க முடியவில்லை, அவர்களுடன்
ஒன்றாக இருந்து வாழ முடியவில்லை என்ற வருத்தம், ஏக்கம்
என்பன இருந்தே வந்தது.

நாம் படும் கஸ்ரம் போல் எமது பிள்ளைகளுக்கும் விட்டு வைக்காமல்
அவர்களையாவது விரைவில் திருமணம் செய்து கொடுத்து
சந்தோசமாக இருப்பதை பார்க்க வேண்டும் என்ற ஆசை, ஆர்வம்
அவர்கள் மனதில் எப்போதும் இருந்தது.

வசிகரியும் படித்து பெரிய பிள்ளையாகி கல்யாண வயதையும்
அடைந்து விட்டாள். தேனில் ஈ மொய்ப்பது போல், பெண் கேட்கத்
தொடக்கி விட்டார்கள் உறவினர்கள்.

தனது பிடிவாதம், செல்லங்களால், தான் இருபது வயதின் பின்னர்
தான் திருமணம் செய்வேன் என திட்டவட்டமாக சொல்லி விட்டு
வேலைக்காக அப்பாவின் நாட்டுக்குச் சென்று கொம்பனி ஒன்றில்
வேலைக்குஸ் சேர்ந்தாள் வசிகரி.

அந்த கொம்பனிக்கு பலரும் வருவார்கள், போவார்கள். அதில்
குமரன் என்பவன் மீது அவளுக்கு ஒரு விதமான அன்பு
ஏற்பட்டிருந்தது. அதனை அவனிடம் சொல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது மனம்
அவளுக்கு.

Saturday, August 23, 2008

நன்றி ..நன்றி ... நன்றி.....!!!

பிறந்த தினமென்று
மறந்து இருந்த வேளையில்
பறந்து வந்த உன் அழைப்பொலி
திறந்தது என் நினைவினை...!

உன்னிடம் பெற்ற வாழ்த்து
எனக்கு கிடைத்த முதல் வாழ்த்து.
உனக்கு நன்றி சொல்கிறேன்
சுணக்கம் இன்றி இப்போதே....!

வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும்
நன்றிகள் பலகோடி.
வாழ்க்கை போராட்டத்தில்
வெற்றி நடை போட்டு - அனைத்தும்
பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி
உங்களின் வாழ்த்துக்களிற்கும் ஆசிகளிற்கும்
மீண்டும் ஒருமுறை நன்றிகள்
பல சொல்லி விடை பெறுகின்றேன்
நன்றி ..நன்றி... நன்றி....!!!

Saturday, August 9, 2008

OLIMPICS 2008 BEIJING










Friday, August 8, 2008

வாய் திறந்து சொல்லு....!!!

இனிய காலை வணக்கம்,
தனிய சொன்னேன் உனக்கு
கனிய, உந்தன் மனம்...!

வளியில் பார்த்த உன்னை,
வழித்து எடுத்து வந்தேன்.
பழித்து விடாமல், பார்த்தவர் யாரும்..!

விழியாளின் முகத்தை
களித்துப் பார்த்து - தினமும்
விழித்து இருக்கிறேன் ....!

பழைய மரத்தில்,
தழைத்த குருத்துப் போல,
விளைந்த பயிர் நீ...!

சளைக்கவில்லை எனக்கு - உன்னை
வளைக்க நான் பட்ட பாட்டை ,
தழைக்க வைக்க எம் காதலை...!

உன் பொன்னான வாய் திறந்து,
என் உள்ளம் குளிரும் வரை சொல்லு,
"நான் உன்னை விரும்புகின்றேன்".....!!!

Sunday, August 3, 2008

விதி வசத்தால்....!

அன்புள்ளவளுக்கு..!

விதி வசத்தால், உனைப் பிரிந்து
வடிக்கிறேன் கண்ணீர்.
மறக்கவில்லை, நான் உன்னை ....,
என்றும் நீ, என்னவள் தான்...!
எனக்காக நீ, வடித்த கண்ணீர் - என்
என் இதயத்தில் விழுந்து, துடித்த
வேதனையை புரிந்து கொள்கிறேன் நான்.
என்னடி செய்வது, என்னவளே ..?
விதி வலியது. - நவீன
நாகரீகமே கொடியது.
புரிந்து கொள்வாய் எனை ,
உன் கண், கலங்காது காக்க
என் கோன் முருகனை வேண்டுகிறேன்.
காத்திரு அவளை கவனமாக ..!
பாத்திரு அவளை பத்திரமாக...!!