Wednesday, November 25, 2015

களித்திருக்க ஆசை

 
வில்லங்கமாக உன்னை
வில் போல் வளைத்து
உன் நெற்றிப் பொட்டிலும்
முத்தான முளிக்கண்களிலும்
உப்பியிருக்கும் கன்னங்களிலும்
செக்கச் சிவந்த உதடுகளிலும்
வெண்சங்குக் கழுத்தினிலும்
உருண்டு திரண்டிருக்கும் மாங்கனிகளிலும்
அதன் கீழ் இடையிலும்
தொப்புளிலும்..., தொடையிலும்...,
உச்சி முதல் பாதம் வரை
ஒரு இடமும் தப்பாது
உச்சுக் கொட்டி
உம்மா கொடுத்து
கட்டியணைத்து
இருவரும் களித்திருக்க ஆசை. 

Tuesday, November 24, 2015

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,

பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,

இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்

அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்

(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,

தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை

நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்

வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.


Tuesday, November 17, 2015

என்னுள் சில ஆசைகள்







 

என் இதயத்தில் குடியிருக்கும்,
என்னுயிர் தேவதையே....,
என்னுள் சில ஆசைகள்,
உன்னோடு நான் இருக்கையிலே....!

உந்தனது கை கோர்த்து,
ஒரு பெருந் தெருவினிலே,
அனைவரும பார்த்து ரசிக்க,
உலவி வர ஆசை.....!

உந்தனது மடியினிலே
என் தலை வைத்திருந்து
மணிக்கணக்கில் சிரித்துப் பேசி,
மனமாற ஆசை......!

நீ தூங்கி இருக்ககையிலே,
மங்கிய நிலவொளியினிலே,
உன் வதனம் பார்த்திருந்து,
உன் அழகை ரசிக்க ஆசை......!

தலை குளித்து வரும் உனக்கு,
உன்கேசம் துவட்டி விட்டு,
மண மணக்க அகல் போட்டு,
தலை வாரிப் பின்னி விட ஆசை.....!

நீ கொள்ளும் கோபத்தில்,
உன் கண்களும் உதடுகளும்,
சொல்லத் துடிக்கும் ஒவ்வொரு வரிகளையும்,
தெளிந்தறிய ஆசை......!

உன் கொஞ்சல் கதைகள் கேட்டு,
உன் சிணுங்கல் நுணுக்கம் அறிந்து,
உன் ஆசைகளை நிறைவேற்ற,
எப்போதும் ஆசையோ ஆசை....!

உன் கண்ணோடு கண் சேர்த்து,
உன் இதயம் சொல்லும் வார்த்தைகளை,
அர்த்தம் பிசகாது அறிந்து கொண்டு,
ஓராயிரம் ஆண்டுகள் உன்னோடு வாழ ஆசை.....!


Wednesday, November 4, 2015

நடிப்பா...?