Saturday, June 15, 2013

மூத்தவன்.




" இதை ஏனணை வாங்கினியள்...?

எனக்கு தேவையானதை நான் வாங்குவன் தானே...?

ஏன் உங்களுக்கு உந்த தேவையில்லாத வேலை...?

உங்களுக்கு இந்தக் கால நாகரீகத்தைப் பற்றித் தெரியுமோ...?

இவ்வளவு காச சிலவழிச்சு வாங்கியந்திருக்கிறியள்...

இது எனக்குப் பிடிக்வேல்ல...

எனக்கு வேண்ணடாம்......

உங்கட அடுத்த பிள்ளையளுக்குக் குடுங்கோ...

இனி எனக்கொண்டும் வாங்க வெண்டாம். சொல்லிப்போட்டன்...."


என்று அம்மாவைத் திட்டிக்கொண்டு பாடசாலைக்குப் புறப்பட்டான் சிவாகரன்.


அன்னம்மாவோ எவ்வளவு ஆசையாக தான் உழைத்த பணத்தில் அவனுக்கென ஒரு சேட் எடுத்துக்கொடுக்க அவன் தாயாரைத் திட்டியதோடல்லாமல் அவளின் மனதையும் நோகடிக்கச் செய்து விட்டான். .


"உந்த வயலில, வெய்யில்ல, காஞ்சு, கூலிக்கு அரிவி வெட்டி, சூடடிச்சு ஆம்பிளை மாதிரி 40 பரப்பு வயல் விதைச்சு இப்படியெல்லாம் சேத்த காசில தான இவனப் படிப்பிச்சனான்.

படிப்பிக்கேக்க, அதுக்கு காசு, இதுக்கு காசு எண்டு 300/400 எண்டு கேக்கேக்க இந்த நாகரீகமெல்லாம் எங்க போனது...?

இப்பவும் அவன்ர உழைப்பில நான் வாங்கிக் குடுத்தனானோ...?

3 நாள் அரிவி வெட்டி, கூலி கிடைச்சாப் போல, பெரியவனுக்கு ஒரு சேட்டெடுப்பம் எண்டு எடுத்தன். அது பிழையோ...?

உவன் உந்தத் திட்டு திட்டிப் போட்டுப் போறான்...."

Saturday, June 8, 2013

நொந்து போன பிஞ்சு



காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பூங்கா, கவலையாகவே காணப்பட்டாள். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கோ, பிள்ளை ஏன் கவலைப் படுகின்றாள் என்று தெரியாது தவித்துக் போனாள்.

பூங்காவைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்ட கண்ணம்மா,

"ஏனம்மா கவலையாயிருக்கிறீங்கள்...?
உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அம்மா அப்பாவுக்குச் சொன்னால் தானே தெரியும்...?
பிள்ளை கவலையாயிருந்தால் அம்மாவுக்கும் தானே கவலையாயிருக்கும்...."
என்று கண் கலங்கினாள்.

அவளது கண் கலங்கியதும் அந்த எட்டு வயதேயான பிஞ்சு பூங்காவின் கண்கலங்கி கண்ணீர் வழிந்தோடியது. தாயின் கண் கலங்கக் கூடாது என்பதற்காக தனது கவலையைச் சொல்லத் தொடங்கினாள்.

" நான் நப்பிளான்ட் ரெஸ்ற் எழுத மாட்டேன் அம்மா..."
 என்றாள் பூங்கா

" ஏன் பிள்ளை எழுத மாட்டீங்கள்.....?
நீங்கள் எழுதி சித்தியடையாவிட்டாலும் பறவாயில்லை....
எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.
ஆனால் பிள்ளை அந்த ரெஸ்ரை எழுதினால் தானே, அது கஸ்ரமானதா அல்லது சுலபமானதா என்று தெரியும்...?
அப்போ தானே அடுத்த ரெஸ்ருக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்...? "
என்றாள் தாய் கண்ணம்மா.

Wednesday, June 5, 2013

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

 யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணு நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே