Monday, December 31, 2012

2012



2012

என் வாழ்வின்

துயரங்கள் சுமந்த

சுதந்திரம் இழந்த

இருண்ட பக்கங்கள் நிறைந்த காலம்.


காலனுக்கும் தெரியவில்லை

ஏன் தடுப்பில் உள்ளேன் என்று

காதலிக்கும் புரியவில்லை

சிறையிருந்து ஒன்றும் செய்யலாகாதென்று

Sunday, December 30, 2012

ஆயிரம் மலர்களே மலருங்கள்...

Thursday, December 27, 2012

என் உதடுகள் மௌனமாகின்றன.



நான்

வாய் திறந்து சொல்வதெல்லாம்

வால் வைத்து விளங்கிக் கொண்டு

வாரோட்டம் ஓடி வந்து

பாயுதென்மேல் மறுமடியும்


எனக்கொன்றும் விளங்கவில்லை

எப்படித்தான் கதைப்பதென்று

எப்படி நான் கதைத்தாலும்

தப்படியாத்தான் புரிகிறது அனைவருக்கும்

Tuesday, December 25, 2012

Happy Christmas

Wednesday, December 19, 2012

பூங்காற்று திரும்புமா..

என்னைப் பாராட்ட

மடியில் வைத்து தாலாட்ட

எனக்கொரு தாய் மடி

கிடைக்குமா?



Saturday, December 8, 2012

SHIATSU SELF MASSAGE

Wednesday, December 5, 2012

இன்னும் நான் யாரிடம் மண்டியிட..???



நான் கடவுளிடம் மண்டியிட்டேன்

என் துன்பங்களுக்கு ஒரு முடிவைத் தருவதற்கு


ஆட்கடத்தல் காரரிடம் மண்டியிட்டேன்

அனுப்பும் கூலி பெருந்தொகையானதால், குறைப்பதற்கு


படகோட்டியிடம் மண்டியிட்டேன்

உயிருடன் ஏதோவொரு கரை சேர்ப்பதற்கு

Sunday, December 2, 2012

பணம் என்னடா பணம் பணம்


பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்


என்ன வழி நான் செய்வது

நல்ல வழி நான் செல்வது

இரக்க மனத்தைக் கெடுக்கும் அரக்கன்

பணம் பணம் பணம்.