Monday, December 31, 2012

2012



2012

என் வாழ்வின்

துயரங்கள் சுமந்த

சுதந்திரம் இழந்த

இருண்ட பக்கங்கள் நிறைந்த காலம்.


காலனுக்கும் தெரியவில்லை

ஏன் தடுப்பில் உள்ளேன் என்று

காதலிக்கும் புரியவில்லை

சிறையிருந்து ஒன்றும் செய்யலாகாதென்று


என்னால் முடியவில்லை - அவர்கள்

கேள்விகட்க பதிலளிக்க


காலத்தின் கட்டாயத்தினால்

சட்டத்தின் இருண்ட பக்கங்களினால்

இரும்புக்கம்பி வேலிகளுக்குள்ளே

அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டுள்ளேன்.


திறீ ஸ்ரார் வீடு

உண்பதற்கு சோறு

ஓய்வெடுக்க பீச்சு

ஓதுவதற்கு கோவில்

ஆங்கிலத்தில் வகுப்பு

அரைகுறையான விளக்கம்

காலடியில் மெடிக்கல் - அதில்

மென்டல் ஹெல்த்துக்கு முன்னுரிமை

அரைக்காசு பெறா உடுப்பு

அரையாண்டுக்கு ஒருமுறை

ஐயோ என்றால் ஆட்கள்

அடக்குவதற்கென வேறு

வெளிர் நீல உடையில் ஒன்று

கரு நீல உடையில் ஒன்று

காக்கிச் சட்டை போட்டவரும்

அப்பப்போ நுழையலாம்

இத்தனையும் பாத்தாச்சு

ஆனாலும் இன்னும்

எத்தனை காலம் தான்

இந்த நரகத்திலே இருந்து

நலிந்திட வேண்டுமோ..??

கெஞ்சிக்கேட்டுப் பாத்தாச்சு

கிஞ்சித்தும் இரங்கவில்லை

பெஞ்சினிலே இருப்பவர்கள்

அடுத்த அடி - என்னை

நஞ்சூட்டி அழிப்பது தான்...!!!

Print this post

No comments: