Wednesday, December 24, 2014

Merry Christmas


Tuesday, July 8, 2014

முருங்கையின் பயன்கள் Moringa oleifera

 




Moringa oleifera is a tree whose name is derived from the Tamil word Murungai, otherwise popularly known as drumstick tree in India. The moringa tree is fast growing, drought resistant, native to the southern foothills of the Himalayas in northwestern India. Today moringa is widely cultivated throughout Africa, Central and South America and many parts of Asia. But the most amazing fact of this plant is its nutrient content: from the roots to the sap, every part of the plant yields some health benefits. It has 46 types of antioxidants, 36 kinds of anti-inflammatories and a wealth of other beneficial compounds.

Morigna oleifera has been used by the traditional Indian medical system of Ayurveda as early as 150 BC to treat a wide variety of health problems such as arthritis, heart disease, bacterial, fungal and viral infections. It is difficult to avoid superlatives when describing Moringa’s value as a food source. It is rich in protein, calcium, magnesium, potassium, iron vitamin A and vitamin C. The leaves of this plant have high levels of a compound called beta-sitosterol known to lower cholesterol. Further, researchers have found that leaves have 2009mg of calcium per 100gm which is more calcium that 6 cups of milk. It also has 28mg of iron per 100gm- that is more that 7 oz of chicken liver. The flowers contain antioxidant substances called flavonids, such as quercetin, kaempferol, rhametin, isoquercitrin, and kaempferitrin, The plant’s root is rich in moringinem alkaloids that appear to have cardiac stimulant and hypertensive effects. It also has antibacterial and antifungal properties. The seeds are anti-hypertensive and help protect the liver. Moringa gum is used as an abortifacient, to treat headaches, fever, dysentery, asthma and intestinal cancer.

Effective for:

Sunday, June 8, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 3.


வீடு வந்ததும் சைக்கிலை ஸ்ராண்டில் விட்டு விட்டு, அவனை உள்ளுக்கு வருமாறு சொல்லி விட்டு, 'கார்த்திக் வீட்டுக்கு வந்திருக்கிறான்' என்ற சந்தோசத்தில் துள்ளிக்கொண்டு


" அம்மா....
அம்மா.... யார் வந்திருக்கிறதெண்டு ஒருக்கா வந்து பாருங்கோவன்...."
 
என்று வீட்டுக்குள் ஓடினாள்.


" என்னடி யார் தான் வந்திருக்கிறது....."

என்று குசுனியில் இருந்து வெளியில் வந்தார் வசந்தா ரீச்சர்.


" .... ராகவனா......
வாடா.....
நல்லா இருக்கிறியாடா.... ?
நல்லா வளர்ந்து, மீசையும் அரும்புது..... !
இனி ரோட்டால போற பெட்டையள், உன்னைத் தாண்டிப் போறது கஸ்ரம் தான் ....."

என்று தமாசாகப் பேசிக்கொண்டு வந்தார்.


ரீச்சர் வரவும் கதிரையில் இருந்து எழுந்து நின்ற கார்த்திக்

" வணக்கம் ரீச்சர் ...
நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்...."

என்று பௌவியமாகக் கேட்டான்.


" நாங்கள் நல்லா இருக்கிறோம்.....
இது பள்ளிக்கூடம் இல்லை.... எங்கட வீடு ....
இரு......”

என்று அவனை கதிரையில் இருக்கச்சொல்லிவிட்டு, தானும் அவன் பக்கத்தில் அமர்ந்தார் ரீச்சர்.


" உன்னைப்பற்றிக் கதைக்காத நாளே இல்லை...
தாரணி தான் உன்னை மறக்கேல்லை....
தான் கணிதத்திலயும் மற்ற பாடங்களிலையும் நல்ல மாக்ஸ் எடுக்கக்க காரணம் நீ தான் எண்டு வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
நீ என்னட்டையும் படிச்சனி எண்டு சொல்லப் பெருமையாகத் தான் கிடக்கு...."

என்று சொன்ன ரீச்சர்

" தாரணி.... இஞ்சை வந்து ராகவனோட கதைச்சுக் கொண்டிரு...
நான் தேத்தண்ணி பொட்டுக் கொண்டு வாறன்...."

என்று எழுந்தார்.


" நீங்கள் கதைச்சுக் கொண்டிருங்கோ....
நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் ..."

என்று ஆர்வம் பொங்கச் சொல்லி , தேநீர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டாள் தாரணி.


" என்னடா இது புதுமையாகக் கிடக்கு...
அப்படியெண்டா கார்த்திக்கை நெடுகலும் வரச்சொன்னா, நீயும் தேத்தண்ணி போட்டுப் பழகி விடுவாய்... "

என்று நக்கலாகச் சொல்லி கொக்கட்டம் போட்டுச் சிரிக்கவும், கார்த்திக்கும் சிரிக்க குசுனிக்குள் இருந்து தாரணியும் சிரிச்சுக்கொண்டே,


" அப்போ அவரை வரச்சொல்லுங்கோ...
நான் தேத்தண்ணி மட்டுமில்ல சமையலையும் பழகி விடுகிறேன்."

என்று தனது மனதிலுள்ள ஆதங்கத்தை சூசகமாகச் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கு தலையே சுற்றியது.

தாயும் மகளும் எவ்வளவு இயல்பாகத் தன்னை வைத்து நக்கலடிக்கிறார்கள் என்றும், முதலே பேசி வைத்தது போன்று கதைப்பதையும் நினைத்து வியப்படைந்தான்.


பிறகு ரீச்சர்

" உனது படிப்புகளெல்லாம் எப்படியப்பா போகுது கார்த்தி....?. "

என்று கேட்டார்.

 
" நான் படிப்பை விட்டுட்டு வேலை செய்யறன் ரீச்சர்...
அதெல்லாம் ஒரு பெரிய கதை....
அதை விடுங்க ரீச்சர்....."

என்றான் கார்த்திக் சலிப்புடன்.


அந்த நேரத்தில் தேத்தண்ணியுடன் வந்த தாரணி,


" சரியா... பாரதக் கதை சொல்லத் தொடங்கியாச்சோ....
என்ன தான் ரெண்டு பேரும் கதைப்பியளோ தெரியாது....
திரும்பியும் அவரை அழ வைக்கப் போறியளோ.....?
அதை விடுங்கோம்மா....."

என்று சொல்லி கதையை நிறுத்திவிட்டு, இருவருக்கும் தேநீரைக் கொடுத்தாள்.

" சரி கார்த்தி, இன்னும் கொஞ்ச நேரத்தில் சமையல் முடிஞ்சிடும். இருந்து சாப்பிட்டுட்டுப் போ...
உனக்குப் பிடிச்ச கீரையும், பைத்தங்காயும் தான் கறி...."

என்று சொல்லி விட்டு குசுனிப்பக்கம் போனார் ரீச்சர்.


இதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக், தாரணி தன் திறமையால் தாயாரின் கதையை நிறுத்தியதையும், தாயும் அதைக் கேட்டு பணிவாக இருக்கிறதையும் நினைத்து அவ்வீட்டில் தாரணிக்கு இருந்த செல்வாக்கை எண்ணி வியந்து எப்படியும் தாரணி தன் கலியாணத்துக்கு சம்மதம் பெற்று விடுவாள் என்று தன்னுள் புழகாங்கிதமடைந்தான்.

Sunday, June 1, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 2.



மறுநாள் எழுந்து குளித்து வெளிக்கிட்டு தாரணியை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தவாறு 9 மணியளவில் பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தான்.


அதற்கு முன்னரே தாரணி அங்கு வந்து காத்திருந்தாள்.

கார்த்திக்கைக் கண்டதும் எழுந்திருந்தாள்.


அவன் தனது பழைய வகுப்பினுள் வந்து, முன்னர் இருந்த இடத்தில் இருந்த போது, அவனருகில் வந்த தாரணி, அவனது கை மேல் தன் கை வைத்து கண் கலங்கினாள். அவள் கண் கலங்கியதும், கார்த்திக்கும் கண் கலங்கி விட்டது.


கண்களைத் துடைத்தவாறே தாரணி துவக்கினாள்,


" கார்த்தி,

எமது பழைய அன்பையும், நினைவுகளையும் நினைத்து,

அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவதற்காகத் தான்,

உங்களை பள்ளிக்கூடத்துக்கு வரச்சொன்னேன்.

நான் விட்டுக்கு வந்த போது,

குடும்பச்சுமை, பொறுப்பு என்று பெரிய கதை எல்லாம் கதைச்சீங்கள்.

ஆனாலும், நீங்கள் என்னைக் கடைக்கண்ணால் அடிக்கடி பாத்ததை கவனிச்சன். அதிலிருந்து,

உங்களுக்கும் என்மேல இருந்த காதல் குறையேல்லஎண்டு தெரிஞ்சு கொண்டேன்.

அதை விட, அங்க உங்கட அப்பாவுக்கு முன்னால கதைக்கச் சங்கடப் பட்டதையும் பார்த்தன்.

அது தான் இஞ்சை வரச்சொன்னேன்.....

இந்த இடம் உங்களுக்கு என்னத்தை ஞாபகப்படுத்துகிறது...

சொல்லுங்கோ பாப்பம்.......?

எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம்,

நீங்க இந்தஇடத்தில, என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்ததும்

அதற்குப் பதிலாக நான் உங்களுக்குக் குடுத்ததும் தான் ஞாபகம் வருகுது...."


என்று வாய் ஓயாது தனது நினைவுகளை சொல்லிக்கொண்டே போனாள்.


கார்த்திக் எதுவும் பேசவில்லை, கேட்டுக்கொண்டே இருந்தான். அதனால் தாரணியே தொடர்ந்து பேசினாள்.


" நான் வரும் போது உங்களுக்குக் காட்ட வேணுமெண்டு என்ரை றிப்போட் எடுத்துக் கொண்டு வந்தனான்.

இதைப் பாருங்கோ...

நான் இப்ப கணிதத்தில் 99 மாகஸ் எடுத்திருக்கிறேன்.

அதுக்கு நீங்கள் தானே காரணம்.

அந்த மாமரத்துக்குக் கீழ் இருந்து,

நீங்க எனக்குச் சொன்ன ஆறுதல் வார்த்தைகளும் அதன் பின்னர் நீங்கள் என்மீது எடுத்துக்கொண்ட அக்கறையும் தானே காரணம்.

எனது ஏக்கங்களையும், வலிகளையும் சுமந்து தள்ளாடிய போது,

அவற்றைக் குறைக்கும் சுமைதாங்கியாக, நீங்கள் இருந்தது தான், என்னை இந்த நிலைக்கு உயர்த்தி விட்டிருக்கிறது.

அதன் பின்னர் கிடைத்த பெருமையும், புகழ்ச்சியும் என்னை மேலும் உயர வைத்தது. அதை விட,

அதன் பின்னர், எனது குடும்பத்திடம் இருந்து கிடைத்த பரிவு தான் பிரதான காரணமாக இருந்தது.

இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது நீங்கள் தானே. ....."


என்று பெருமூச்சு விட்டாள் தாரணி.


இப்போ கார்த்திக் கதைக்கத் தொடங்கினான்.


" தாரணி .... !

இவற்றையெல்லாம் நீ சொல்லும் போது எனக்கு ஆறுதலாகவும் சந்தோசமாகவும் தான் இருக்கிறது.

Thursday, May 29, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 1.



நான் கடைக்குப் போய்ச்சேரும் வரைக்கும் முதலாளி கடைக்கு வந்திடக் கூடாது.... அம்மாளாச்சி.... என்று அம்மாளை வேண்டிக்கொண்டு நேரத்தைப் பார்த்துப் பார்த்து சைக்கிளை ஊண்டி விளக்கினான் கார்த்திக்.


போகும் வழியில் தன்னுடைய வயதுப் பிள்ளைகளும் சைக்கிள் கரியலில் மூட்டைக் கணக்கில் புத்தகங்களை வைத்துக் கொண்டு போவதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி நகரும் போது தான் அவனது பழைய நினைவுகள் எட்டிப்பார்க்கத் தொடங்கின.


அப்போது அவனுக்கு வயது 13 தான் ஆகியிருந்தது. ஆண்டு 7 படித்துக் கொண்டிருந்தான். படிப்பில் நல்ல கெட்டிக்காரன். என்னத்தை வகுப்பில் விளங்கப்படுத்தினாலும் கற்பூரம் மாதிரி ஒரே தடவையில் வேகமாகப் பற்றிக் கொள்ளுவான். இதனால் வகுப்பாசிரியர் வசந்தா ரீச்சருக்கும் தமிழ்-சமயச் ரீச்சர் மிஸ்.நாகேந்திரராசாவுக்கும் அவன் மீது நல்ல கெட்டிக்காரன் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டதுடன் அவன் மீது மிக்க அக்கறை செலுத்தினார்கள்.


இதனால் வசந்தா ரீச்சர் தனது மகள் தாரணிக்கு எல்லாத்துக்கும் கார்த்திக்கையே  உதாரணம் காட்டி ,

" அவனைப் பார்......
அவன் ஒரு கூலித்தொழிலாளியின்ர மகன்.
ஆனால் அவன் வீட்டை போய் புத்தகம் திறந்து படிக்க வீட்டில் விளக்குக்கு எண்ணை இருக்குமோ தெரியாது.
ஆனால் பள்ளிக்கூடத்தில கெட்டிக்காரனாக இருக்கிறான்.
ஆனா உனக்கு எல்லா வசதிகள் இருந்த போதும்,
கேட்டுப்படிக்க ஆட்களிருந்தும்,
நீ ஒரு ரியூப் லைட் மாதிரி இருக்கிறாய்..."

என்று எப்போதும் திட்டுவார். கணக்கில் பிழை விட்டால் சில வேளை நல்ல பூசையும் கொடுத்து விடுவார்.


இப்படி தாயரிடம் திட்டு வாங்கும் தாரணி இனி அம்மாவிடம் திட்டு வாங்கக் கூடாது என்று நினைத்து தீவிரமாகப் படிக்கத் தொடங்கினாள். ஆனாலும் அவளால் முடியவில்லை. "பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும் " என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும் தாயாரின் "படி படி " என்ற நச்சரிப்பை தடுக்க என்ன வழி என்று யோசித்து கடைசியில் தெரியாதவற்றை  கார்த்திக்கிடமே  கேட்டுப் படிப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.


இதனால் கார்த்திக்குடன் தேவையின்றிக் கதைக்காத தாரணி, சேர்ந்து பழகிக் கதைக்கத் தொடங்கினாள். கதைக்கும் போது தனக்கு தாயாரால் விழும் பேச்சுக்களையும் காரணத்தையும் சொல்லி கவலைப்படுவாள். ஒரு நாள் அவன் முன்னால் அழுதும் விட்டாள்.


என்ன செய்வதென்று தெரியாது தவித்த கார்த்திக்

" இஞ்சருமப்பா தாரணி,
நீர் அழாதையும்...
நீர் குறை நினைக்கேல்லையெண்டா,
உமக்கு ஏதாவது டவுட் இருந்தால் என்னைக் கேளும்......
எனக்குத் தெரிஞ்சவரையில் சொல்லித் தாறேன். ….
ஒவ்வொரு அம்மாவுக்கும்,
தன் பிள்ளை நல்லா படிக்க வேணும் என்று தானே விரும்புவா .....
நீர் ஒன்றுக்கும் கவலைப்படாதையும்....
எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு இரும்......."

என்று ஆறுதல் சொன்னான்.


இந்த ஆறுதல் வார்த்தைகள் தாரணிக்கு எப்போதும் எங்கும் கிடைத்ததில்லை. தனது வாழ்க்கை ஆறுதலற்ற ஒரு இயந்திர ரீதியாகவே அமைந்திருக்கிறது என்று பெருமூச்சு விட்டபடி தனது சட்டைக் கொலரினால் இரண்டு கண்களையும் துடைத்துவிட்டு அவனுக்கு முன்னால் அழுது விட்டதை நினைத்துவெட்கத்தில் அவனைப் பார்க்காமலேயே
 
" வகுப்புக்குப் போவம் வாரும்....."

என்று இருவரும் சேர்ந்து வகுப்புக்குச் சென்றார்கள்.


இதன் பின்னர் தாரணி தனது சந்தேகங்களை கார்த்திக்கிடம் கேட்கத் தொடங்கினாள். அவனும் அவற்றை எவ்வளவு சுலபமாக விளங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு சுலபமாக விளங்கப்படுத்தினான். அவன் மீதிருந்த அன்போ அல்லது அவன் விளங்கப்படுத்திய முறையோ என்னவோ தெரியவில்லை. தாரணிக்கு அவன் விளங்கப்படுத்தியது ஒவ்வொன்றும் பசுமரத்தில் ஆணியடித்தது போல் நன்றாகவே பதிந்தது. பரீட்சைகளிலும் வழமையை விட கூடுதல் புள்ளிகள் வாங்கத் தொடங்கினாள்.


இதனால் வசந்தா ரீச்சரும் தாரணியையும் கார்த்திக்கையும் வகுப்பில் பாராட்டிப் பேசத் தொடங்கினார். எல்லோருக்கும் முன்னால் இருவரையும் அழைத்து
 
"இவ்விருவரது திறமைகளையும், கொள்கைகளையும், ஆர்வத்தையும்,
 நீங்களும் பின்பற்றி முன்னுக்கு வர வேணும்.....
இது தான் உங்கள் வகுப்பாசிரியர் என்ற முறையில் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது.......
இது தான் நீங்கள் படிப்பிக்கும் ஆசிரியருக்கு கொடுக்கும் மதிப்பு......,
மரியாதை.......,
தட்சணை எல்லாம்...."

என்று மனமுருகிப் பேசினார்.


இப்படி அவர் பேசும் போது வகுப்பிலுள்ளவர்கள் தாரணி, கார்த்திக்கின் மீது பொறாமைப்பட்டு, அவர்களைக் குழி பறிப்பதற்காக நேரத்தைச் செலவு செய்தார்களேயொழிய, தம்மை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. ஆனால் வகுப்பறையில், எல்லோர் முன்னிலையிலும், தன்னை அம்மா பாராட்டும் போது, தாரணிக்கு, கார்த்திக் மீது மதிப்பும், ஒருவித எல்லை கடந்த பாசத்தையும் ஏற்படுத்தியது.


" நான் ஒரு மொக்காகத் தானே இருந்தேன்.
கார்த்திக்குடன் சேர்ந்து கதைத்து அவன் விளங்கப்படுத்தியதால் தானே என்னையும் அம்மா பாராட்டுகிறார்...
திடீர் திடீரென்று கட்டியணைத்துக் கொஞ்சுகிறார்.
முதலில் என்றால் வீட்டுக்குப் போனவுடன் படி படி என்று நச்சரிப்புத்தான்.
ஆனா இப்போ எங்க போனாலும் என்னைப் பற்றித் தான் கதைப்பார்.....
இதுக்கெல்லாம் காரணம் கார்த்திக்தானே....? "

என்று தனது மனதினுள் நினைத்து,
தனக்குக் கிடைத்த பெருமைக்கும், மதிப்புக்கும்,
கார்த்திக்கே காரணமென்று நம்பினாள்.


இதேபோல் தாரணி தன்னிடம் வந்து தனது துன்பங்களைச் சொல்லி அழுதது கார்த்திக்கும் அவள்மீது ஒரு அனுதாபத்தையும் போகப்போக ஒருவித பாசத்தையும் ஏற்படுத்தியிருந்தது.


இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் வசந்தா ரீச்சருக்கு தலைநகரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகிச் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பிரிவு நாளும் வந்தது. பிரியாவிடை என்ற பெயரில் ஒரு இழவு வீடு தான் நடந்தது என்று சொல்லலாம். ஏனெனில் 16 வருடமாக படிப்பிச்ச ரீச்சர் மாற்றலாகிப் போகிறார் என்று மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு விதமான பாச விடுப்பை ஏற்றுக் கொள்ள முடியாததால் ஆசிரியர் மாணவர் என்ற வேறுபாடின்றி அழுது கொண்டிருந்தார்கள்.


ஆனால் கார்த்திக்கும் தாரணியும் ஒருவருடைய கையை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தார்கள். பின்னர் தமது வகுப்படைக்குப் போய் தமது மேசைகளில் இருந்து பார்த்தார்கள். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து பலமாக அழுதார்கள். பின்னர் தாரணி சொன்னாள்,

" கார்த்தி,
அம்மா பள்ளிக்கூடம் மாறும் போது என்னையும் சேர்த்து மாத்துவா என்று நினைக்கேல்ல...
ஆனால் பள்ளிக்கூடம் மாறினாலும் எனது மனசு மாறாது......
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு...
நாங்க வளந்தாப்பிறகு ரெண்டு பேரும் தான் கலியாணம் செய்ய வேணும். ….
நான் உன்னைத் தான் கலியணம் பண்ணுவேன்......
உனக்கு என்னை பிடிச்சிருக்கா......?”

என்று கேட்டாள்.

" எனக்கும் உன்னைத் தான் பிடிச்சிருக்கு......
ரெண்டு பேரும் கலியாணம் செய்வோம்...."

என்று சொல்லி தாரணியை மீண்டும் இறுகக் கட்டிப்பிடித்து அழுதவாறே
அவளது கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டான்.
பதிலுக்கு அவளும் முத்தமிட்டாள்.

Tuesday, May 27, 2014

Advice from a Tree


Sunday, May 18, 2014

துணை தேடும் இணைகள்

 


" உது மாதிரியான விடயங்கள் தான் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் கிளறுது....

நானே கஸ்ரப்பட்டுத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறன்........

பிறகு வேலையாக இருக்கிறியோ.. சாப்பிட்டியோ என்று கேட்டுக் கொண்டு...

ச்ச்செ......"

என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள் சூரியா, தன் கணவர் சந்திரனிடம்.

 

சந்திரன் அகதியாக தஞ்சம் கோரி அவுஸ்ரேலியத் தடுப்பு முகாமில் 3 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றான். அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் உறவினர்களைத் தொடர்பு கொண்டு கதைப்பதற்காக அவனுக்கு வாரத்துக்கு 3 தொலைபேசி அட்டைகள் வழங்கப்படுகின்றது.

 

அதன் பிரகாரம் அவனது பெற்றோர், மனைவியின் பெற்றோருக்கு வாரமொரு முறையும் சூரியாவுக்கு தினமும் அவளது நேரம் பிற்பகல் 7 மணிக்குத் தொடர்பு கொள்ளுவான். அப்போது அவனது நேரம் 10 மணியாகி விடும் என்பதால் அவனது அறையில் வசிப்பவர்கள் எல்லாம் தூங்கிவிடுவார்கள்.

 

அவர்களது நித்திரை கலைந்து விடக்கூடாது என்பதற்பாக சற்று மெதுவாகவே தொலைபேசியில் பேசுவான் சந்திரன். அதேவேளை அவனுக்கு வழங்கப்படும் தொலைபேசி அட்டையும் மிகத்துல்லியமற்ற சம்பாசனைகளையே அனுப்பும். அப்போது கேட்பவரகளுக்கும் கொஞ்சம் கஸ்ரமாகத் தான் இருக்கும்.

Saturday, May 3, 2014

Benefits of Dandelion and Dandelion Root

 

                 
  


11_health_benefits_of_dandelion_and_dandelion_root_pic
 
Dandelion is most often thought of as a pesky weed that takes over in lawns, gardens, meadows, and even pops up in cracked sidewalks and pavement. It is invasive and pervasive. Lucky for us, it is also an excellent food and herbal medicine that anyone can find, grow, and put to use.
Dandelion is a very rich source of beta-carotene which we convert into vitamin A. This flowering plant is also rich in vitamin C, fiber, potassium, iron, calcium, magnesium, zinc, and phosphorus. It is a good place to get B complex vitamins, trace minerals, organic sodium, and even vitamin D. Dandelion contains protein too, more than spinach. It has been eaten for thousands of years and used to treat anemia, scurvy, skin problems, blood disorders, and depression.
Seeds grow readily in your garden, planter boxes, or pots. If you collect them wild, try to choose ones you know have not been subjected to pesticides, fertilizers, and other chemicals. The ones in your lawn are not the best. Pick them instead from a mountain meadow or abandoned lot. Seeds can be bought or you can gather them from the familiar puff balls you see each summer. Dandelion leaves can also be found fresh in some health food markets or as a freeze-dried herb. Dandelion tea, capsules, and tinctures are also available.
 
Digestive Aid – Dandelion acts as a mild laxative that promotes digestion, stimulates appetite, and balances the natural and beneficial bacteria in the intestines.
 
Kidney – This weed-like superfood is a diuretic that helps the kidneys clear out waste, salt, and excess water. This inhibits microbial growth in the urinary system too.
 
Liver – Dandelion has been shown to improve liver function by removing toxins and reestablishing hydration and electrolyte balance.
 
Antioxidants – Every part of the dandelion plant is rich in antioxidants that prevent free-radical damage to cells and DNA, slowing down the aging process in our cells.
 
health_benefits_of_flowers_imageCancer – Dandelion acts against cancer to slow its growth and prevent its spread. The leaves are especially rich in the antioxidants and phytonutrients that combat cancer.
Diabetes – Recent animal studies show promise that dandelion helps regulate blood sugar and insulin levels.
High Blood Pressure – As a diuretic dandelion increases urination which then lowers blood pressure. The fiber and potassium in dandelion also regulate blood pressure.
Cholesterol – Animal studies have shown that dandelion lowers and control cholesterol levels.
Gallbladder – Dandelion increases bile production and reduces inflammation to help with gallbladder problems and blockages.
Inflammation – Dandelion contains essential fatty acids and phytonutrients that reduce inflammation throughout the body. This can relieve pain and swelling.
Immune System – Animal studies also show that dandelion boosts immune function and fights off microbes and fungi.
Dandelion leaves, flowers, and roots are all edible. They have a slightly bitter flavor that can be minimized by harvesting them in the fall or spring. Cooking cuts the bitter flavor as well though the leaves make a great addition to raw salads.
Dandelion is generally considered safe in food and medicinal levels. Some people may have allergic reactions to dandelion. Anyone with an allergy to ragweed, chrysanthemum, marigold, chamomile, yarrow, or daisy should avoid dandelion and anyone pregnant, nursing, or taking prescription drugs should talk to a health care professional before adding something new to their diet.
 

Sunday, April 20, 2014

Happy Easter

Easter is not just about God’s resurrection…
It’s also about elimination of slavery…

A unification of conscience and faith.
Have a blessed Easter!

Monday, March 31, 2014

பலூன்



 



" மாமா பெரிசாக ஊதாதையுங்கோ.....
அப்பா..... ,
 
மாமாவை ஊதவேண்டாம் என்று சொல்லுங்கோ......"


என்று கண்கள் அகல விரிய,
முகத்தில் பயம பரவ,
சத்தமாக கத்தி அழுதுகொண்டு,

காதுகள் இரண்டையும் தனது பிஞ்சுக் கைகளால் பொத்திக்கொண்டு ஓடிப்போய் 
இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டு,

கதிரைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டான் எட்மன்.



எட்மனுக்கு 9 வயது தான் ஆகிறது. அந்தக் குடும்பத்தில் மூத்த பையன்.
 

5 வருடங்களின் முன்னர் அவன் மிகச் சுட்டிப்பையன்.

அவனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது தத்தளிக்கும் அவனது பெற்றோரும், அம்மம்மாவும்,4 வயதிலேயே அவனது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ,விவேகமும் திறமையும் அவர்களை ஆச்சரியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது.
 

அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். கிறிஸ்மஸ் என்றாலே அவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அவர்களது வீட்டை பலூன்கள்,அலங்கார வளைவுகள் என்பவற்றுடன் கிறிஸ்மஸ் மரத்தினை வர்ண வர்ண மின்குமிழ்கள் கொண்டு அலங்கரித்து தமது அனைத்து வசதிகளையும் முயற்சியையும் வெளிப்படுத்தி தமது ஆனந்தத்தை பகிர்ந்து கொள்வார்கள்.



பலூன்கள் ஊதி கட்டி அலங்கரிப்பதற்குள், ஒவ்வொரு பலூனாக, அவற்றின் மேல் விழுந்து உடைத்து விட்டு, கொக்கட்டம் போட்டுச் சிரிப்பான் எட்மன். சில வேளைகளில், எட்மனின் சுட்டித்தன வேலைகளை நிறுத்த , அவனுக்கு ஒரு அடி போட்டு பலூன் உடைப்பதை நிறுத்த முயற்சி செய்வாள் அம்மா மேரி.
அம்மம்மா மரியமோ,


" ஏன்டி பிள்ளைக்கு அடிக்கிறாய்.....? "
 

என்று மகள் மேரிக்குத் திட்டிவிட்டு எட்மனைக் கூட்டிக்கொண்டு கடைக்குச் சென்று ஒரு பக்கற் பலூன் வாங்கி வந்து அவன் உடைப்பதற்கென்றே அப்பக்கற்றில் இருக்கும் 50 பலூன்களையும் ஒவ்வொன்றாக ஊதிக்கொடுத்து உடைக்கச் செய்வாள்.
 

அப்பலூன்களை உடைப்பதற்காக ஒவ்வொரு பலூன்களின் மேலும் விழுந்து அவன் உடைக்க எடுக்கும் முயற்சியையும் உடைந்தபின்னர் அவன் ஏதோ ஒரு சாதனை செய்து விட்டது போன்று பெரிதாகச் சிரித்து ஆனந்தமடையும் அப்பிஞ்சினைப் பார்த்து புளகாங்கிதமடைவாள் மரியம்.
 

எட்மன் அம்மம்மாவின் செல்லக்குட்டி. எனென்றால் அவன் தான் அவளுடன் சேர்ந்து இருக்கும் முதலாவது பேரப்பிள்ளை. மரியத்தின் மற்றப் பிள்ளைகளின் ஊடாக பேரப்பிள்ளைகள் இருந்த போதும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் கனடாவிலேயே வசித்து வருகின்றனர்.


அதனை விட எட்மன் அச்சு அசலாக மரியத்தின் மூத்த பிள்ளை போன்று இருப்பான். எல்லாமாகச் சேர்ந்து மரியத்துக்கு எட்மன் மீது அளவு கடந்த பாசத்தை அள்ளிக் கொட்டியிருந்தது.


இப்படி பலூன் என்றாலே ஊதி உடைத்து அந்தச் சத்தத்தில் சந்தோசமடையும்

எட்மன், ஏன் இப்போ பயந்து ஓடுகின்றான் என்றால் அவனது 5வது வயதில் நடந்த பயங்கரமான சம்பவம் ஒன்று தான் காரணமாக இருந்தது. இப்போதும் மாறாத வடுவாகவும் இனிமேலும் அப்படி ஒரு சத்தத்தைக் கேட்டு விடக் கூடாது என்றும், நினைத்தாலே பயங்கரமானதாக நிரந்தரமாக அந்தப் பிஞ்சு நெஞ்சில் ஒட்டிக்கொண்டு விட்டது.



 

எந்தச் சத்தத்தைக் கேட்டு சிரித்து அளவில்லா ஆனந்தமடைவானோ அதே போன்ற ஒரு வெடிச்சத்தம் அவனுக்கு ஒரு முடிவில்லாத் துன்பத்தைக் கொடுத்து அந்தச் சத்தத்தின் மீது வெறுப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அப்படியொரு சத்தத்தை மீண்டும் கேட்டு விடக் கூடாது என்று எண்ணியது. உள்ளம் உயிர் அனைத்தையும் நடுங்க வைக்கும் பயத்தையும் கொடுத்திருந்தது.
 

2009ம் ஆண்டு இலங்கையில், இலங்கை அரசின தந்திரக் கதைகளைக் கேட்டு தமது உடமைகள் நிலங்கள் வீடுகளை விட்டு உடுத்த துணிகளுடன் காவிச்செல்லக் கூடிய உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட " பாதுகாப்ப வலயங்கள் " ஒவ்வான்றாகச் சென்று இறுதியாக முள்ளிவாய்கால் கடற்கரையில் அனைவரும் அனல் பறக்கும் வெயிலில் துணிகளாலும் தறப்பாள்களாலும் கூடாரம் அமைத்து தமது உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு விட்டு அடுத்த அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
 

ஒரு பக்கம் சமுத்திரக்கடல் யாரும் எங்கும் செல்ல முடியாதவாறு தடுத்துக் கொண்டிருந்தது. மறுபக்கம் சுற்றிவர இலங்கையரசின் கொடும் இராணுவப்படைகள், உயிர்க்கொல்லி ஆயுதங்களால், சூட்டையும் ஏவுகணைத் தாக்குதல்களையும் புலிகள் மீது தாக்குவதாகக் கூறிக்கொண்டு தனது சொந்த மக்கள் மீதே ஏவிக் கொன்று கொண்டு முன்னேறியது.
 

உலகில் எந்த நாடும் இலங்கையரசை ஒரு கேள்வி கேட்கவில்லை. பதிலாக அவர்களுக்கு உயிர்க்கொல்லி ஆயுதங்களைக் கொடுத்து உதவியது. தமது கேந்திர அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையைத் தமது கைக்குள் வைத்திருப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு வந்து தமது உதவிகளை வழங்கி இலங்கையைத் தமது பக்கம் சாய்த்துக் கொள்ள முயற்சிகள் செய்தார்கள்.
 

பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும், காட்டித் தப்பிக் கொள்ளும் விலாங்கு மீனைப் போல, எந்த நாட்டுக்கு எந்தமுகத்தைக் காட்ட வேண்டுமோ, அந்த நாட்டுக்கு அந்த முகத்தைக் காட்டி தனது காரியங்களைச் சாதித்ததோடல்லாமல், யாருடைய தொந்தரவுகளுமின்றி மிகப்பெரிய இனஅழிப்பையே செய்து கொண்டிருந்தது இலங்கையரசு.
 

இதனால் உலக நாடுகளால் தயாரிக்கப்படும் அனைத்து புதிய ரகக் குண்டுகளான கொத்துக் குண்டுகள், இரசாயனக் குண்டுகள், விமானக் குண்டுகள், எரிகுண்டுகள், விதம் விதமான ஏவுகணைகள், என அனைத்தும் இலங்கைத் தமிழர்கள் மீது அனைத்து நாடுகளின் ஆசீர்வாதத்துடன் பரிசீலித்துப் பார்க்கப்பட்டது.
 

உலக நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களினதும் குண்டுகளினதும், பரிசீலனைக் களமாக இருந்த முள்ளிவாய்க்காலிலேயே அந்தப் பிஞ்சின் மனதில் ஆறாத வடுவாக ஒரு சம்பவம் நடந்தேறியது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே, கடலில் சென்று குளித்து விட்டு வந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள் மரியம். என்ன கஸ்ரம் வந்தாலும் வெள்ளிக்கிழமை என்றால், கடவுளைப் பிரார்த்தனை செய்வதை நிறுத்தமாட்டார்கள் தமிழர்கள்.
 

தமது கஸ்ரங்களையும் துன்பங்களையும் கடவுளிடமே கண்ணீர் விட்டு முறையிட்டு, தமது கவலைகளைப் போக்கி நிம்மதியடைவார்கள். அவ்வகையில் மரியம் பிரார்த்தனையை ஆரம்பிக்க, எட்மனை மரியத்துடன் விட்டு விட்டு மேரியும் கணவரும் கடலுக்குக் குளிக்கச் சென்றார்கள். மரியம் பிரார்த்தனையில் இருக்கும் போது எட்மன் கூடாரத்தின் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
ஏவுகணைகள் ஆங்காங்கு வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. மக்கள் காயப்பட்டுச் செத்துக் கொண்டிருந்தார்கள். தினம் தினம் ஆயிரக்கணக்கில்.... கொத்துக் கொத்தாக....!



ஆரம்பத்தில் தமது சாவுக்கு அஞ்சியவர்கள் இப்போது எதனையும் கருத்தில் எடுப்பதில்லை. திறந்த வெளியில் இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட " பாதுகாப்பு வலயம் " எனுமிடத்தில் இலங்கையரசின் கொடும் இராணுவத்தினால், அங்கிருந்து எங்கும் தம்பி ஓடிவிட முடியாதபடி சுற்றிவளைக்கப்பட்டு வஞ்சகமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
 

கண்மூடித்தனமாக மக்களையே குறிவைத்துத் தாக்கப்படும் ஏவுகணைகளுக்கு, அந்த வெள்ளை வெளேரென்ற கடற்கரை மண்ணிலும் கடும் நீலக்கலரில் இருக்கும் சமுத்திரக் கடலிலும் எங்கே சென்று ஒழித்துக் கொள்வது? மூன்று லட்சம் பேரும் எங்கே சென்று மறைந்து கொள்வது..? அதனால், அங்கிருந்த மக்களுக்கு " போற உயிர் எப்போதோ ஒரு நாளைக்குப் போகத் தானே போகிறது.... இனியும் எங்கோ போய் ஒழித்துக் கொள்வது...." என்று விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார்கள். ஏவுகணைகள் ஏவப்படும் சத்தங்கள் கேட்ட போதும் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட்டனர். ஆனாலும் காயப்பட்டு அழுந்திச் சாவதை விட ஒரேயடியாகச் செத்து மடிந்து விட வேண்டும் என்பதே கடவுளிடம் அவர்களது பிரதான மன்றாட்டமாக இருந்தது.
 

அப்படி வந்த ஏவுகணையில் ஒன்று தான் மரியம் பிரார்த்தித்துக் கொண்டிருந்த கூடாரத்தின் மீதும் வீழ்ந்து வெடித்து ஒரே நொடியில் அவளை இரத்தமும் சதையுமாக்கி அவளது உயிரைக் காவு கொண்டு அப்பிஞ்சின் மனதை சுக்கு நூறாக்கியிருந்தது.
 

கூடாரத்தின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததால் எட்மன் அதிஸ்டவசமாகத் தப்பி விட்டான்.
 

மேரியும் கணவரும் வந்து கத்திக் குளறி ஒப்பாரி வைத்தனர். அப்போது எட்மனும் அழுதான். அவனது கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. அழுகிறான் அழுகிறான் சத்தமே வரவில்லை..அழுது அழுது குரல் எல்லாம் அடைத்து விட்டது... ஏனென்றால் இரத்தமும் சதையுமாக மீண்டும் வரமுடியாதபடி கிடப்பது அவனது அன்புக்குரிய அம்மம்மா என்பதே.
 

அம்மா தனக்கு அடிக்க வந்தால் அம்மம்மா எட்மனுக்கு அடைக்கலம் கொடுப்பதோடு அல்லாமல் தனது தாயாரை தடுத்து கட்டுப்படுத்தும் அதிகாரம் அம்மம்மா ஒருவருக்கே இருந்ததாக அவன் நம்பியிருந்தான்.
 

தனது சிறிய சிறிய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றி வைத்த அம்மம்மா இப்போ உயிருடன் இல்லை. எந்த மாதிரியான வெடிச்சத்தத்தை விரும்பி விளையாடி மகிழ்ந்தானோ அந்த விதமான ஒரு வெடிச்சத்தமே தனது அளவில்லா அன்புக்குரியவரின் உயிரைப் பறித்தது.... தன்னிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்தது.. என்று அந்தப் பிஞ்சின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டது. இனிமேலும் அந்தச் சத்தத்தைக் கேட்டு விடக் கூடாது என்று அந்த ஒன்பது வயதுப் பிஞ்சின் மனம் உறுத்திக் கொண்டிருந்தது.
அன்று கிறிஸ்மஸ் தினத்துக்காக வீட்டை அலங்கரிப்பதற்காக போதே நண்பர்ஒருவர் பலூன் ஊதும் போதே தனது காதுகளைப் பொத்திக் கொண்டு ஓடிப்போய் கதிரையின் பின் ஒளிந்து கொள்ளவும், கோழி தனது இறகுகளுக்குள் தனது அனைத்துக் குஞ்சுகளுக்கும் அடைக்கலம் கொடுத்துக் காப்பது போல் மேரி தன்மகனைக் கட்டி அணைத்து விம்மத் தொடங்கினாள்.
 

ஏனென்றால் மரியத்தின் இழப்பு எட்மனுக்கு மட்டுமல்லாமல் மேரிக்கும் அந்தச் சம்பவத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
 

மீண்டும் அந்த நினைவழியா தடங்களுடன், தனக்கிருந்த கவலைகளை மறைத்து, வீட்டை அலங்கரிப்பதனை நிறுத்தி விட்டு எட்மனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு மேரியையும் சமாதானம் செய்ய முற்பட்டார் கணவர் ஜோசப்.