Saturday, June 28, 2008

பகைத்திடு வேண்டாச் செலவுகளை.....!!!

கஞ்சி குடித்தாலும்
வஞ்சி உன் மடியில்
தஞ்சமடைந்து படுத்திருந்தால்
பஞ்சமாகி விடும் கவலைகள்...!

கவலை என்பது மாரியில் கத்தும்
தவளை போல, மாதக் கடைசியில்
மடலைப் பார்க்கையில் வருத்தும்
விடலைக் குடும்பங்களுக்கு...!

படலை வரை வந்து தந்திடும் பொருட்கள்
தடையையும் மீறிய விலையாக இருக்கும்.
காலையில் எழுந்து சந்தை வரை போய் வந்தால்
கடைசியில் குறையும் எந்தையின் செலவு...!

வீண் பேச்சுப் பேசாது, அளந்து பேசிட்டால்,
வானளவு செலவு குறைத்து காலடியில் போட்டிடலாம்.
தேவையற்ற நேரங்களில் மின்னை தவிர்த்திட்டால்,
சேமிப்புக் கணக்கினிலே மீதியினை சேர்த்திடலாம்...!

பொதுப் போக்குவரத்தினை, தினமும் நீ பாவித்தால்
பாதிப் பணம் மீதியாகி, விஞ்சிவிடும் உன் சேமிப்பு.
சாதி மதம் பாராது அன்புடனே பழகிட்டால்
வீதியெல்லாம் சந்தோசத்தில், திளைத்துப் போய் வரலாம்...!

முயற்சி எடுத்து நீ - காலயில் சின்ன
பயிற்சி செய்திட்டால், ஒழிந்திடும் உன்
அழற்சி மற்றும் அனைத்துக் கொடிய நோய்களும்
பெயற்சி ஆகிவிடும் உனது மருத்துவச் செலவுகள்...!

கடையிலே சாப்பிட்டு உன்
உடை பெருத்துக் கொள்வதால்
வருகிறது இரட்டைச் செலவு.
தருகிறது வேதனையும் சோதனையும்....!

தவிர்த்திடு கடையினில் சாப்பாட்டினை,
சமைத்திடு வீட்டினில் சுவையோடு,
வளர்த்திடு உனது சேமிப்பினை,
பகைத்திடு வேண்டாச் செலவுகளை.....!!!

வாழ்க தமிழ்......!!!


வாசமுள்ள எம்மவர் தமிழைக் காக்க,

பாசமுள்ள தமிழர் துள்ளி எழுந்து,
வேசமின்றி வரவேண்டும் முன்னுக்கு - இல்லையேல்
நாசமாகிப் போகும் நாம் கட்டிக் காத்த தமிழ்..
தோசமாகிவிடும் தமிழருக்கு.. வாழ்நாள் முழுதும்...!

காக்கவென, இப்போதே எழுந்து வராவிட்டால்
தாக்கப்பட்டு, சுக்கு நூறாகி விடும் எம் தமிழ்.
பார்க்கப் பார்க்க எரிச்சலாகும் - எம்
தாக்கப்பட்ட தமிழின் கலப்பை பார்க்கும் போதெல்லாம்...!

மறைவு தான், தமிழுக்கு விதியென்றால்
குறைவு தான் புத்தி, தமிழனுக்கு - விரைவில்
நிறைவு காண்பது அரிதாகும் தெரியுமோ?
பறைவதும் குறைந்து விடும் எம் தங்கத்தமிழில்..!

தரையில் ஊன்றிய காலைத் தூக்கி - உன்
கூரையில் வைத்து, உரக்கக் சொல்..,
பறையடித்துச் சொல், காக்க வா, தமிழை என்று,
விரைவில் சொல் தமிழ், வீழும் முன்னர்...!

மொழியின் முதன் மொழி, தமிழ் மொழி என்று,
வளிக்கு வளி, வாய் கிழியக் கத்தினால் போதாது,
அழிக்கத் துடிக்கும் அரக்கர் கூட்டங்களுக்கு,
பழியைத் தீர்த்து காப்பாற்று, எம்முயிர்த் தமிழை...!

உயிரினும் மேலான எம்முயிர்த் தமிழே...
பயிராய் நினைத்து வளர்க்கிறோம் உனை,
மயிராய் நினைத்து, யாரும் பிடுங்க நினைத்தால்
கயிறாய் ஆகி தூக்குவோம் அவர்களை...!

வாழ்க தமிழ்...! வளர்க தமிழ்...!
முதன் மொழியாக தமிழர்களுக்கு......,
பொது மொழியாக உலகத்தாருக்கு....!!!

Friday, June 27, 2008

சிகரட் பெட்டி




















தனக்குத்
தானே
தனது தலையில்
கொஞ்சம் கொஞ்சமாக
சேர்த்து வைக்கப்படும்
கொள்ளி நெருப்பு..!

தனது சேமிப்பினை
வைக்குமிடம் தெரியாது,
நுரையீரலுக்குள்
காற்றாக ஊதி
சேமிக்க உதவும்
துடுப்புக் கட்டை...!

இயற்கை மரணத்தை
எளிதிலே, விரைவாக
நோயுடன் கேட்டுப்
பெற உதவும்
தூதுவன்.....!!!

Monday, June 23, 2008

மனமுருகி வேண்டுகிறேன்.


கருஞ்சிவப்புத் திலகமிட்டு,
வரும் மதி நிலவே - நீ
தரும் அன்புச் சுமைகளாலே
திடும் என பருக்கின்றேன்.

நீ தான் என் உலகமென்று
நினைத்துச் சுழன்றடிக்கின்றேன்.
நான் நினைத்தது சரியென்பதை
காட்டிவிட்டாய் உன் அணைப்பினிலே.

உனது அன்புக் கணைகள்
என்னிடம் கலகங்கள் செய்கின்றன.
தினம் தினம் ஏங்குகின்றேன்
கனம் பொருந்திய உனைப் பார்க்க.

முருகன், ஜேசு, அல்லாவிடம் - மனம்
உருகி வேண்டுகின்றேன்.
பருகிட உன் அன்பினை
தருமாறு என்னிடம் உன்னை.

எல்லோரது கதைகளும் - எனக்கு
எரிச்சலாக இருக்கிறது.
சினிமா பாடல்களும் - ஏனோ
இரைச்சலாக கேட்கிறது.

ஏன் தான் எனக்கு
இவ்வளவு சோதனைகள்?
அவ்வளவும் எனக்கு
தருகிறது வேதனைகள்.

வந்துவிடு என்னிடம்
வாழ்நாள் முழுவதும்.
தருகிறேன் உன்னிடம்
என்னையே முழுமையாக.

Sunday, June 22, 2008

வீறு கொண்டெழுவோம்...!!!

தலை தெறிக்க ஓடி
மலை ஏறித் தாண்டினாலும்
தடை தான் தமிழனுக்கு
தரணியிலே எப்போதும்.

துரத்தி துரத்தி அடிக்கிறார்,
குண்டு போட்டு துளைக்கிறார்.
பட்டினி போட்டு வதைக்கிறார்.
தூக்கிலிட்டு கொல்கிறார்.

இதை தட்டிக் கேட்க நாதியில்லை
சர்வதேசத்தின் மனச்சாட்சிக்கு,
சிறுவர் சேர்ப்பு, பணம் வசூலிப்பு என்று
பகட்டுக் கண்ணீர் வடிக்குது.

நடப்பதை அடக்க முனையும்
நலன் விரும்பிகள் அனைவரும்
படியுங்கள் ஏன் நடக்குது என்பதை
அளியுங்கள் நல்ல தீர்ப்பொன்றினை.

நலிந்தவன் எங்கிருக்கின்றானோ
பலிக்கடா அவனே தான்.
வலிந்து அவனை தாக்கிவிட்டு
வலியவன் நான் தான் என்று
மார்தட்டி கொள்கின்றார்.

வீரத்தமிழனுக்கு தமிழனே உதவி
ஒன்று சேர்ந்து தட்டுங்கள்
உங்கள் கைகளை பலமாக
ஓடுவான் எதிரி எம் ஊரை விட்டு.

நாடு தாண்டி வாழும் தமிழர்
வீடு தோண்டி புதைக்கும் வரை
பொறுத்திருந்தால் முடியாது.

வீறு கொண்டெழுவோம் - எம்
வேதனையை தீர்த்திட....
உரிமையை மீட்டிட.....
சுதந்திரம் பெற்றிட....
எம் தேசத்தை ஆண்டிட....!!!

Wednesday, June 18, 2008

கொடுத்துவிடு என்னிடம்...!!!


அன்பே!
கெஞ்சுகிறேன் உன்னிடம்,
கொஞ்சிவிடு என்னை,
இறுக அணைத்து....!

கொஞ்சலிலும் நீ
கஞ்சம் காட்டுகின்றாய்,
பஞ்சிப்படுகின்றாய்,
கொஞ்சம் தந்து விட...!

கொஞ்சலுக்கு உன்னிடம்
பஞ்சமா சொல்....?
வஞ்சிக்கிறாய் என்னை
கொஞ்சுவதில் நீ....!

வஞ்சிக் கொடியிவள் உன்னிடம்
தஞ்சம் அடைந்து விட்டாள்.
சிந்திக்காதே.. வந்துவிடு..,
மஞ்சத்தில் சந்திக்க....!

கொடுத்துவிடு உன்னை
முழுமையாக என்னிடம்,
வாழ்ந்திடுவேன் உன்னுடன்
என் வாழ் நாள் முழுவதிலும்...!!!

Tuesday, June 17, 2008

தவிர்த்துவிடு...!!!


புன்னகையொளி வீசுமுந்தன் வதனத்தில்
பொங்கியெழும் கோபம் ஏன்?
பொன்னகை மட்டும் ஜொலித்தால்
மதிப்பரோ யாரும் இவ்வுலகில்...?

கோபம் என்பது தற்காலிக பைத்தியம்
சொன்னவன் ஓர் ஆஸ்தான கவிஞன்.
புரிந்து கொண்டேன், அவன் சொன்னதில்
பொய் ஏதும் இல்லை என்பதை...!

தூக்கம் போல் நடித்து - என்னை
தூசாக நினைத்து வெறுத்தது,
தூக்கி வாரிப் போடுகின்றது - இரவெல்லாம்
தூக்கம் ஏதுமின்றி எனக்கு...!

தவிர்த்துவிடு இனிமேல் இந்த
உதிரியான கோபம், பிடிவாதங்களை,
மலர்ந்துவிடு, சூரியனைக்கண்ட தாமரை போல்
இதழெல்லாம் விரித்து, செக்கச்செவேலென...!

தவிர்க்காதே என்னை, தயவு செய்து..,
உதிர்ந்து விடுவேன் நான், வாடிய பூவாய்..
அது தான் உனது விருப்பமெனில்
உதிர்ந்து விடுகிறேன், விரைவில் வாடாமலேயே...!!!

Saturday, June 14, 2008

பெண்ணே கொதித்தெழு....!!!


பெண்ணே!
ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழினம் போல்
ஒடுங்கி நீ படுத்திருப்பது - பெண்களின்
ஒடுக்கு முறையை காட்டவா?

வீராப்பு பேசி, விடுகதை போடும்
வீரத் தலைவிகள், விடுதலை தருவார்கள் என்று
நம்பிக்கையுடன் இருக்கிறாயா?

எல்லாமே அவர்கள் போடும் அரசியல் நாடகம்,
அவர்களை நம்பினால்,
ஒடுக்கமாக இருந்தாலும்,
நிம்மதியாக் நித்திரை அடிக்கும் நீ,
குந்தியிருந்தும் குறட்டை அடிக்க முடியாத
நிலைக்கு,
தள்ளப்படுவாய் புரிந்து கொள்.

இனியும் யோசித்துப் பலனில்லை.
ஒடுக்குமுறையை உடைத்தெறிய கிளர்ந்தெழு..
உனது உரிமை பெற்றிட துள்ளியெழு..
வரும் பகை முடிக்க கொதித்தெழு....!!!

Tuesday, June 10, 2008

மன்னித்து விடு என்னை...!!!!


வாய் தவறி வந்த வார்த்தை
வம்புச்சண்டைக்கு வித்திட்டது..!
தும்பாகப் பறந்து போக- நீ
அம்பாகப் பாய்ந்திடு என்னுள்..!!

உன் ஆசை தீரும் வரை துளைத்திடு,
என் உடலை... தவிர எ(உ)ன் இதயத்தை..!
உன் அம்புக் கணைகள் பாய்ந்தால்,
தாங்காது என் காதல் இ(ம)தயம்...!!

சிரிக்கத் தெரிந்த நமக்கு
சிரிப்பு வர மறுப்பது ஏன்..??
சொல்லடி பெண்ணே..,,,!!

ஆத்திரம் என்பது அவசரத்தில் வரும்
மூத்திரம் மாதிரி... அடக்கினால் ஆபத்து...!
பைத்தியம் ஆகுமுன் கொட்டிவிடு நொடி பத்தில்,
வைத்தியம் கிடைக்கும் உன் வம்புகள் அனைத்திற்கும்...!!

எமக்குள் ஏன் சண்டைகள் , சச்சரவுகள்...?
நமக்குள் பேசி தீர்த்துக் கொண்டால்..,
அலையும் மனத்தின் கேள்விகளுக்கு - அன்று
காலையே வைக்கலாம் முற்றுப்புள்ளி...!!

மன்னித்து விடு என்னை..,
தனித்து விட்டு விடாதே...!
மரணித்து விடுவேன் நான்..
சத்தியமாய்.....!!!!!!

Friday, June 6, 2008

என் மனமே ஆறிவிடு.....!!!


அபலை இவள் நெஞ்சிலே
கவலைகள் ஆயிரம்....!
பின்னப்பட்ட வலைகளாய்
சிக்குப்பட்டு கிடக்கின்றன....!!

அந்த கவலைகளை சொல்லி
மற்றோர் தலையில் ஏற்றிவிட,
இடம் தரவில்லை என்மனம்,
தடுக்கிறது என் சுயநலம்....!!

என்கவலை, துன்பங்கள்..
என்னோடு போகட்டும்...!
யாருக்கும் வர வேண்டாம்,
என் துன்பங்கள் போன்று....!!

கவலைகளை நினைத்து
கண்ணீர் விட்டு அழுகின்றேன்...!
என் மனமே மாறிவிடு,
அனைத்தையும் மறந்து ஆறி விடு...!!

வரப்போகும் காலங்களில் - நீ
தரப்போகும் சந்தோசத்திற்காய்,
திறந்த மனதோடு பார்த்திருக்கின்றேன்
அந்த காலத்தின் நினைவுகளுக்காய்....!!!

Wednesday, June 4, 2008

காத்திருக்கிறேன் உனக்காக...!!!



பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீட்டுக்கு விளக்கேற்ற - என்னை
கூட்டிச்செல்ல வா.......!

அண்ணன், தங்கை பாசம் விடுத்து
மனைவி பிள்ளை என்று - என்னுடன்
உறவு கொண்டாட வா......!

மூன்று முடிச்சிட்டு
தாலிக்கயிறு கட்டி - என்னை
தாய்மையாக்கிட வா...!

சிவப்பு நிறப் பொட்டிட்டு
மனைவி ஸ்தானம் கொடுத்து - என்னை
அழைத்துச் செல்ல வா.....!

அம்மா, அப்பா என்று
பிள்ளைகள் கூப்பிட - எமது
வம்சம் பெருக்கிட வா.....!

அனைத்து செல்வங்களும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்ந்திட - நான்
காத்திருக்கிறேன் உனக்காக ஓடி வா....!!!