Sunday, August 4, 2013

நீ ஆபரணமா...? அல்லது பொக்கிஷமா....?


வழமை போலவே அன்றும் தன் மனைவி பரிமளத்துக்கு கோல் எடுத்தார் அம்பலத்தார். அப்போது மற்றைய போனில் பரிமளம் கதைத்துக் கொண்டிருந்ததால் போனில் காத்திருந்தார் அம்பலத்தார். சொந்த மொழிக் காரன் ஒருவருடன் வீடு ஒன்று வாடகைக்கு எடுப்பது தொடர்பாக ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தாள்.

பரிமளத்துக்கு நம்பிக்கையுடன் ஆங்கிலம் கதைக்கத் தெரிந்திருந்தாலும், கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு விளங்குமோ என்னவோ.....? ஆனாலும் பரிமளம், தான் என்ன நினைத்தாளோ, அதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பரிமளம், போனில் கஷ்ரப்பட்டு விளங்கப்படுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அம்பலத்தார், அவள் தனது உரையாடலை முடித்து விட்டு கணவர் அம்பலத்தாருடன் கதைத்த போது,

"வீடு வாடகைக்கு எடுத்தல் தொடர்பாக கதைக்கும் போது எமது மொழிக் காரருடன் எமது மொழியிலேயே கதைப்பது நல்லது. ஆங்கிலத்தில் கதைத்தால், அவர்கள் உங்களை வெளிநாட்டவர் என நினைத்து வாடகையைக் கூட்டிச் சொல்வார்கள்......"

என்று சொன்னார்.

"முதலில் எங்கள் மொழியில் தான் கதைத்தேன். ஆனால் அவர் தான் ஆங்கிலத்தில் கதைத்தார். பின்னர் நான் தொடர்ந்து கதைத்தேன்"
என்றாள் பரிமளம்

" சரி..... சரி..... ஏதோ அவனுக்கு விளங்கப்படுத்த முயற்சிப்பது போலிருந்தது அது தான் சொன்னேன்....... அதை விட ஆசிய நாடுகளில், வெளிநாட்டுக்க காரர் என்றால், வாடகையைக் கூடச் சொல்லி வாங்குவதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்..... அது தான் ....."
என்றார் அம்பலத்தார்.

" சரி கதையை விடுங்கோ.... அதெல்லாம் கதைச்சாச்சு..... நீங்கள் தேவையில்லாமல் இதுக்குள்ளை தலையை விடாதையுங்கோ..... இது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்......."
என்று கோபமாகச் சொன்னாள் பரிமளம்.