Sunday, April 21, 2013

போக்குவீரா என் துன்பம்





காலை வணக்கம் சொல்லி என்னை

கட்டி அணைத்து உச்சி முகர்ந்து

எழுப்பி என்னைத் துாக்க வேண்டும்



குளிக்கும் போது முதுகு தேய்த்து

சோப்புப் போட்டு தண்ணீர் ஊற்றி

கழுவி என்னைத் துடைக்க வேண்டும்

Thursday, April 18, 2013

சாமிக்கு அப்பா இல்லையா?


டும் ..டும் ...டும் என்று எங்கு பார்த்தாலும் செல் சத்தங்களும் விமானக்குண்டு வீச்சுக்களும் டட் டட் டட் டட்.......என்று துப்பாக்கிச் சத்தங்களும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தன.


சனங்களும் ஒவ்வொரு ஊர்களாக, ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். ஆனாலும் இராணுவ அணிகள் தொடர்ந்து மக்களது உயிர்களையும் பாராது குடியிருப்புக்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் என அனைத்தின் மீதும் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றதோடல்லதமல் அவர்களை அவ்விடங்களில் இருந்து துரத்தியும் அடித்தன.


இராணுவத்தின் குண்டுத்தாக்குதல்களில் செத்தவர்கள் சாக, மற்றவர்கள் அஞ்சி ஓடி ஓய்ந்து ஓதங்கிய இடம் தான் முள்ளிவாய்க்கால். ஏலக்கூடியவர்கள் தொடர்ந்து ஓடுவதற்கு இடமிருந்தால் ஓடியிருப்பார்கள். ஆனால் அங்கு அவர்களை ஆர்ப்பரித்து வழிமறித்தது இந்து சமுத்திரம்.


சனம் எல்லாம் தங்களால் இயன்றவரை அந்த கடற்கரை மண்ணில் பங்கர் வெட்டி, கொழுத்தும் வெயிலில் இருந்து தம்மைக் காக்க அதன்

Sunday, April 14, 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


இன்றைய புத்தாண்டுத் திருநாளில்

அனைத்து வளங்களும் கிடைத்து

பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.

Friday, April 12, 2013

எத்தனை அழகு கொட்டி கிடக்குது


எத்தனை அழகு கொட்டி கிடக்குது

எப்படி மனசு கட்டி பறக்குது.. !

Tuesday, April 2, 2013

நிஜம்.


மலர்

பொய்மை நிறைந்த உலகில்

இன்னும் மாறாதிருக்கும் நிஜம்.



மனம்

யாவரையும் ஆட்டிவைக்கும்

யாருமறியா அங்கம்



முகம்

ஒவ்வொருவரது மனத்திரையின்

புகைப்படப் பிரதி.