Thursday, March 28, 2013

இனிய ஈஸ்ரர் வாழ்த்துக்கள்.




ஈஸ்ரர் விழாவினைக் கொண்டாடும் அனைத்துக் கிறிஸ்த்தவ அன்பர்களுக்கும் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய இத்திருநாளில்

கேட்டவை கிடைத்து,

நினைத்தவை நிறைவேறி,

பதினாறு பேறும் பெற்று,

இறைவனருள் கூடி வர

வாழ்த்துகின்றோம்.

Thursday, March 21, 2013

பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு


பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு


பூத்திருச்சு வெட்கத்தை விட்டு...

Tuesday, March 12, 2013

தொலைபேசியும் தொந்தரவும்.



கைத்தொலைபேசி


தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, சகல வசதிகளையும் உள்ளடக்கிய, அனைவரலும் பாராட்டப்பட்ட, இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு இரண்டு என்னும் வீதத்தில் பாவிக்கப்படும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத அங்கமாக உள்ளது கைத்தொலைபேசி.


ஒரு நூற்றாண்டின் முன்னர் ஒரு செய்தி அனுப்புவதற்கு பத்துப் பேர் பலத்த பாதுகாப்புடன் பல நாட்கள் பயணம் செய்தார்கள். ஆனால் இன்று இந்த உலகத்தையே ஒரு வீடாகச் சுருக்கி எமது உள்ளங்கையில் கொடுத்துள்ளது தொழில்நுட்பம்.


உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் நேரில் பார்த்துப் பேசுவது போல் இணையம் மூலமாக ஒருவரைப் பார்த்து ஒருவர் நினைக்கும் நேரத்தில் பேசி விடலாம்.

அப்படிப்பட்ட அரும் பொருளாக அனைவராலும் விரும்பப்படும் அத்தியாவசியப் பொருளாக; அன்பினை வளர்த்துக் கொள்ளும் இணைப்புப் பொருளாக; வசதியை வளர்த்துவிடும் வாணிபப் பொருளாக; அத்தியாவசியச் செய்திகளை உடனுக்குடன் பரிமாறி மற்றவரைக் காப்பாற்றும் காத்தல் பொருளாக; இன்னும் எத்தனையோ வசதிகளை எம் காலடிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பொருளாக கைத்தொலைபேசி உள்ளது.


இவ்வளவு வசதிகளைக் கொண்டதாக கைத்தொலைபேசி உள்ள போதும், அதனை தமது வாழ்க்கைக்கு இடைஞ்சலாக; சுமையாக; இருப்பதாகவும் நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


ஏனென்றால் கைத்தொலைபேசியின் அருமைகள்; அதனால் செய்யக் கூடிய வேலைகள்; அதனால் வளர்க்கக்கூடிய உறவுகள்; என்று பலவிதமான நன்மைகளை அறிந்து கொள்ளாதவர்கள் தான் அதனை சுமையாக நினைக்கிறார்கள்.


உரையாடல் - 01


அரவிந்தன்: ட்றிங்... ட்றிங்.....

கஸ்தூரி: ட்றிங் ..... ட்றிங்...... திஸ் இஸ் ரியூன்ரோக் வொயிஸ் மெயில் றெக்கோடிங்   சிஸ்ரம்................

Sunday, March 10, 2013

தகிட ததிமி தகிட ததிமி தந்தான......!




இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது.

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே

பாவம் இங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை

காதல் என்னைக் காதலிக்கவில்லை..!

உணர்வுகள்

அறிவுரை


கொடுப்பதற்கு இலகுவானது

வாங்குவதற்கு கடினமானது....!


காதல்


ஈருடல்

ஓருயிர்....!


கோபம்


உயிரினங்களுக்குள்

உறங்கிக் கொண்டிருக்கும்

மிருகக் குணத்தின்
திடீர் எழுச்சி

Friday, March 8, 2013

தாய்

பெண்


உலகில் உள்ள

உயிரினங்களின் தாய்.....!





பூமி


எந்தவித பேதமுமின்றி

உயிரினங்களை வாழவைக்கும்

உன்னத தாய்....!