Saturday, July 13, 2013

ஒரு தாயின் கனவு


" என்ரை பிள்ளை தனியப் போய் இருக்குது.

பிள்ளையை என்ரை காலத்திலேயே ஒருத்தன்ரை கையில பிடிச்சுக் குடுத்து கரையேத்திவிட வேணும் முருகா.. ஜேசப்பா... !"

என்று ஓயாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் கமலம்.


அவளுக்கு மதி, கவி, பவி என்று மூன்று பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.

இவர்களில் மதி தான் மூத்தவள். கமலம் புலம்பிக் கொண்டிருந்ததும் இவளைப் பற்றித் தான்.


ஏனென்றால், அவளது இரண்டாவது மகள் கவி திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் நாட்டினது கொடூர யுத்தம், அவர்களது குடும்பத்தையே மதியிடம் இருந்து பிரித்து தனிமைப் படுத்தியது.


நீண்ட காலமாக குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாததால், தையல் கொம்பனி ஒன்றில் சேர்ந்து வேலை செய்து, தனது வாழ்க்கையை ஓட்டி வந்தாள் மதி.


நாட்டில் சமாதானம் நிலவி, போர் முடிவுக்கு வந்திருந்த போதும், மதி, தனது ஊருக்குச் சென்று, பெற்றோருடன் சேர்ந்திருப்பதற்கு, அந்த நாட்டின் பயங்கரவாதச் சட்டம், பயங்கரச் சட்டங்களாக, அவளை விடாது துரத்திக் கொண்டே இருந்தது.

அதனால் அவள் வேறு நாடு ஒன்றுக்கு குடிபெயர்ந்து அகதியாக அடைக்கலம் கோரியிருந்தாள்.


ஆனாலும், அவள் தஞ்சம் கோரியிருந்த நாட்டின் சட்டங்களும் கொடுமையாகவே காணப்பட்டன. அந்தக் கொடுஞ்சட்டம் அவளையும் விடவில்லை. விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அவள் மீதும் பாய்ந்து அழுத்தியது.


எப்போது அவளது விடுதலை என்று தெரியாது தவித்தாள். தத்தளித்தாள். தாய் கமலத்திடமும் சொல்லிப் புலம்பினாள். ஆனாலும் சட்டங்களுக்குத் தான் மனச்சாட்சி, கண் என்று எதுவும் இல்லையே. சாட்சிகள் என்று எதுவும் கிடைத்தால் போதுமே. அவை பொய்யானதாகவோ போலியானதாகவோ இருப்பதைப் பற்றிப் பிரச்சனை எதுவும் இல்லை.


தஞ்சம் கோரிய நாட்டுச் சட்டத்தைப் பொறுத்தவரை சாட்சியும் தேவையில்லை. விசாரணையாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் சட்டமாக இருந்தது. ஏனெனில் அதற்கு மேல் சென்று தமக்கிழைக்கப்பட்ட அநியாயத் தீர்ப்புக்கு நியாயம் கேட்டு முறையிடுவதற்கு, சட்டம் இடம் கொடுக்கவில்லை.

Sunday, July 7, 2013

ஐஸ் பிரியாணி




" காலைத்தென்றல் பாடிவரும் கானம் ஒரு கானம்...." என்று கைத்தொலைபேசியின் இரண்டு மூன்று தடவை பாடி ஓய்ந்த பின்னர் கண்ணை விழித்துப் போனைப் பார்த்த அரசு 5 மிஸ்ட் கோல் இருக்கவும் நேரத்தைப் பார்த்தான். மணி 11 ஐத் தாண்டிக் கொண்டிருந்தது.


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சற்று நீண்ட நேரம் தூங்குவதற்காக அலார மணியை நிறுத்தி விட்டிருந்தான்

. மற்றைய நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களது பலசரக்குக் கடையில் வேலை செய்வதற்காக 6 மணிக்கே எழுந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.

அரசு கடையில் வேலை என்றால் அவனது அம்மா சுதாவுக்கு வீட்டிலும் கடையிலும் என இருபடி வேலை அவளுக்கு


. பிள்ளைக்கு 3 வேலை சாப்பாடு தயாரித்து கடைக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதிலிருந்த வீட்டில் வேலை முடித்து கடையில் வேலை செய்வதிலிருந்து அவளது தலையிலும் ஆயிரம் வேலைகளை தன் தலையில் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.

அன்று அரசுக்கு விடுமுறை என்றால் தாய் சுதாவுக்கும் விடுமுறை தான்

அவளும் சற்று நீண்ட நேரம் தூங்கித் தான் விட்டாள்.

அதனால் தாயும் மகனும் தூக்கம் விட்டு எழுந்து குளித்து வர

12 மணிக்கு மேலாகி விட்டது. ஒரு சோறும் கறியும் சமைக்க எப்படியும் 2 மணிநேரமாவது எடுக்கும் அதுவரை அரசு பசி தாங்க மாட்டான் என்று நினைத்த தாய், உடனடிச் சாப்பாடு என்ன உள்ளது என்று பார்த்த போது முதல் நாள் இரவு மீதியிருந்த சோற்றை படுதாகாமல் இருப்பதற்கு தண்ணீர் ஊற்றி வைத்தது நினைவுக்கு வந்தது.

Tuesday, July 2, 2013

திருப்தி கொள்




எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்.

எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகு



இறைவன் உனக்குக் கொடுத்த நேரம் சொற்பமே

அந்த நேரத்தினை பிரயோசனமாகப் பயன்படுத்து.



கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே

எதிர்காலத்தைப் பார்த்து ஏங்காதே



உனக்காக இறைவன் கொடுத்தது அவ்வளவே

கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக்கொள்



எதையும் தொடர்ந்து முயற்சி செய்

அந்தந்த நேரத்தில் அதன் பயன் கிடைக்கும்.



அனைவரிடமும் ஆலோசனையைப் பெற்றுக் கொள் - ஆனால்

ஆணித்தரமான முடிவை நீயே எடு



எப்போதும் உன்னருகில் நல்லவரை வைத்துக் கொள்

இல்லையேல் உனைச்சுற்றி கெட்டவர்கள் கூடுவர்

Monday, July 1, 2013

தந்தையர் தினம்



"உங்களுடைய அப்பா என்ன வேலை? "

" Engineer..."

"உங்களுடைய அப்பா...?"

" Doctor...."

"உங்களது..."

" Teacher....."

"உங்களது..."

" He is in Home"

" No problem.... what was his job before "

" He always is in the house ...
Clean the Kitchen and house and washe the vessels..."

எல்லோரும் பெரிதாகவே சிரித்து அவனை சேலி செய்தார்கள்.

" உனது அப்பா என்ன சோம்பேறியா.....? இன்னும் ஏதேதோவெல்லாம் கேட்டு கேலி பண்ணினார்கள். அன்று முழுவதும் அவன் சோகமாகவே காணப்பட்டான்.


அன்று தந்தையர் தினம். அதனால் வகுப்பறையில் ஆசிரியர் தனது மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தந்தையார் என்ன வேலை செய்கின்றார்கள் என்று கேட்டுக்கொண்டு வந்து, அபியிடம் கேட்ட போதே அவன் அந்தப் பதிலைச் சொன்னான்.