Thursday, October 31, 2013

THE BALD MAN AND THE FLY

A Fly settled on the head of a Bald Man and bit him.

In his eagerness to kill it, he hit himself a smart slap.

But the Fly escaped, and said to him in derision,

"You tried to kill me for just one little bite; what will you do to yourself now, for the heavy smack you have just given yourself?"

"Oh, for that blow I bear no grudge,"
he replied,

"for I never intended myself any harm; but as for you, you contemptible insect, who live by sucking human blood, I'd have borne a good deal more than that for the satisfaction of dashing the life out of you!"

From Aesop story

Monday, October 21, 2013

முதற் பயம்

" தம்பி இந்த தேத்தண்ணியைக் வயலுக்குக் கொண்டு போய் அம்மாக்களிட்ட குடுத்திட்டு வாறியோ.... அச்சாப்பிள்ளை...." என்று அப்போது தான் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு இருந்த நேரத்தில் சுடுதண்ணீர் போத்தலினுள் தேனீரை ஊற்றி மூடிக் கொண்டே என்னிடம் கேட்டாள் என் அக்கா.

நானும் வயலுக்குப் போய் அந்த பச்சைப் பசேல் என்ற நெல்வயலைப் பார்க்கும்ஆர்வத்தில் " ஓமோம் தாங்கோ கொண்டு போய் குடுக்கிறன்.." என்று வாங்கிக் கொண்டேன்.

அப்போது அக்கா " இண்டைக்கு களி வயலுக்குத் தான் புல்லுப் பிடுங்கப் போறதெண்டு அம்மா சொன்னவா. அங்கை போய்ப் பார். அங்கை இல்லையென்றால் பெரியக்காவின்ரை வயலுக்குப் போய்ப் பார்" என்று சொன்னாள்.

" ஓமோம் " என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வயலை நோக்கிப் பறந்தேன்.

எமது ஊர் ஓர் அழகான ஊர். எங்களது வீட்டிலிருந்த 200 மீற்றருக்கு முன்னாடி ஒரு கிலோ மிற்றர் வரை சுமார் ஆயிரம் ஏக்கர் வரையான நிலத்தில் நெற்பயிர்ச செய்கை செய்வார்கள்.

இது மழை காலத்தில் மட்டும் அதாவது ஒரு போகம் மட்டுமே நெற்பயிற் செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அந்தக் காலத்தில் வயல்வெளியில் வீசும் குளிர்காற்றை அனுபவிப்பதற்காகவும் அக்காற்றினில் அலை போன்று அசைந்தாடும் நெற்கதிரின் பச்சைப் பசேல் என்ற கண்ணுக்கு குளிற்சியான அவ் வண்ணத்தை ரசிப்பதற்காகவும் நான் அங்கு செல்ல ஆசைப்படுவேன்.

ஆனாலும் எனக்கு அப்போ சிறிய வயது என்பதால் மழை காலத்தில் வெளியில் சென்றால் வருத்தங்கள் வந்து விடும் என்று தாய்மை உள்ளத்தோடு கண்டிப்பாக வயல்வெளிக்குச் செல்ல அம்மா அனுமதிப்பதில்லை.

சில சமயங்களில் அம்மாவுக்குத் தெரியாத வகையில் ஓடிப் போய் வயல்க் காட்சிகளை ரசித்து விட்டு வந்து அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டதும் உண்டு.

எமது வீட்டினருகில் வயல் வெளியிருந்தும் அக்காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்று பலமுறை ஏங்கியதும் உண்டு.

இப்படியான ஏங்கங்கள் இருந்த காலத்தில் தான் அக்காவும் அம்மாவுக்க தேனீர் கொண்டு சென்று கொடுக்குமாறு கூற சந்தோசத்தில் பறந்து வயல் வெளிக்கு வந்தேன்.

அக்கா சொன்ன களி வயலில் அம்மாக்கள் இல்லாதது எனக்கு மிக்க சந்தோசத்தைக் கொடுத்தது. ஏனென்றால் களிவயல் இருப்பது வீதியோரத்தில். ஆகையால் நான் தேனீரை அம்மாவிடம் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுமாறு கூறி விடுவார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திரும்பியிருக்க வேண்டியிருக்கும். அதனால் தான் சந்தோசத்துடன் வயல்களின் நடுவே இருந்த பெரியக்காவின் வயலை நாடிச் சென்றேன்.

அங்கே அம்மா, சித்தி, பெரியக்கா, பெரியண்ணா, ஐயா எல்லோரும் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "அம்மா, குட்டியக்கா தேத்தண்ணி தந்துவிட்டவா..." என்றேன்.