Monday, December 31, 2012

2012



2012

என் வாழ்வின்

துயரங்கள் சுமந்த

சுதந்திரம் இழந்த

இருண்ட பக்கங்கள் நிறைந்த காலம்.


காலனுக்கும் தெரியவில்லை

ஏன் தடுப்பில் உள்ளேன் என்று

காதலிக்கும் புரியவில்லை

சிறையிருந்து ஒன்றும் செய்யலாகாதென்று

Sunday, December 30, 2012

ஆயிரம் மலர்களே மலருங்கள்...

Thursday, December 27, 2012

என் உதடுகள் மௌனமாகின்றன.



நான்

வாய் திறந்து சொல்வதெல்லாம்

வால் வைத்து விளங்கிக் கொண்டு

வாரோட்டம் ஓடி வந்து

பாயுதென்மேல் மறுமடியும்


எனக்கொன்றும் விளங்கவில்லை

எப்படித்தான் கதைப்பதென்று

எப்படி நான் கதைத்தாலும்

தப்படியாத்தான் புரிகிறது அனைவருக்கும்

Tuesday, December 25, 2012

Happy Christmas

Wednesday, December 19, 2012

பூங்காற்று திரும்புமா..

என்னைப் பாராட்ட

மடியில் வைத்து தாலாட்ட

எனக்கொரு தாய் மடி

கிடைக்குமா?



Saturday, December 8, 2012

SHIATSU SELF MASSAGE

Wednesday, December 5, 2012

இன்னும் நான் யாரிடம் மண்டியிட..???



நான் கடவுளிடம் மண்டியிட்டேன்

என் துன்பங்களுக்கு ஒரு முடிவைத் தருவதற்கு


ஆட்கடத்தல் காரரிடம் மண்டியிட்டேன்

அனுப்பும் கூலி பெருந்தொகையானதால், குறைப்பதற்கு


படகோட்டியிடம் மண்டியிட்டேன்

உயிருடன் ஏதோவொரு கரை சேர்ப்பதற்கு

Sunday, December 2, 2012

பணம் என்னடா பணம் பணம்


பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்


என்ன வழி நான் செய்வது

நல்ல வழி நான் செல்வது

இரக்க மனத்தைக் கெடுக்கும் அரக்கன்

பணம் பணம் பணம்.

Friday, November 16, 2012

3. நீத்தார் பெருமை/THE MERIT OF ASCETICS


 
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

No merit can be held so high

As theirs who sense and self deny.



துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

To con ascetic glory here

Is to count the dead upon the sphere.



இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

No lustre can with theirs compare

Who know the right and virtue wear.



உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்

வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து

With hook of firmness to restrain

The senses five, is heaven to gain.



ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலும் கரி

Indra himself has cause to say

How great the power ascetics, sway.



செயற்குஅரிய செய்வார் பெரியர்,சிறியர்

செயற்குஅரிய செய்கலா தார்.

The small the paths of ease pursue

The great achieve things rare to do.



சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

They gain the world, who grasp and tell

Of taste, sight, hearing, touch and smell.



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

Full-worded men by what they say,

Their greatness to the world display.



குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

Their wrath, who've climb'd the mount of good

Though transient, cannot be withstood.



அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டுஒழுக லான்

With gentle mercy towards all,

The sage fulfils the virtue's call.

Wednesday, November 14, 2012

Happy Birthday My Soul


I may be far away like a hundred miles.

But at night when I dream,

you come so near.

Miss you,

for not being able to show my love on this day of the year.

Have a delightful birthday,

may all your wishes come true.

Saturday, November 10, 2012

வெற்றிக்கனிகள் பறிப்போம்.

எவனொருவன் ஒன்றை விரும்பி விட்டால்

அதனை தடுப்பதற்கு யாராலும் முடியாது - அணு

குண்டுதான் திடீரென வீழ்ந்தங்கு வெடித்தாலும்

தூளாகிப் போகுமது அவன்முயற்சியின் முன்னாலே.



எவற்றையும் மனதார விரும்பிநாம் ஆசைப்பட்டால்

எப்போதும் அவற்றையே உள்ளத்தில் நினைத்திருந்தால்

தானாக வந்துதிக்கும் பெரும்பெரும் ஐடியாக்கள்

தரமாக வடிவமைக்கும் அவ்வனைத்தையும் அடைவதற்கு.

Sunday, November 4, 2012

எமக்கு வாழ்வு கொடுங்கள்



எந்தனது மனைவியுடன் போன் பேசி

காலங்கள் கரைகிறது பல வாட்டி

பாலங்கள் இன்றி நான் தவிக்கின்றேன்

சாலங்கள் போட்டு அவளோடு சேர்ந்திருக்க



பெருங்கடல் ஒன்றெம்மைப் பிரிக்கிறது

சட்டங்கள் நாம்சேரத் தடுக்கிறது.

வருங்காலம் வாவென்று அழைக்கிறது

நேரங்கள் வருடங்களாய் பறக்கிறது.

Friday, October 19, 2012

உன்னால் மட்டும் எப்படி?





உலகினிலே

துன்பத்தில விழுந்த மனிதன்

அதிலிருந்து மீள்வதற்கு கஸ்ரப்படுகிறான்

இன்பத்தில் திளைத்த மனிதன்

மேலும் திளைக்க அவதிப்படுகிறான்.

பாடசாலை மாணவனோ

விரைவில் படித்து முடிக்க ஆசைப்படுகிறான்

வேலை செய்யும் ஆசிரியரோ

விரைவில் நிறைவுபெற வேண்டுகிறார்

வீட்டினிலே பெண்களோ

சுவையாக சமைக்க ஆசைப்படுகிறாள்

அவற்றைச் சாப்பிடுபவர்களோ

குறை கூறிச் சாப்பிடுகிறார்

எழுத்தாளன் எழுத நினைக்கிறான்

உழைப்பாளி உழைக்க நினைக்கிறான்

விவசாயி அறுவடை செய்ய நினைக்கிறான்

எல்லோருமே ஒவ்வொன்றை நினைக்கிறார்கள்

அதனை அடைந்து விட நினைக்கிறார்கள்

சிலர் நேரம் போதவில்லை என்கின்றனர்

பலர் நேரம் போகுதில்லை என்கின்றனர்.

ஆனால்

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது

எந்தவிதமான சலனமுமின்றி

பளிங்கில் வழிந்தோடும் நீர் போல

அமைதியாக

தெளிவாக

நகரமுடிகிறது....?

கற்றுத் தா எனக்கு

நிம்மதியைக் காண்பதற்கு.....!!!

Tuesday, October 16, 2012

வான்சிறப்பு/THE BLESSING OF RAIN



வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று

The genial rain ambrosia call;
The world but lasts while rain shall fall.

 
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்

தப்புஆய தூஉம் மழை

The rain begets the food we eat;
And forms a food and drink concrete.



விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து

உள்நின்று உடற்றும் பசி

Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth



ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளம்குன்றிக் கால்

Unless the fruitful shower descend,
The ploughman's sacred toils must end.



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

Destruction it may sometimes pour,
But only rain can life restore.



விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

No grassy blade its head will rear,
if from the cloud no drop appear.



நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி

தான்நல்காது ஆகி விடின்

The ocean's wealth will wasre away,
Except the cloud its stores repay.



சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.



தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்காது எனின்.

Were heaven above to fail below,
Nor alms nor penance earth would show.



நிர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.  

Water is life that comes from rain
Sans rain our duties go in vain.

Wednesday, October 10, 2012

திரையில் தெறித்தவை




மனிதன் மீது மண்ணுக்காசை

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது -அதை

மனம் தான் உணர மறுக்கிறது.
 
 
 
எட்டித் தொடும் வயது இது

ஒரு வெட்டுக்கத்தி போல் இருக்கும்

அதிசயம் என்னவென்றால் -அதன்

இரு பக்கமும் கூர் இருக்கும்

கனவுக்கு செயல் கொடுத்தால்

அந்த சூரியனில் செடி முளைக்கும்

புலன்களை அடக்கி வைத்தால் - தினம்

புதுப் புது சுகம் கிடைக்கும்

காலில் குத்தும் ஆணி, உன் ஏணி என்று காமி

Sunday, October 7, 2012

அருமையான தீர்ப்பு





ஒக்டோபர் ஐந்து

ஒருதொகுதி மக்களின்

ஒருமித்த விடுதலைக்காய்

உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கிற்கு

நீதிபதிகள் ஒன்றுசேர்ந்து கட்டளையிட்ட

ஒரு அருமையான தீர்ப்பு



பொதுவான காரணம் சொல்லி

மதுக்காரன் போலவர் கண்மூடித்தனமாக

கட்டவிழ்த்து விட்ட பொய்க்கதைக்கு

நீதிபதிகள் ஏழுபேர் சேர்ந்து

மீதியின்றி விளக்கமளித்து

முழங்கிய பெரும் தீர்ப்பு



கர்ப்பிணி, சிறு பாலகன்,

குழந்தைகள், விதவைகள்,

குடும்பங்கள், தனிநபர்கள், என

எவரையும் விட்டுவிடாது,

கம்பி வேலிக்குள் அடைப்பதற்கு

வழிவகுத்த சட்டத்தினை

அடித்து நொறுக்கிய ஒரு தீர்ப்பு.



மனைவியை, குழந்தையை,

கணவனை, அண்ணனை,

அம்மாவை, தம்பியை, என

அனைத்து உறவுகளையும்

மனிதாபிமானம் ஏதுமின்றி,

அக்குவேறாகப் பிரித்து

அவர் தம் ஜனநாயக உரிமைகளை மறுத்த

அநியாயச் சட்டத்தின் இரும்புக் கதவினை

சுக்குநூறாக்கிய ஒரு தீர்ப்பு.



தமிழர்களை வைத்து

அரசியல் நாடகம் நடாத்திய

கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும்

அவர்களது காது பிடித்து முறுக்கி

கரவுபிடித்து தடுத்துவைத்த அப்பாவிகளுக்கு

வழிகொடுக்க தறைஞ்சு விட்ட

மாபெரும் தீர்ப்பு.

Thursday, October 4, 2012

தமிழனுக்கோர் காலம்வரும்



உலகெல்லாம் ஒளிகொடுக்கும் பகற்கால சூரியனே

இரவுக்கு அழகளிக்கும் வானத்து சந்திரனே

உயிர்களுக்கு உயிரளிக்கும் உயிர்மூச்சுக் காற்றே

அனைத்தையும் தாங்கிநிற்கும் பூமியின் நிலமே,



பார்த்துக்கொண்டா இருக்கின்றீர் தமிழர்படும் அவஸ்த்தைகளை

தூர்த்துவிடப் பார்க்கிறார்கள் எம்மிளம் பிஞ்சுகளை

வேரிறுக்கி இருக்குமெங்கய் கலாச்சாரப் பண்புகளை

தோலுரித்து துவம்சமாக்க துடிக்கிறார்கள் துஷ்டர்கள்.



பாரிறுக்கப் பரவியிருக்கும் ஈழத்தமிழ் குஞ்சுகளை

கோடிழுத்துப் பெரும்பெரும் சட்டங்களை உருவாக்கி

நூலறுத்துச் சட்டங்களின் வலைகளிலே விழச்செய்து

கழுத்தறுக்கத் துடிக்கிறார்கள் கயவர்கள் எம்நாட்டினிலே



ஐந்துக்கு ஒன்றுஎன்று ஆமியினை நிலைநிறுத்தி

ஜந்துக்கள் போலவர் பெருகிப்போய் இருக்கிறார்கள்

மந்தைகள் போலத்தமிழ் மக்களை மேய்த்துவிட

சந்துக்கள் எங்குமவர் உயிரெடுக்கும் இரும்புடனே



வங்கத்து வழிவந்த காட்டுமிராண்டிக் கூட்டங்கள்

சங்கத்துக் காலம்முதல் வாழ்ந்துவரும் தமிழர்களை

செங்குருதி வடித்துஅவரை கொன்றுவிடத் துடிக்கிறார்கள்.

கங்கையிலே போட்டு கரைத்துவிடத் தவிக்கிறார்கள்.



காலத்தின் சுழற்சியிலே தமிழனுக்கோர் காலம்வரும்

நாளத்தில் சூடேற்றி மானமுள்ள தமிழர்களாய்

வானத்தில் இருந்துநாம் குதித்துநடை போடுவோம்

தமிழனுக்கோர் நாடமைத்து தரணிக்குப்பறை சாற்றுவோம்.

Monday, October 1, 2012

சிறையில் பூத்த மலர்




சிறையினிலே சிக்கிய ஆண்கிளியைத் தேடி

கடலினிலே படகேறி புறப்பட்டது பெண்கிளி

தரையினிலே கால்பட்டதும் கண்டுகொண்டது சோடியினை

கரையில்லாப் பிரிவுக்கு வந்ததொரு பெருவிடிவு



சோடியைக் கண்டதும் துள்ளியது இருமனமும்

ஓடியே சென்றிரண்டும் கட்டியே புரண்டது

தேடிய கிளியிரண்டும் சேர்ந்ததும் சொல்லணுமோ

பாடியே கொஞ்சியிரண்டும் மகிழ்ந்துதான் இருந்ததுவே.



சிப்பிக்குள் முத்தாக கருவாக உருவாகி

கம்பிக்குள் வித்தாக தருவாக வெளியாகி

அம்பறாவில் இருக்குமந்த அம்புபோல் சிறையினிலே

தம்பியாய் அண்ணனுக்கும் அக்காளுக்கும் இருக்கின்றான்



உடும்பு பிரட்டி தவள்ந்து நடந்து

ஓட பழகி ஒன்றாக விழளயாடி

அம்மா சொல்லி கதைக்கப் பழகி

அக்கன்னா வரைக்கும் சரளமாய் சொல்கின்றான்.



வருடங்கள் இரண்டு கடந்துதான் போச்சு

கருடர்கள் இன்னும் இரங்கவே இல்லை

நெருடல்கள் எப்போதும் ஒவ்வொருத்தர் மனதிலும்

எப்போது விடுதலை இம்முடிவில்லாச் சிறையிருந்து.



மனிதாபிமானம் மனிதஉரிமை ஜனநாயகம் என்று

மந்திரமாக சாலவார்த்தைகள் சரளமாகப் பேசி

தந்திரமாக எல்லோரையும் காலவரையறை ஏதுமின்றி

தொந்தரவின்றி அடைத்துள்ளனர் சிங்காரச் சிறையினிலே



தனியான படையொன்று மிருகங்களுக்கு உண்டு

அநியாய தடைகளுக்கு எவையுமே இல்லை

சிறுவர்கள் பெரியோர்கள் கற்பிணிகள் முதற்கொண்டு

சிறையிலே அடைத்துவைத்து சித்தமிழக்கச் செய்கிறார்கள்.



தப்பேதும் அறியாத இச்சிறையில் பூத்தமலருக்கு

எப்போது முடிவில்லாத் தடுப்பிலிருந்து விடுதலை

முப்போதும் கடவுளைத் தொழுகின்ற பக்தர்களே

இப்போது செய்யுங்கள் இம்மலரது விடுதலைக்காய்.

Friday, September 28, 2012

கடவுள் வாழ்த்து - THE PRAISE OF GOD



அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

'A' leads letters; the Ancient lord
leads and lords the entire world


கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.


That lore is vain which does not fall
At His good feet who knoweth all


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

Long they live on earth who gain
The feet of God in florid brain


வேண்டுதல் வேண்டாமை இலான்எடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.


Who hold his feet who likes nor loathes
Are free from woes of human births.



இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.



பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

They prosper long who walk his way
who has the senses singed away.


தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

His feer, whose likeness none can find
Alone can ease the anxious mind.


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீத்தல் அரிது.

Who swims the see of vice is he
who clasps the feet of virtue's sea.



கோள்இல் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

Like senses stale that head is vain
Which bows not to eight-virtued Divine.


பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

The sea of births they alone swim,
who clench his feet and cleave to him.





Thursday, September 27, 2012

திரையில் தெறித்தவை



மயக்கமா கலக்கமா

ஏழை மனதை மாளிகையக்கி


இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு


கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

மண்குடிசை வாசல் என்றால்


தென்றல் வர வெறுத்திடுமோ?

மாலை நிலா ஏழை என்றால்

வெளிச்சம் தர மறத்திடுமோ?




Tuesday, September 25, 2012

Saturday, September 22, 2012

மறக்க முடியாத நினைவுகள்.



மாலதி தேவகி என்ற இரு சகோதரிகள் தமது நாட்டில் நடந்த யுத்தம்

காரணமாக தந்தையை அநியாயமாக பலி கொடுத்து தாயை தவற விட்டு

யாருமே இல்லாது வேறோர் நாட்டுக்கு அகதித் தஞ்சம் கோரிச் சென்று

குடிவரவுத்துறையின் தடுப்பு முகாமில் காத்திருந்தார்கள்.



தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மனநலங்களை பேணும்

அமைப்பொன்று அங்கு செயற்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் தினமும்

தடுத்து வைக்கப்பட்டவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களை

பரிசீலித்து அதில் உள்ள துயரம் நிறைந்த சம்பவங்களை தூக்கிப்பார்த்து

அவற்றினடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சிலரை அழைத்து

கதைத்து அவர்களது மனோபலங்களை கூட்டுவதற்கு முயற்சி

செய்வார்கள்.



இந்த வகையான பரிசீலனையின் வரிசையில் அடுத்த படியாக தேவகியும்

மாலதியும் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு

அழைக்கப்பட்டிருந்தார்கள்.



அது ஒரு விசாலமான அறை. நான்கு பக்கச் சுவர்களுக்கும் வெள்ளை

நிறத்திலான வர்ணம் பூசப்பட்டிருந்தது. நடுவில் ஓர் வட்ட மேசை

போடப்பட்டு அதில் மேசை விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அந்த விரிப்பிலே

புள்ளிமான் கலைமான் இரண்டும் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

அவற்றினைத் தொடர்ந்து இரண்டு குட்டி மான்கள் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த மேசையைச் சுற்றி நான்கு பச்சை நிறத்திலான பிளாஸ்ரிக்

கதிரைகள் போடப்பட்டு அக்கதிரைகளில் இருப்பவர்களின் பாவனைக்கென

நான்கு தண்ணீர்ப் போத்தல்களும் வைக்கப் பட்டிருந்தன.



இங்கு தான் மாலதியும் தேவகியும் அழைத்து வரப்பட்டு உட்கார

வைக்கப்பட்டிருந்தார்கள். சில நிமிடங்களில் மனநலம் பேணும்

அமைப்பைச் சேர்ந்த அம்மையார் ஒருவரும் மொழிபெயர்ப்பாளர்

ஒருவரும் உள்ளே வந்து மற்ற இரு கதிரைகளிலும உட்கார்ந்த

அம்மையார் தனது பெயர் திருமதி மாக்கிரட் என்றும் தாம் வந்த

நோக்கத்தையும் சொல்ல மொழிபெயர்ப்பாளர் அப்படியே மொழி

பெயர்த்தார்.



இவ்வாறே அம்மையார் சொல்லச் சொல்ல ஒரு சொல்லுத்தப்பாது

விளக்கமாக விபரித்துக் கொண்டிருந்தார் மொழிபெயர்ப்பாளர்.



" நீங்கள் உங்களது வீட்டைப் பற்றியும் அப்பாவின் இழப்பைப் பற்றயும்

அம்மாவை தவற விட்டதைப் பற்றியமே எண்ணிக் கவலைப்பட்டுக்

கொண்டிருப்பீர்கள்........

இரவு நித்திரைக்குப் போனாலும் அந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

திரும்பத்திரும்ப நினைவுக்கு வந்து பழைய வற்றை மீட்டும்....,...

நித்திரையும் வராது... அப்படியிருந்தும் உடல் அசதியில் தூங்கி விட்டாலும்

கனவுகளில் பழைய நினைவுகள் வந்து துன்புறுத்தும்............



இது மட்டுமல்லாமல் ஒரு செயலில் மனதை நிலை நிறுத்த முடியாமல்

மனம் தத்தளிக்கும்....



உதாரணத்துக்கு உங்கள் மொழி மேம்பாட்டுக்காக இங்கு நடக்கும்

ஆங்கில வகுப்புக்களில் கலந்து கொள்வீர்கள் ஆனாலும் உடல் வகுப்பில்

இருக்கும், ஆனால் மனம் உங்களது பழைய துயரங்களையும்

ஏக்கங்களையுமே நினைவு படுத்தி ஊசலாடும்................

இதனால் கிரகிக்கும் தன்மை இல்லாதிருக்கும்...............

திடீர் திடீரென அடக்க முடியாத கோபம் வரும்.... .....

சில வேளைகளில் குற்ற உணர்ச்சிகள் உங்களை தாழ்வு

மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும்..... ...............

அடிக்கடி ஞாபக மறதிகள் உண்டாகும்....................



இவ்வாறு பல கஸ்ரங்களுக்கு முகம் கொடுப்பீர்கள்.............

இவற்றை எல்லாம் திரும்பத்திரும்ப மனதில் ஓட விடுவதால் ஏற்படும்

பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.



புதியவர்களுடன் நட்பாக பழக முடியாதிருக்கும்..............

வேலைகள் தேடுவது கஸ்ரமாக இருக்கும்..............

ஆங்கில மொழி படிப்பது போன்ற இன்னும் பல விடயங்கள் உங்களுக்கு

கடினமாக இருக்கும்...........



இதனால் இதனை நீங்கள் மறக்க முற்பட வேண்டும். இவற்றை மறக்க

அல்லது குறைக்க காலையில் எழுந்து சிறிதளவேனும் உடற்பயிற்சி

செய்யுங்கள்.............

உடல் அசதியினால் இரவு நித்திரை விரைவில் வந்து விடலாம்.



அதே போல், மூச்சுப் பயிற்சி ஒன்றுள்ளது............

அதனை நீங்கள் செய்யலாம்.



அதாவது மூச்சை உள்ளிளுக்கும் போது ஒன்று...... இரண்டு.... மூன்று ... என

ஒரே இடைவெளியில் ஐந்து வரை எண்ணி மூச்சை இழுத்து அடி

வயிற்றில் சேமித்து அப்படியே ஒன்று தொடக்கம் ஏழு வரை எண்ணி

அடக்கி வைத்திருந்து பின்னர் ஒன்று தொடக்கம் எட்டு வரை எண்ணி

வெளியில் விட வேண்டும்.



வெளிவிடும் போது உங்களது துன்பங்கள் எல்லாம் வெளியில் செல்வதாக

கற்பனை பண்ணி மூச்சை வெளிவிட வேண்டும்.



இவ்வாறு நான்கு அல்லது ஐந்து தடவைகள் செய்யலாம். இப்படி

செய்வதால் உங்களது கவலைகள் துன்பங்கள் சிலதை குறைத்து மனதை

ஒருநிலைப்படுத்தலாம். இதனூடாக உங்களது துன்ப துயரங்களை

குறைக்க முயற்சி செய்யலாம்.



என்று கூறி முடித்த மொழி பெயர்ப்பாளர் அம்மையாரைப் பார்க்க .............



ஏதாவது கேள்வியிருக்கிறதா என்று அவர்களிடம் கேட்கும் படி

முன்பிருந்த சகோதரிகளைக் காட்டினார்.



மொழிபெயர்ப்பாளரும் அவர்களிடம் கேட்டார். ஆனாலும் இருவரும்

குனிந்த தலை நிமிராது மாலதி மேசைவிரிப்பிலிருந்த கலைமானைத்

தடவிக்கொண்டிருந்தாள்.



தேவகி அவற்றையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். மேசை விரிப்பில்

இருந்த மான்குட்டிகள் மீது இரண்டு மூன்று கண்ணீர்த்துளிகள் விழுந்து

கிடந்தன.



மொழிபெயர்ப்பாளர் கேட்டும் பதிலும் சொல்லாமல் நிமிர்ந்தும் பாராமல்

இருந்த சகோதரிகளை பார்த்து பரிதாபப்பட்ட மொழிபெயர்ப்பாளர்

மாலதியின் கையில் தட்டினார்.



" ஐயோ... அம்மா.... " என்று பலத்த சத்தத்துடன் வீறிட்டுத் துள்ளினாள்

மாலதி. அவளைப் பார்த்து தேவகியும் திடுக்கிட்டு " ஆ............." என்று கத்தி

விட்டாள்.



இதனை சற்றும் எதிர்பார்க்காத அம்மையார்,



" சரி நீங்கள் சென்று உங்களது அறையில் ஓய்வெடுங்கள்.. பிறகு மீண்டும்

சந்திப்போம்.... " என்று கூறி அனுப்பி விட்டார்.



வரும் வழியில் மாலதியும் தேவகியும் கதைத்துக் கொண்டு வந்தார்கள்...



" தேவகி.... அந்த மேசை விரிப்பிலிருந்த மான் கூட்டத்தைப் பார்க்க எங்கட

வீட்டு நினைவு தானெடி வந்தது........."



" ஓமக்கா..... எனக்கும் தான்... அந்த கலைமானைப் பார்க்க அம்மாவின்ர

நினைப்புத் தான் வந்தது....?



கண்களில் வழிந்த நீரைத் துடைத்தவாறே சொன்னாள் தேவகி.

Thursday, September 20, 2012

என் ஆசைகள்




உன் விழியில் என் முகம்பார்த்து

உன் உதட்டில் என் சுவையறிந்து

உன் மார்பில் என் தலையணைத்து

ஒரு கோடி ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டும்



என் வாழ்நாளில் உனை இந்த

உலகம் சுற்றிக் காட்ட வேண்டும்

உன் ஆசைக் கனவு அறிந்து

அவற்றை நனவாக மாற்றிட வேண்டும்



பொன் போலே உனை நானும்

பண்ணோடு இசை அமைத்து

எப்போதும் என்னுயிர்ச் சுருதி

ஆசையாக மீட்டிட வேண்டும்



உன் மடியில் தலை வைத்து

உன் முகத்தைப் பார்த்துக் கொண்டு

என் உதட்டில் புன்னகையிட்டு - நான்

ஒரு நொடியில் சாக வேண்டும்.



இவ்வாசை என்வாழ்வில்

மாறாமல் நடந்துவிட்டால்

இவ்வுலகில் பாக்கியசாலி

எனையன்றி யாருமில்லை.

Monday, September 17, 2012

எல்லாமே காலனிட்ட கட்டளை..!



பரந்தவான் பரப்பினிலே ஒளிர்கின்ற வெண்ணிலவே

பறந்தஎன் பெற்றோரை பார்த்திருந்தால் சொல்நிலவே

தங்கையைநான் உமைப்போலே காத்திடுவேன் பார்த்திருப்பேன்

உங்கள்பிள்ளை நானென்றும் உறுதியோடு வாழ்ந்திடுவேன்



பெற்றோரை இழந்தோரை அநாதையென்று சொல்கின்றார்

மற்றோரை இருப்போரை இயலாதவரென்று ஏசுகின்றார்

கற்றோரை படித்திருக்கும் முட்டாளென்று இகழ்கின்றார்

எப்பேரை இவர்களின்னும் விட்டாரென்று தெரியவில்லை.



வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசுமிந்த உலகினிலே

அலையாடும் வழியினிலே அசைந்தாடும் நாணல்போலே

அவரோடு சேர்ந்திருந்து வாழ்ந்திட வேண்டுமம்மா

எம்மோடு துணையிருந்து நல்லவழி காட்டிடம்மா.



சொல்வோரின் கதைகேட்டு சோர்ந்துபோகும் இதயம்

கல்லாகி விடுகிறது மறுநாளின் உதயம்

சொல்லாலே கொல்கிறார்கள் ஒவ்வொரு செல்களாய்

வேலாலே கொன்றிடலாம் ஒரேயொரு நொடியினிலே.



என்மைநீ தவிக்கவிட்டு ஏனம்மா சென்றுவிட்டாய்

நான்செய்த குழப்படிகள் உனக்கன்று பிடிக்கலையோ

தங்கைக்கு பேனாகொடுக்க மறுத்தது பொறுக்கலையோ

நானிப்போ நல்லபிள்ளை எம்மோடு வந்துவிடம்மா.



காலத்தில் எல்லாமே காலனிட்ட கட்டளைதான்

நாமென்ன செய்துவிட்டோம் உமைக்கொன்ற பாவியர்க்கு

காலமொரு பதில்சொல்லும் கயவர்செய்த கொடுமைகட்கு

துக்கங்கள் ஏதுமின்றி சுதந்திரமாய் உறங்கிடம்மா.

Friday, September 14, 2012

சிந்தனைக்கு

Wednesday, September 12, 2012

புரிந்திடாத அர்த்தங்கள்





பெண்ணவளின் பார்வையிலே பலகோடி அர்த்தங்கள்

பெருங்கணக்குப் போட்டாலும் புரிந்துவிடாது அதன் நுட்பங்கள்

இமைவேறு புருவம்வேறு அர்த்தங்கள் சொல்லும் - கண்

மணி அங்கு நடனமாடி கதை ஒன்று பேசும்



ஏக்கமாய் தூக்கமாய் நோமலாய் இருக்கலாம்

கோபமாய் சோகமாய் தாபமாய் இருக்கலாம்

நாணமாய் காதலாய் ஆசையாய் இருக்கலாம்

வேட்மைகயாய் வீரமாய் விவேகமாய் இருக்கலாம்



அவர்களாய் வாய்திறந்து சொல்லாத வரைக்கும் - நாம்

அறிந்து கொள்ள முடியாது அப்பார்வையின் அர்த்தத்தை

பரிந்து பரிந்து நாம் பசுமையாய்ப் பேசினாலும்

பகிரவே மாட்டார்கள் விரும்பாத அர்த்தத்தை



புரியாத புதிராய் இருக்கும் அப் பார்வையை

புதுமை இந்த உலகினிலும் புரியவே முடியவில்லை

இல்லாத ஒன்றினை கண்டுகொள்ளும் விஞ்ஞானிகள்

ஏனிதனைக் கண்டுகொள்ள முயற்சிகளை எடுக்கவில்லை



காலாதி காலமாய் கைமாறி வரும் அர்த்தம்

கனவிலும் வந்திடாது ஆண்களுக்கதன் நுட்பம்

ஏனிந்த வம்பு என்று ஒதுங்கியே நின்றிடாது

கனிந்த அவள் பார்வைக்கு அர்த்தங்கள் காணவேண்டும்



அப்பார்வை அர்த்தங்கள் இலகுவிலே புரிந்து விட்டால்

முப்புரமும் எரித்த அந்த சிவனாரே வந்தாலும்

அப்புரத்தில் உள்ள இளம் க(ன்)னியவளின் பார்வைக்கு

பதிலளிக்க வருவோரை யாரும் தடுக்க இயலாது.



Monday, September 10, 2012

சொற்பனம்



பால் வெள்ளை நிலவினிலே

பரந்த பெரும் பஞ்சணையில்

ஒய்யாரமாய் நான் இருக்க

ஓரக்கண்ணால் நீ பார்க்க

வெட்கத்தில் நான் தலை குனிய

உன்கரம் என் தலை கோதி

என் தலை நிமிர்த்திப் பார்த்து

இதழ்களில் உன் இதழ் பதித்து

ஊட்டி விட்டாய் உற்சாகத்தை

வெண்ணிலவும் வெட்கத்தில்

தன்னை மறைத்துக் கொள்ள

எமைச் சுற்றி கும்மிருட்டு

கருங்கலரில் படர்ந்திருக்க

இச்சாட்டில் நான் உன்னை

இறுக்கமாகக் கட்டித் தழுவ

தேடினேன் உன்னை என்

இரு கரம் கொண்டு,

புரண்டு வந்து விழுந்து விட்டேன்.

அப்போது

காலைச் சேவலும் கூவிற்று

கடிகாரத்தில் அலாரமும் அடித்திற்று

அப்போது தான் புரிந்து கொண்டேன்

நான் கண்டது கனவு என்று!!!!

Friday, September 7, 2012

எப்போது கூடுவது ஒரு கூட்டில்?




உன்னை நான் கரம் பிடித்து

ஊர் உலகம் கூட்டிச் சென்று

உன்னோடு நான் ஒன்றி இருந்து

ஊஞ்சலாடி மகிழ்வது எப்போது?



காலம் கரைகிறது தன் பாட்டில்

கயவர்கள் இருக்கிறார்கள் அவர் பாட்டில்

நாங்களும் இருக்கிறோம் எம் நாட்டில்

எப்போது கூடுவது நாம் ஒரு கூட்டில்?



கடவுளும் திறக்கவில்லை தன் கண்களை

முப்பொழுதும் தொழுகிறோம் அவர்களை

எப்போதும் நினைக்கவில்லை எங்களை

புகழ்கிறார்கள் மேன்(மென்)மையாக தங்களை.



நாம் இன்னும் நம்புகின்றோம் உம்மை

காத்துவிடும் என்றென்றும் எம்மை

சாத்துவோம் உமக்கு என்றும் மாலை

போற்றுவோம் எப்போதும் எம் வாழ்வில்!.

Wednesday, September 5, 2012

நீ என் பக்கத்தில் இருந்து விட்டால்...!


காலையிலே கண்விழித்து - உன்

கயல் விழிகளைப் பார்க்கையிலே

அணை பிரித்துப் பாய்கிறது

பெரு வெள்ளமாய் உற்சாகம்



சோர்ந்து போய் நானும் தொடர்ந்து படுத்திருக்கையிலே

உந்தனது கண்கள் எனக்குத் மட்டும் துணையாக, 

கட்டளை இடுகின்றன, எழுந்து பணி செய்வதற்கு,

உற்சாகத்துடன் விரைவாய் தொடர்கின்றேன் வேலைகளை.



சோகத்தில், கோபத்தில் சோர்ந்து போய் நானும்

படுக்கையில் விழுந்து துடித்திருக்கும் போது

உந்தனது புன்னகை வடிகாலாய் அமைந்து

எந்தனது உணர்வுகளுக்குத் தெளிவினைத் தருகின்றது.



உன் புருவங்களின் இடையினிலே அழகாக வீற்றிருக்கும்

வட்டமாக ஒட்டியுள்ள கருமை நிறப் பொட்டினிலே

குவிக்கின்றேன் ஒன்றாக்க, எந்தனது மனத்தினையும்

குவிப்பதற்கு எம்வாழ்வில் நன்நான்கு செல்வங்களையும்.



என்றுமே நீ எந்தன் பக்கத்தில் இருந்து விட்டால்

சோகமோ கோபமோ நெருங்கிவிட அஞ்சிவிடும்

காலத்தின் ஆசியுடன் உன்னை நான் கைபிடித்து

என்றும் உன்னை ஆக்கிடுவேன் இவ்வுலகின் ராணியாக.

Saturday, September 1, 2012

முட்டி நாமும் முயற்சி செய்வோம்




தாழ்வு மனப் பான்மை கொண்டு

தரணியில் சும்மா இருந்து விடாது

தொட்டாச் சிணுங்கி போல நாமும்

பட்டதற்கெல்லாம் சுருங்கி விடாது

தன் நகத்தை உடைத்து பட்டை தீட்டி

தன்னைத் தயார்படுத்தும் கழுகு போலே

முன்னுக்கு நாமும் வரவேண்டும்

விந்தைகள் பல படைத்திட வேண்டும்



வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்து - எம்

வழ்க்கைக் காலத்தைக் கரைத்து விடாது

வாய்ப்புக்களைத் தேடிச் சென்று

வரலாறு உலகில் எழுதிட வேண்டும்



"முடியாது" என்று உங்கள் மனதில்

மந்திரம் போல் உச்சரித்திருந்தால்

முடியால் தான் போய் விடும் - உங்கள்

முயற்சிகள் எல்லாம் முடிவினிலே.



"முடியும்' என்று நினைத்து நீங்கள்

முடிந்தவரை முயற்சி செய்தால்

கனியும் அந்த வேலை - உமக்கு

பாலில் பழம் நழுவியது போல்



எம்மை நாமே தாழ்த்திக் கொண்டு

எட்டி நாங்கள் இருந்து விடாது

முட்டி நாமும் முயற்சி செய்வோம்

தொட்டு விட அந்த வெற்றிக் கனிகளை

Sunday, August 26, 2012

ஐ லவ் யூ....





உலகமே கொண்டாடும்

ஓரோவியமாய் மோனாலிசா- ஆனால்

என் மன உலகில் வலம் வரும்

உயிரோவியமாய் நீ.





இலங்கையில் போற்றப்படும்

அழகோவியமாய் சிகிரியா - ஆனால்

என் மனதில் வீற்றிருக்கும்

அழகோவியமாய் நீ.



உன்னை நான் பார்க்கையிலே

சொல்லாமலேயே குவிகிறது என்னிதழ்கள்

முத்தமொன்று கொடுப்பதற்கும்

பதிலுக்குப் பல பெற்றுக் கொள்வதற்கும்


உன் விழிகளைப் பார்க்கையிலே

தன்னாலே அசைகிறது என் உதடுகள்

அப்போது ஒலிக்கிறது மெல்லிய நாதமாய்

ஐ லவ் யூ.... ஐ லவ் யூ என்று

Saturday, August 18, 2012

எப்போது நீ வருவாய்..?

எப்போது நீ வருவாய்..?



கண்களினால் கதை சொல்லி - என்

சிந்தையிலே புதைந்து விட்டாய்

பண்பல சேர்த்து பாடலொன்று பாடினாலும்

விந்தையாக மாட்டாது உந்தனது கண்கதை


பூச்சரம் தொடுத்து நீ குழலிலே சூடினாலும் - உன்

புன்னகை விஞ்சுகிறது பூமலரின் அழகினையும்

பொன்நகை தேட நாம் விண்ணுயரச் சென்றாலும் - உன்

புன்னகைக்கு ஈடாக இவ்வுலகினிலே ஏதுமில்லை.


பொட்டொன்று நெற்றியிலே வைத்து நீ - என்னை

சட்டென்று வீழ்த்திவிட்டாய் உன்வசமாய்

கட்டு ஒன்றைப் போட்டு விட்டேன் நிரந்தரமாய் - அது

என்றென்றும் தளர்ந்து அவிழ்ந்து விடாத படி


உந்தன் கண்பார்த்துக் கதைபேசி நாள் முழுதும்

எந்தன்தலை உந்தன் மடியில் வைத்துறங்கி

சொந்தமாக ஆக்கியுன்னை தூக்கிக் கொண்டு

சொர்க்கம் வரை காட்டுவேன் நிச்சயமாய்


இன்றும் எந்தன் கண்முன்னால்

நிழல் போலே இருக்கின்றாய்

நிஜமாக என் முன்னால்

எப்போது நீ வருவாய்....?

Sunday, August 12, 2012

மனித மனங்களின் சிந்தனை தான் எத்தனை வகை?




உங்களது சிந்தனைகள் எப்போதும்

உள்ளதை மட்டும் பார்த்துக் கொண்டால்

நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்கலாம்.


உங்களது சிந்தனைகள் எப்போதும்

இல்லாததைச் சிந்தித்துக் கொண்டிருந்தால்

நீங்கள் எப்போதும் ஒரு விடயத்தில்

உங்களது மனதைச் செலுத்தி வெற்றி பெற முடியாது


உங்களது சிந்தனைகள் எப்போதும்

இடக்கு முடக்காக சிந்தித்துக் கொண்டிருந்தால்

நீங்கள் எப்போதும் நிம்மதியாக வாழ முடியாது.


இதில் நீங்கள் எந்த வகை ?????

Tuesday, July 17, 2012

பதிலொன்று கொடுத்திடுங்கள் இந்த பாவிகளுக்கு...!!

நாய் படாப்பாடு பட்டு - அந்த

நரக லோகம் தாண்டி வந்து

நடுக்கடலில் பயணம் செய்து

நல்வாழ்வு தேடி வந்து

தொட்டோம் இந்த பொன் பூமியை


அத்தியாவசியத் தேவைகள் தந்து

அதிலிருந்த அனைவரையும்

அன்பாகத் தாங்கி நின்று

அரவணைத்தார்கள் எம்மவரை

நெக்குருகிப் போனோம் - அவர்களின்

அன்பு உள்ளக் கருணை கண்டு.


ஒருவருடம் கழித்து விட்டு

ஒரு கடதாசித் துண்டு தந்து

குற்றங்கள் ஏதுமின்றி

குதர்க்கமான பதில் சொல்லி

குத்தரிசி போல் எம்மை

அவித்துக் குத்தி சமைக்கிறார்கள்.


மண்பானை உடைந்து அந்த

அடுப்பினுள் விழுந்த கதையாய்

எம் வாழ்வின் பகுதியெல்லாம்

அழிகிறது தடுப்பினிலே

வருடங்கள் மூன்று கடந்து விட்டாலும்

காணவில்லை இன்னும் எமக்கொரு தீர்வை.


அழுது புலம்புவதற்கு எம் கண்களில் நீருமில்லை

சிரித்துக் கும்மாளமடிப்பதற்கு உதட்டினில் வீரமுமில்லை

நெஞ்சினிலே ஈரமுள்ள இப்பூமி இதயங்களே

பதிலொன்று கொடுத்திடுங்கள் இந்த பாவிகளுக்கு - நாம்

சிரித்துச் சிறகடித்ப் பறப்பதற்கு...!

அழுது எம் துயரங்களை மறப்பதற்கு...!!

Saturday, July 7, 2012

What a Amazing...!!!












Thursday, June 28, 2012

நீயில்லாமல் நானில்லை


உந்தனது அரவணைப்பினிலே


உருள்கிறது என்னுலகம்

உன் கவனிப்பிலே

விரிகிறதென் தனியுலகம்

இவ்வுலகுக்கு எப்படி ஒரு சூரியனோ...?

இருள் கவிந்த இரவுக்கு எப்படியொரு சந்திரனோ?

அப்படியே

ஒரே ஒரு சூரியன்... ஒரே ஒரு சந்திரன்...

நீ எனக்கு...!


நீயில்லாமல் நானில்லை

உனது பிரதியாக இவ்வுலகில் வாழ்ந்து

உந்தனது கனவுகளை நனவாக்கி

உன் எண்ணத்தைப் பிரதிபலிப்பேன் நான்.


கடவுள் என்று சொல்லிப் பலர்

காணாத ஒன்றுக்கு கரம் குவிப்பர்

கண்கண்ட தெய்வம் தாயை

கடைக்கோடியில் தரம் பிரிப்பர்.


ஆறு அறிவு மனிதனுக்கென்று

அறிந்த பலர் சொன்னாலும்

சுருக்கிப்பலர் தமதறிவை

கருக்கிச் சரையில் வைத்திட்டார்.

நல்லது சொல்லி, தட்டித் திருத்தி

வளர்த்திடு என்னை வல்லவனாக - உன்

சொல்லது மீறா கட்டித் தங்கமாய்

உயர்ந்திடுவேன் இவ் வையகத்திலே...!!!

Saturday, June 23, 2012

இல்லறம் இனிக்க தினமும் செய்ய வேண்டியவை.


10 Tips to Help Your Marriage Last


10. Be Sensitive
10. Be Sensitive e1332259549910 10 Tips to Help Your Marriage Last
Make an extra effort to know if your spouse is being offended on the words that you said or the actions that you have done unintentionally. Do things without being asked because your spouse would feel that he or she is so special to you. Remember the times that you were in the courtship stage.

9. Make Plans
9. Make Plans e1332259574865 10 Tips to Help Your Marriage Last
Majority of marital problems happen because a plan is not included in the relationship. This is where financial challenges happen, especially if you have kids already and you are paying immediate bills and other expenses at home. It is true that money is not the center of happiness at home, but it is the main cause of all marriage dissolutions aside from unrealized incompatibility prior to marriage, according to reports.

8. Make Surprises
8. Make Surprises e1332259597858 10 Tips to Help Your Marriage Last
Courtship does not end when you get married. In fact, it should grow stronger as years of togetherness increases. It would keep the love burning because it tickles and giggles you more because it makes both of you remember the sweet moments when you were still single.

7. Say Thank You
7. Say Thank You e1332259620400 10 Tips to Help Your Marriage Last
Aside from the word “I Love You”, the word “Thank You” is one of the magical words that would bring music to your spouse’s ears. Appreciating what your partner has done for you, whether he or she cooked for you or brought something important for you, one should remember that gratitude motivates and inspires anyone to continue to do good and be at their best at all times.

6. Remove Distractions
6. Remove Distractions e1332259650966 10 Tips to Help Your Marriage Last
Once you have an ample time to talk with each other, don’t focus on television, your laptop, and even your mobile phones. Put them all away or anything that would cause division when you are together. Chatting at times would allow you to know what happened with each other’s day, when you were not together.

5. Set a Regular Date
5. Set a Regular Date e1332259687741 10 Tips to Help Your Marriage Last
Don’t just go on a date if it’s your anniversary or birthday. You have to set a regular time and day, which is just for both of you, without your kids or anyone else with you. You have to include it with all your must haves, when you do your couple planning.

4. Forgive and Don’t Make History of Sins
4. Forgive and Don’t Make History of Sins e1332259734225 10 Tips to Help Your Marriage Last
Of course, anyone make mistakes and no one can really be a perfect partner for their spouse. Weaknesses and differences are the reasons that would cause wrong decisions. Hence, you have to talk things over and find time to forgive. Of course, there are simple mistakes that can be forgiven where you just move on. But the bottom line, you need to discuss matters promptly so you could avoid digging with past sins or mistakes.

3. Resolve Any Problem before Sleeping
3. Resolve Any Problem before Sleeping e1332259757741 10 Tips to Help Your Marriage Last
Don’t end the night without resolving any concern or problem that transpired that day. Talk it over so you’ll be able to sleep well and you could face the day with smiles on your faces. You may not be able to settle it at once but at least you have resolved a part of it.

2. Be Honest At All Times
2. Be Honest At All Times e1332259788769 10 Tips to Help Your Marriage Last
Trust is the result of love that you have for each other. If you really love each other, you would be honest with your partner at all times even if that would cause conflict or pain to him or her. It means that you don’t keep a secret message from your partner on your mobile phones; you don’t send a private message in a social networking site, and even go on a date alone with an opposite sex. If you do, you must inform your wife or husband.

1. Say I Love You Often
1. Say I love you Often e1332259812619 10 Tips to Help Your Marriage Last
Say “I love you” as often as possible such as when you wake up in the morning, when you hug him or her, when you see each other after a day’s work, when you send a text message, and even if you don’t feel like saying it. The more you say it, the more you could feel that your love increases each day.