Wednesday, September 5, 2012

நீ என் பக்கத்தில் இருந்து விட்டால்...!


காலையிலே கண்விழித்து - உன்

கயல் விழிகளைப் பார்க்கையிலே

அணை பிரித்துப் பாய்கிறது

பெரு வெள்ளமாய் உற்சாகம்



சோர்ந்து போய் நானும் தொடர்ந்து படுத்திருக்கையிலே

உந்தனது கண்கள் எனக்குத் மட்டும் துணையாக, 

கட்டளை இடுகின்றன, எழுந்து பணி செய்வதற்கு,

உற்சாகத்துடன் விரைவாய் தொடர்கின்றேன் வேலைகளை.



சோகத்தில், கோபத்தில் சோர்ந்து போய் நானும்

படுக்கையில் விழுந்து துடித்திருக்கும் போது

உந்தனது புன்னகை வடிகாலாய் அமைந்து

எந்தனது உணர்வுகளுக்குத் தெளிவினைத் தருகின்றது.



உன் புருவங்களின் இடையினிலே அழகாக வீற்றிருக்கும்

வட்டமாக ஒட்டியுள்ள கருமை நிறப் பொட்டினிலே

குவிக்கின்றேன் ஒன்றாக்க, எந்தனது மனத்தினையும்

குவிப்பதற்கு எம்வாழ்வில் நன்நான்கு செல்வங்களையும்.



என்றுமே நீ எந்தன் பக்கத்தில் இருந்து விட்டால்

சோகமோ கோபமோ நெருங்கிவிட அஞ்சிவிடும்

காலத்தின் ஆசியுடன் உன்னை நான் கைபிடித்து

என்றும் உன்னை ஆக்கிடுவேன் இவ்வுலகின் ராணியாக.

Print this post

No comments: