Thursday, September 20, 2012

என் ஆசைகள்




உன் விழியில் என் முகம்பார்த்து

உன் உதட்டில் என் சுவையறிந்து

உன் மார்பில் என் தலையணைத்து

ஒரு கோடி ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டும்



என் வாழ்நாளில் உனை இந்த

உலகம் சுற்றிக் காட்ட வேண்டும்

உன் ஆசைக் கனவு அறிந்து

அவற்றை நனவாக மாற்றிட வேண்டும்



பொன் போலே உனை நானும்

பண்ணோடு இசை அமைத்து

எப்போதும் என்னுயிர்ச் சுருதி

ஆசையாக மீட்டிட வேண்டும்



உன் மடியில் தலை வைத்து

உன் முகத்தைப் பார்த்துக் கொண்டு

என் உதட்டில் புன்னகையிட்டு - நான்

ஒரு நொடியில் சாக வேண்டும்.



இவ்வாசை என்வாழ்வில்

மாறாமல் நடந்துவிட்டால்

இவ்வுலகில் பாக்கியசாலி

எனையன்றி யாருமில்லை.

Print this post

No comments: