Monday, September 10, 2012

சொற்பனம்



பால் வெள்ளை நிலவினிலே

பரந்த பெரும் பஞ்சணையில்

ஒய்யாரமாய் நான் இருக்க

ஓரக்கண்ணால் நீ பார்க்க

வெட்கத்தில் நான் தலை குனிய

உன்கரம் என் தலை கோதி

என் தலை நிமிர்த்திப் பார்த்து

இதழ்களில் உன் இதழ் பதித்து

ஊட்டி விட்டாய் உற்சாகத்தை

வெண்ணிலவும் வெட்கத்தில்

தன்னை மறைத்துக் கொள்ள

எமைச் சுற்றி கும்மிருட்டு

கருங்கலரில் படர்ந்திருக்க

இச்சாட்டில் நான் உன்னை

இறுக்கமாகக் கட்டித் தழுவ

தேடினேன் உன்னை என்

இரு கரம் கொண்டு,

புரண்டு வந்து விழுந்து விட்டேன்.

அப்போது

காலைச் சேவலும் கூவிற்று

கடிகாரத்தில் அலாரமும் அடித்திற்று

அப்போது தான் புரிந்து கொண்டேன்

நான் கண்டது கனவு என்று!!!!

Print this post

No comments: