Sunday, May 26, 2013

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத பழமொழிகள்



1. ஒல்லியான உடம்பு உறுதியான உடம்பு.

2. கொழுப்பு மண்டி குண்டி பெருத்தால் குந்தி எழுந்தால் கூட கூப்பாடு போடணும்.

3. அன்றே கொல்வது காட்டுப்புளி. நின்று கொல்வது வீட்டுப் புளி.

4. அளவான உறக்கம் வளமான வாழ்வு

5. உழைக்காத உடம்பு உழுத்துப்போன உலக்கை.

6. மூன்று வேளை உள்ளே. மூன்று வேளை வெளியே.

7. சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்.

8. உண்ணா நோன்பு உயிர் வாழும் நோன்பு

9. உடற்பயிற்சி உடம்புக்கான கவசம்.

10. வெயிலை மறந்தால் வாழ்வெல்லாம் துயரே.

Tuesday, May 21, 2013

உனைவிட இல்லை புதுமையே

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு

காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன்

துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே

உனைவிட இல்லை புதுமையே  

Monday, May 20, 2013

பாசத்துக்கு ஏங்கிய பாலன்


" அங்கை போகாதே ... அங்கே போனால் பேய் பிடிக்கும்..... "

என்று அவளது வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சனசமூக நிலையத்துக்கு தனது மகன் பாலாவை போகவிடாது வெருட்டிக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.

பாலாவுக்கு அப்போது தான் 2 வயது ஆகிக் கொண்டிருந்தது. அவனுக்கு 8 வயதில் அக்காவும் 5 வயதில் அண்ணாவும் இருந்தனர். பாலன் சரியான சுட்டிப் பயல். அவனுடைய சில வேடிக்கையான நடவடிக்கைகளை கண்ணம்மா அயலவர்களிடமும் காண்பவர்களுக்கும் சொல்லி மகிழ்வாள்.


யாராவது அவனது வீட்டுக்கு வந்திருந்தால் அவர்களுடன் பாலா ஒட்டிவிடுவான். அவர்கள் மீது பாசமழை பொழிந்து தன்னை அவர்கள் மறக்க முடியாத அளவுக்குச் செய்து விடுவான்.