Sunday, August 26, 2012

ஐ லவ் யூ....





உலகமே கொண்டாடும்

ஓரோவியமாய் மோனாலிசா- ஆனால்

என் மன உலகில் வலம் வரும்

உயிரோவியமாய் நீ.





இலங்கையில் போற்றப்படும்

அழகோவியமாய் சிகிரியா - ஆனால்

என் மனதில் வீற்றிருக்கும்

அழகோவியமாய் நீ.



உன்னை நான் பார்க்கையிலே

சொல்லாமலேயே குவிகிறது என்னிதழ்கள்

முத்தமொன்று கொடுப்பதற்கும்

பதிலுக்குப் பல பெற்றுக் கொள்வதற்கும்


உன் விழிகளைப் பார்க்கையிலே

தன்னாலே அசைகிறது என் உதடுகள்

அப்போது ஒலிக்கிறது மெல்லிய நாதமாய்

ஐ லவ் யூ.... ஐ லவ் யூ என்று

Saturday, August 18, 2012

எப்போது நீ வருவாய்..?

எப்போது நீ வருவாய்..?



கண்களினால் கதை சொல்லி - என்

சிந்தையிலே புதைந்து விட்டாய்

பண்பல சேர்த்து பாடலொன்று பாடினாலும்

விந்தையாக மாட்டாது உந்தனது கண்கதை


பூச்சரம் தொடுத்து நீ குழலிலே சூடினாலும் - உன்

புன்னகை விஞ்சுகிறது பூமலரின் அழகினையும்

பொன்நகை தேட நாம் விண்ணுயரச் சென்றாலும் - உன்

புன்னகைக்கு ஈடாக இவ்வுலகினிலே ஏதுமில்லை.


பொட்டொன்று நெற்றியிலே வைத்து நீ - என்னை

சட்டென்று வீழ்த்திவிட்டாய் உன்வசமாய்

கட்டு ஒன்றைப் போட்டு விட்டேன் நிரந்தரமாய் - அது

என்றென்றும் தளர்ந்து அவிழ்ந்து விடாத படி


உந்தன் கண்பார்த்துக் கதைபேசி நாள் முழுதும்

எந்தன்தலை உந்தன் மடியில் வைத்துறங்கி

சொந்தமாக ஆக்கியுன்னை தூக்கிக் கொண்டு

சொர்க்கம் வரை காட்டுவேன் நிச்சயமாய்


இன்றும் எந்தன் கண்முன்னால்

நிழல் போலே இருக்கின்றாய்

நிஜமாக என் முன்னால்

எப்போது நீ வருவாய்....?

Sunday, August 12, 2012

மனித மனங்களின் சிந்தனை தான் எத்தனை வகை?




உங்களது சிந்தனைகள் எப்போதும்

உள்ளதை மட்டும் பார்த்துக் கொண்டால்

நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்கலாம்.


உங்களது சிந்தனைகள் எப்போதும்

இல்லாததைச் சிந்தித்துக் கொண்டிருந்தால்

நீங்கள் எப்போதும் ஒரு விடயத்தில்

உங்களது மனதைச் செலுத்தி வெற்றி பெற முடியாது


உங்களது சிந்தனைகள் எப்போதும்

இடக்கு முடக்காக சிந்தித்துக் கொண்டிருந்தால்

நீங்கள் எப்போதும் நிம்மதியாக வாழ முடியாது.


இதில் நீங்கள் எந்த வகை ?????