Friday, October 19, 2012

உன்னால் மட்டும் எப்படி?





உலகினிலே

துன்பத்தில விழுந்த மனிதன்

அதிலிருந்து மீள்வதற்கு கஸ்ரப்படுகிறான்

இன்பத்தில் திளைத்த மனிதன்

மேலும் திளைக்க அவதிப்படுகிறான்.

பாடசாலை மாணவனோ

விரைவில் படித்து முடிக்க ஆசைப்படுகிறான்

வேலை செய்யும் ஆசிரியரோ

விரைவில் நிறைவுபெற வேண்டுகிறார்

வீட்டினிலே பெண்களோ

சுவையாக சமைக்க ஆசைப்படுகிறாள்

அவற்றைச் சாப்பிடுபவர்களோ

குறை கூறிச் சாப்பிடுகிறார்

எழுத்தாளன் எழுத நினைக்கிறான்

உழைப்பாளி உழைக்க நினைக்கிறான்

விவசாயி அறுவடை செய்ய நினைக்கிறான்

எல்லோருமே ஒவ்வொன்றை நினைக்கிறார்கள்

அதனை அடைந்து விட நினைக்கிறார்கள்

சிலர் நேரம் போதவில்லை என்கின்றனர்

பலர் நேரம் போகுதில்லை என்கின்றனர்.

ஆனால்

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது

எந்தவிதமான சலனமுமின்றி

பளிங்கில் வழிந்தோடும் நீர் போல

அமைதியாக

தெளிவாக

நகரமுடிகிறது....?

கற்றுத் தா எனக்கு

நிம்மதியைக் காண்பதற்கு.....!!!

Tuesday, October 16, 2012

வான்சிறப்பு/THE BLESSING OF RAIN



வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று

The genial rain ambrosia call;
The world but lasts while rain shall fall.

 
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்

தப்புஆய தூஉம் மழை

The rain begets the food we eat;
And forms a food and drink concrete.



விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து

உள்நின்று உடற்றும் பசி

Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth



ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளம்குன்றிக் கால்

Unless the fruitful shower descend,
The ploughman's sacred toils must end.



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

Destruction it may sometimes pour,
But only rain can life restore.



விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

No grassy blade its head will rear,
if from the cloud no drop appear.



நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி

தான்நல்காது ஆகி விடின்

The ocean's wealth will wasre away,
Except the cloud its stores repay.



சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.



தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்காது எனின்.

Were heaven above to fail below,
Nor alms nor penance earth would show.



நிர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.  

Water is life that comes from rain
Sans rain our duties go in vain.

Wednesday, October 10, 2012

திரையில் தெறித்தவை




மனிதன் மீது மண்ணுக்காசை

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது -அதை

மனம் தான் உணர மறுக்கிறது.
 
 
 
எட்டித் தொடும் வயது இது

ஒரு வெட்டுக்கத்தி போல் இருக்கும்

அதிசயம் என்னவென்றால் -அதன்

இரு பக்கமும் கூர் இருக்கும்

கனவுக்கு செயல் கொடுத்தால்

அந்த சூரியனில் செடி முளைக்கும்

புலன்களை அடக்கி வைத்தால் - தினம்

புதுப் புது சுகம் கிடைக்கும்

காலில் குத்தும் ஆணி, உன் ஏணி என்று காமி

Sunday, October 7, 2012

அருமையான தீர்ப்பு





ஒக்டோபர் ஐந்து

ஒருதொகுதி மக்களின்

ஒருமித்த விடுதலைக்காய்

உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கிற்கு

நீதிபதிகள் ஒன்றுசேர்ந்து கட்டளையிட்ட

ஒரு அருமையான தீர்ப்பு



பொதுவான காரணம் சொல்லி

மதுக்காரன் போலவர் கண்மூடித்தனமாக

கட்டவிழ்த்து விட்ட பொய்க்கதைக்கு

நீதிபதிகள் ஏழுபேர் சேர்ந்து

மீதியின்றி விளக்கமளித்து

முழங்கிய பெரும் தீர்ப்பு



கர்ப்பிணி, சிறு பாலகன்,

குழந்தைகள், விதவைகள்,

குடும்பங்கள், தனிநபர்கள், என

எவரையும் விட்டுவிடாது,

கம்பி வேலிக்குள் அடைப்பதற்கு

வழிவகுத்த சட்டத்தினை

அடித்து நொறுக்கிய ஒரு தீர்ப்பு.



மனைவியை, குழந்தையை,

கணவனை, அண்ணனை,

அம்மாவை, தம்பியை, என

அனைத்து உறவுகளையும்

மனிதாபிமானம் ஏதுமின்றி,

அக்குவேறாகப் பிரித்து

அவர் தம் ஜனநாயக உரிமைகளை மறுத்த

அநியாயச் சட்டத்தின் இரும்புக் கதவினை

சுக்குநூறாக்கிய ஒரு தீர்ப்பு.



தமிழர்களை வைத்து

அரசியல் நாடகம் நடாத்திய

கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும்

அவர்களது காது பிடித்து முறுக்கி

கரவுபிடித்து தடுத்துவைத்த அப்பாவிகளுக்கு

வழிகொடுக்க தறைஞ்சு விட்ட

மாபெரும் தீர்ப்பு.

Thursday, October 4, 2012

தமிழனுக்கோர் காலம்வரும்



உலகெல்லாம் ஒளிகொடுக்கும் பகற்கால சூரியனே

இரவுக்கு அழகளிக்கும் வானத்து சந்திரனே

உயிர்களுக்கு உயிரளிக்கும் உயிர்மூச்சுக் காற்றே

அனைத்தையும் தாங்கிநிற்கும் பூமியின் நிலமே,



பார்த்துக்கொண்டா இருக்கின்றீர் தமிழர்படும் அவஸ்த்தைகளை

தூர்த்துவிடப் பார்க்கிறார்கள் எம்மிளம் பிஞ்சுகளை

வேரிறுக்கி இருக்குமெங்கய் கலாச்சாரப் பண்புகளை

தோலுரித்து துவம்சமாக்க துடிக்கிறார்கள் துஷ்டர்கள்.



பாரிறுக்கப் பரவியிருக்கும் ஈழத்தமிழ் குஞ்சுகளை

கோடிழுத்துப் பெரும்பெரும் சட்டங்களை உருவாக்கி

நூலறுத்துச் சட்டங்களின் வலைகளிலே விழச்செய்து

கழுத்தறுக்கத் துடிக்கிறார்கள் கயவர்கள் எம்நாட்டினிலே



ஐந்துக்கு ஒன்றுஎன்று ஆமியினை நிலைநிறுத்தி

ஜந்துக்கள் போலவர் பெருகிப்போய் இருக்கிறார்கள்

மந்தைகள் போலத்தமிழ் மக்களை மேய்த்துவிட

சந்துக்கள் எங்குமவர் உயிரெடுக்கும் இரும்புடனே



வங்கத்து வழிவந்த காட்டுமிராண்டிக் கூட்டங்கள்

சங்கத்துக் காலம்முதல் வாழ்ந்துவரும் தமிழர்களை

செங்குருதி வடித்துஅவரை கொன்றுவிடத் துடிக்கிறார்கள்.

கங்கையிலே போட்டு கரைத்துவிடத் தவிக்கிறார்கள்.



காலத்தின் சுழற்சியிலே தமிழனுக்கோர் காலம்வரும்

நாளத்தில் சூடேற்றி மானமுள்ள தமிழர்களாய்

வானத்தில் இருந்துநாம் குதித்துநடை போடுவோம்

தமிழனுக்கோர் நாடமைத்து தரணிக்குப்பறை சாற்றுவோம்.

Monday, October 1, 2012

சிறையில் பூத்த மலர்




சிறையினிலே சிக்கிய ஆண்கிளியைத் தேடி

கடலினிலே படகேறி புறப்பட்டது பெண்கிளி

தரையினிலே கால்பட்டதும் கண்டுகொண்டது சோடியினை

கரையில்லாப் பிரிவுக்கு வந்ததொரு பெருவிடிவு



சோடியைக் கண்டதும் துள்ளியது இருமனமும்

ஓடியே சென்றிரண்டும் கட்டியே புரண்டது

தேடிய கிளியிரண்டும் சேர்ந்ததும் சொல்லணுமோ

பாடியே கொஞ்சியிரண்டும் மகிழ்ந்துதான் இருந்ததுவே.



சிப்பிக்குள் முத்தாக கருவாக உருவாகி

கம்பிக்குள் வித்தாக தருவாக வெளியாகி

அம்பறாவில் இருக்குமந்த அம்புபோல் சிறையினிலே

தம்பியாய் அண்ணனுக்கும் அக்காளுக்கும் இருக்கின்றான்



உடும்பு பிரட்டி தவள்ந்து நடந்து

ஓட பழகி ஒன்றாக விழளயாடி

அம்மா சொல்லி கதைக்கப் பழகி

அக்கன்னா வரைக்கும் சரளமாய் சொல்கின்றான்.



வருடங்கள் இரண்டு கடந்துதான் போச்சு

கருடர்கள் இன்னும் இரங்கவே இல்லை

நெருடல்கள் எப்போதும் ஒவ்வொருத்தர் மனதிலும்

எப்போது விடுதலை இம்முடிவில்லாச் சிறையிருந்து.



மனிதாபிமானம் மனிதஉரிமை ஜனநாயகம் என்று

மந்திரமாக சாலவார்த்தைகள் சரளமாகப் பேசி

தந்திரமாக எல்லோரையும் காலவரையறை ஏதுமின்றி

தொந்தரவின்றி அடைத்துள்ளனர் சிங்காரச் சிறையினிலே



தனியான படையொன்று மிருகங்களுக்கு உண்டு

அநியாய தடைகளுக்கு எவையுமே இல்லை

சிறுவர்கள் பெரியோர்கள் கற்பிணிகள் முதற்கொண்டு

சிறையிலே அடைத்துவைத்து சித்தமிழக்கச் செய்கிறார்கள்.



தப்பேதும் அறியாத இச்சிறையில் பூத்தமலருக்கு

எப்போது முடிவில்லாத் தடுப்பிலிருந்து விடுதலை

முப்போதும் கடவுளைத் தொழுகின்ற பக்தர்களே

இப்போது செய்யுங்கள் இம்மலரது விடுதலைக்காய்.