Thursday, October 4, 2012

தமிழனுக்கோர் காலம்வரும்



உலகெல்லாம் ஒளிகொடுக்கும் பகற்கால சூரியனே

இரவுக்கு அழகளிக்கும் வானத்து சந்திரனே

உயிர்களுக்கு உயிரளிக்கும் உயிர்மூச்சுக் காற்றே

அனைத்தையும் தாங்கிநிற்கும் பூமியின் நிலமே,



பார்த்துக்கொண்டா இருக்கின்றீர் தமிழர்படும் அவஸ்த்தைகளை

தூர்த்துவிடப் பார்க்கிறார்கள் எம்மிளம் பிஞ்சுகளை

வேரிறுக்கி இருக்குமெங்கய் கலாச்சாரப் பண்புகளை

தோலுரித்து துவம்சமாக்க துடிக்கிறார்கள் துஷ்டர்கள்.



பாரிறுக்கப் பரவியிருக்கும் ஈழத்தமிழ் குஞ்சுகளை

கோடிழுத்துப் பெரும்பெரும் சட்டங்களை உருவாக்கி

நூலறுத்துச் சட்டங்களின் வலைகளிலே விழச்செய்து

கழுத்தறுக்கத் துடிக்கிறார்கள் கயவர்கள் எம்நாட்டினிலே



ஐந்துக்கு ஒன்றுஎன்று ஆமியினை நிலைநிறுத்தி

ஜந்துக்கள் போலவர் பெருகிப்போய் இருக்கிறார்கள்

மந்தைகள் போலத்தமிழ் மக்களை மேய்த்துவிட

சந்துக்கள் எங்குமவர் உயிரெடுக்கும் இரும்புடனே



வங்கத்து வழிவந்த காட்டுமிராண்டிக் கூட்டங்கள்

சங்கத்துக் காலம்முதல் வாழ்ந்துவரும் தமிழர்களை

செங்குருதி வடித்துஅவரை கொன்றுவிடத் துடிக்கிறார்கள்.

கங்கையிலே போட்டு கரைத்துவிடத் தவிக்கிறார்கள்.



காலத்தின் சுழற்சியிலே தமிழனுக்கோர் காலம்வரும்

நாளத்தில் சூடேற்றி மானமுள்ள தமிழர்களாய்

வானத்தில் இருந்துநாம் குதித்துநடை போடுவோம்

தமிழனுக்கோர் நாடமைத்து தரணிக்குப்பறை சாற்றுவோம்.

Print this post

No comments: