Monday, October 1, 2012

சிறையில் பூத்த மலர்




சிறையினிலே சிக்கிய ஆண்கிளியைத் தேடி

கடலினிலே படகேறி புறப்பட்டது பெண்கிளி

தரையினிலே கால்பட்டதும் கண்டுகொண்டது சோடியினை

கரையில்லாப் பிரிவுக்கு வந்ததொரு பெருவிடிவு



சோடியைக் கண்டதும் துள்ளியது இருமனமும்

ஓடியே சென்றிரண்டும் கட்டியே புரண்டது

தேடிய கிளியிரண்டும் சேர்ந்ததும் சொல்லணுமோ

பாடியே கொஞ்சியிரண்டும் மகிழ்ந்துதான் இருந்ததுவே.



சிப்பிக்குள் முத்தாக கருவாக உருவாகி

கம்பிக்குள் வித்தாக தருவாக வெளியாகி

அம்பறாவில் இருக்குமந்த அம்புபோல் சிறையினிலே

தம்பியாய் அண்ணனுக்கும் அக்காளுக்கும் இருக்கின்றான்



உடும்பு பிரட்டி தவள்ந்து நடந்து

ஓட பழகி ஒன்றாக விழளயாடி

அம்மா சொல்லி கதைக்கப் பழகி

அக்கன்னா வரைக்கும் சரளமாய் சொல்கின்றான்.



வருடங்கள் இரண்டு கடந்துதான் போச்சு

கருடர்கள் இன்னும் இரங்கவே இல்லை

நெருடல்கள் எப்போதும் ஒவ்வொருத்தர் மனதிலும்

எப்போது விடுதலை இம்முடிவில்லாச் சிறையிருந்து.



மனிதாபிமானம் மனிதஉரிமை ஜனநாயகம் என்று

மந்திரமாக சாலவார்த்தைகள் சரளமாகப் பேசி

தந்திரமாக எல்லோரையும் காலவரையறை ஏதுமின்றி

தொந்தரவின்றி அடைத்துள்ளனர் சிங்காரச் சிறையினிலே



தனியான படையொன்று மிருகங்களுக்கு உண்டு

அநியாய தடைகளுக்கு எவையுமே இல்லை

சிறுவர்கள் பெரியோர்கள் கற்பிணிகள் முதற்கொண்டு

சிறையிலே அடைத்துவைத்து சித்தமிழக்கச் செய்கிறார்கள்.



தப்பேதும் அறியாத இச்சிறையில் பூத்தமலருக்கு

எப்போது முடிவில்லாத் தடுப்பிலிருந்து விடுதலை

முப்போதும் கடவுளைத் தொழுகின்ற பக்தர்களே

இப்போது செய்யுங்கள் இம்மலரது விடுதலைக்காய்.

Print this post

No comments: