Friday, October 19, 2012

உன்னால் மட்டும் எப்படி?





உலகினிலே

துன்பத்தில விழுந்த மனிதன்

அதிலிருந்து மீள்வதற்கு கஸ்ரப்படுகிறான்

இன்பத்தில் திளைத்த மனிதன்

மேலும் திளைக்க அவதிப்படுகிறான்.

பாடசாலை மாணவனோ

விரைவில் படித்து முடிக்க ஆசைப்படுகிறான்

வேலை செய்யும் ஆசிரியரோ

விரைவில் நிறைவுபெற வேண்டுகிறார்

வீட்டினிலே பெண்களோ

சுவையாக சமைக்க ஆசைப்படுகிறாள்

அவற்றைச் சாப்பிடுபவர்களோ

குறை கூறிச் சாப்பிடுகிறார்

எழுத்தாளன் எழுத நினைக்கிறான்

உழைப்பாளி உழைக்க நினைக்கிறான்

விவசாயி அறுவடை செய்ய நினைக்கிறான்

எல்லோருமே ஒவ்வொன்றை நினைக்கிறார்கள்

அதனை அடைந்து விட நினைக்கிறார்கள்

சிலர் நேரம் போதவில்லை என்கின்றனர்

பலர் நேரம் போகுதில்லை என்கின்றனர்.

ஆனால்

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது

எந்தவிதமான சலனமுமின்றி

பளிங்கில் வழிந்தோடும் நீர் போல

அமைதியாக

தெளிவாக

நகரமுடிகிறது....?

கற்றுத் தா எனக்கு

நிம்மதியைக் காண்பதற்கு.....!!!

Print this post

No comments: