Sunday, October 7, 2012

அருமையான தீர்ப்பு





ஒக்டோபர் ஐந்து

ஒருதொகுதி மக்களின்

ஒருமித்த விடுதலைக்காய்

உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கிற்கு

நீதிபதிகள் ஒன்றுசேர்ந்து கட்டளையிட்ட

ஒரு அருமையான தீர்ப்பு



பொதுவான காரணம் சொல்லி

மதுக்காரன் போலவர் கண்மூடித்தனமாக

கட்டவிழ்த்து விட்ட பொய்க்கதைக்கு

நீதிபதிகள் ஏழுபேர் சேர்ந்து

மீதியின்றி விளக்கமளித்து

முழங்கிய பெரும் தீர்ப்பு



கர்ப்பிணி, சிறு பாலகன்,

குழந்தைகள், விதவைகள்,

குடும்பங்கள், தனிநபர்கள், என

எவரையும் விட்டுவிடாது,

கம்பி வேலிக்குள் அடைப்பதற்கு

வழிவகுத்த சட்டத்தினை

அடித்து நொறுக்கிய ஒரு தீர்ப்பு.



மனைவியை, குழந்தையை,

கணவனை, அண்ணனை,

அம்மாவை, தம்பியை, என

அனைத்து உறவுகளையும்

மனிதாபிமானம் ஏதுமின்றி,

அக்குவேறாகப் பிரித்து

அவர் தம் ஜனநாயக உரிமைகளை மறுத்த

அநியாயச் சட்டத்தின் இரும்புக் கதவினை

சுக்குநூறாக்கிய ஒரு தீர்ப்பு.



தமிழர்களை வைத்து

அரசியல் நாடகம் நடாத்திய

கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும்

அவர்களது காது பிடித்து முறுக்கி

கரவுபிடித்து தடுத்துவைத்த அப்பாவிகளுக்கு

வழிகொடுக்க தறைஞ்சு விட்ட

மாபெரும் தீர்ப்பு.

Print this post

No comments: