Tuesday, December 22, 2015

கோடி உனக்கு வணக்கங்கள்


காலை வேளை எழுந்து வந்து, உனை நான் பார்க்கின்றேன்
சிறிய புன் சிரிப்புடனே, எனையாளும் ஈஸ்வரியே
கறுகறுத்த கண்மணியால், எனையாட்டும் சங்கரியே
கோடி கோடி வணக்கங்கள்.... கோடி உனக்கு முத்தங்கள்.....

நீலச் சேலை தனையுடுத்து..., சிங்காரமாய் சிகை அமைத்து...,
கை நிறைய வளையலிட்டு..., காது கனக்க கடுக்கன் தூக்கி...,
நெற்றி நடுவில் பொட்டு வைத்து..., கண்களை உற்று உருட்டிப்பார்த்து...,
சிலையாட்டம் நின்றுகொண்டு.., சுண்டியிழுத்துக் கொல்கின்றாய்.

உன் வதனம் பார்க்கையிலே.., ஒருகோடி ஆனந்தம்..,
ஊற்றுப் போலே பொங்குகிறது... இதயம் துள்ளிக் குதிக்கிறது...
மயிர்க்கூச்சிட்டு நிற்கிறது... மனதில் ஆர்வம் பொங்குகிறது...
பெரும் பேறு பெற்றேன் என்று, பெருமை கொள்ள வைக்கிறது.

நீலச்சாரி அம்மா என்று.. உனை ஆசையுடன் அழைக்கையிலே..,
சாலச்சிரிப்பை உதட்டிலிட்டு.. தென்றலாய் எனைத் தழுவுகின்றாய்.
வேலவனின் அழைப்புடனே, உனையணைத்துக் கொள்கின்றேன்.
பலகோடி ஆண்டுகள் உன்னுடன் பதினாறும் பெற்று வாழ்ந்திட..!

Wednesday, December 16, 2015

என்னை ஆட்சி செய்


என்னவளே
உன் முகம் பார்த்து
உன் கண்கள் பார்த்து
உன்னை என்னுள் இருத்தி
உறுதி எடுத்துக் கொள்கின்றேன்
என் தேவதையாக
என்றுமே நிரந்தரமாக....!

என்றும் என்  இனியவளே
உன் கண்மணியாடும் திசையில்
நான் ஆடுவேன்
குண்டூலம் போல்
என் இதயத்தின் துடிப்பாகி
என்னை ஆட்சி செய்...!

என் உடலோடு  உடலுரசி
உடம்பெல்லாம் சூடேத்தி
மெய்மறந்து என்னை
இறுக்கி அணைத்து
இம்சை செய்.....!

புன்னகையை முகத்திலிருத்தி
பூரண மலர்ச்சியுடன் - எம்
பெயர் சொல்ல உலகுக்கு
முத்தொன்று கொடுத்திடு
என்றுமே அவன் முதல்வனாக....!

மூன்றெழுத்து மந்திரம்


அம்மா என்ற
மூன்றெழுத்து மந்திரத்தை
மூச்சு முழுக்க சொன்னால்
முழுமையாக அகலும்
மூண்டிருக்கும் துன்பங்கள்.
உன்னைச்சுற்றிச் சுழலும் - நீ
ஏங்கியிருக்கும் இன்பங்கள்.

அம்மாவின் ஆசி –அவள்
அன்புள்ளோர்க்கு இருந்தால்
அகிலத்தையே தூக்கி நிறுத்தும்
வல்லமை பெற்றிருப்பாய்.

ஆண்டவன் யாரென்று
யாருமே பார்த்ததில்லை
தெரியாத ஒன்றை
தெய்வமே என்கின்றனர்.

எமைப்படைத்த ஈஷ்வரி
அம்மா உடனிருக்க
சும்மா சுழல்கின்றார்
வணக்கமே செய்யாமல்.

அம்மாவை வணங்கிட்டால்
அனைத்துமே பெறுவாய்
அவளையே தொழுதெழுதால்
அனைவர் ஆசியும் பெறுவாய்.

Saturday, December 5, 2015

அதன் பெயர் தான் அன்பு

 

கண்களால் கதை சொல்லும் கயல்விழி அழகியே,
கனவோடு நீ சொல்லும் பெருங்கதைதான் என்ன...? - என்
செவிகளுக்கு எட்டவில்லை, கடல் கடந்திருக்கும் எனக்கு..!

தலையணையைக் கட்டியணைத்து, கதை பேசும் கிளியே,
என்ன தான் பேசுவாய், எப்போதும் அதனுடனே....?
முயற்சி செய்தும் முடியவில்லை, நானுமதைக் கேட்பதற்கு…!

உன்னங்க அழகுகளை, கண்ணாடியில் பார்க்கையிலே
என்னதான் சொல்கின்றாய், ஆறுதலாய் அவைகளுக்கு?
முழுதுமாய் யோசிக்கிறேன், முடியவில்லை அறிவதற்கு...!

காதல் படம் பார்க்கையிலே, முகம் சிவந்து போகின்றாய்.
எவற்றையெல்லாம் நினைத்து நீ, வெட்கப்பட்டுக் கொள்கின்றாய்...?
ஒவ்வொரு அனுபவத்தையும், ஒன்றும் விடாது அலசுகிறேன்..
துப்பொன்றும் கிடைக்கவில்லை, அந்த காரணத்தை தெரிவதற்கு...

திருவாய் மலர்ந்து பேசுகையில் “அவருக்கு அவருக்கென்று” சொல்கின்றாய்,
என்னதான் அவருக்கென்றுன் மனதில் பூட்டி வைத்துள்ளாய் ?
படிப்படியாக நானும், பலவற்றை படித்துப் பார்த்தேன்
படியவில்லை என் மனதில், பக்குவமாய் எதுவென்று...!

உங்களுக்கு ஒன்றுமே, புரியாதென்று நீ சொன்ன போது,
பூதமாய் எழுந்து நின்றது  என் மூளையில் பெருங்கேள்வி...!
எனக்கொன்றும் விளங்காதா என்று விறுமாப்பாய் கேட்டது..
“ஓமடா மொக்கா....” என்று திட்டியது என்னை என் மனமே.
வழுவிடாது எந்தனுக்கு, வகுப்பொன்றையும் எடுத்தது.

கற்பனையில், உன்னையவள், சொரூபித்துப் பார்க்கிறாள்.
ஒவ்வொரு நிமிடமும், அவள் உன்னுடனேயே வாழ்கிறாள்.
எதையெல்லாம் பார்த்தாலும், தன் நினைவுகளை மீட்கிறாள்.
மொத்தத்தில் அவள் உன்னுள், ஒன்றியே வாழ்கிறாள்.

அனைத்தையும் உந்தனது, மூளையிடம் கேட்டுப் பார்த்தால்,
அதற்கதன் விளக்கமில்லையேல், அதன் பதில் தெரியாது முழிக்கும் - ஆனால்
அவற்றுக்கெல்லாம் விடையை என்னிடம் நீ கேட்டுப்பார்
உளமார உனக்குப் பெரும் விளக்கமொன்றே தந்திடுவேன்
என்று சொல்லி ஏக்கத்துடன், பெரு மூச்சொன்றை விட்டது.

புரிந்து கொண்டேன் ஒவ்வொன்றின், புதுப்புது அர்த்தங்கள்..
இப்போது தெரிந்து கொண்டேன் அவளாசை எண்ணங்கள்..
அதன் பெயர் தான் அன்பு என்று ஆழமாகக் கண்டுகொண்டேன்..
அவள் அழகுமனதை தெளிவாக தெரிந்து கொண்டேன்.


Wednesday, November 25, 2015

களித்திருக்க ஆசை

 
வில்லங்கமாக உன்னை
வில் போல் வளைத்து
உன் நெற்றிப் பொட்டிலும்
முத்தான முளிக்கண்களிலும்
உப்பியிருக்கும் கன்னங்களிலும்
செக்கச் சிவந்த உதடுகளிலும்
வெண்சங்குக் கழுத்தினிலும்
உருண்டு திரண்டிருக்கும் மாங்கனிகளிலும்
அதன் கீழ் இடையிலும்
தொப்புளிலும்..., தொடையிலும்...,
உச்சி முதல் பாதம் வரை
ஒரு இடமும் தப்பாது
உச்சுக் கொட்டி
உம்மா கொடுத்து
கட்டியணைத்து
இருவரும் களித்திருக்க ஆசை. 

Tuesday, November 24, 2015

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,

பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,

இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்

அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்

(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,

தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை

நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்

வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.


Tuesday, November 17, 2015

என்னுள் சில ஆசைகள்







 

என் இதயத்தில் குடியிருக்கும்,
என்னுயிர் தேவதையே....,
என்னுள் சில ஆசைகள்,
உன்னோடு நான் இருக்கையிலே....!

உந்தனது கை கோர்த்து,
ஒரு பெருந் தெருவினிலே,
அனைவரும பார்த்து ரசிக்க,
உலவி வர ஆசை.....!

உந்தனது மடியினிலே
என் தலை வைத்திருந்து
மணிக்கணக்கில் சிரித்துப் பேசி,
மனமாற ஆசை......!

நீ தூங்கி இருக்ககையிலே,
மங்கிய நிலவொளியினிலே,
உன் வதனம் பார்த்திருந்து,
உன் அழகை ரசிக்க ஆசை......!

தலை குளித்து வரும் உனக்கு,
உன்கேசம் துவட்டி விட்டு,
மண மணக்க அகல் போட்டு,
தலை வாரிப் பின்னி விட ஆசை.....!

நீ கொள்ளும் கோபத்தில்,
உன் கண்களும் உதடுகளும்,
சொல்லத் துடிக்கும் ஒவ்வொரு வரிகளையும்,
தெளிந்தறிய ஆசை......!

உன் கொஞ்சல் கதைகள் கேட்டு,
உன் சிணுங்கல் நுணுக்கம் அறிந்து,
உன் ஆசைகளை நிறைவேற்ற,
எப்போதும் ஆசையோ ஆசை....!

உன் கண்ணோடு கண் சேர்த்து,
உன் இதயம் சொல்லும் வார்த்தைகளை,
அர்த்தம் பிசகாது அறிந்து கொண்டு,
ஓராயிரம் ஆண்டுகள் உன்னோடு வாழ ஆசை.....!


Wednesday, November 4, 2015

நடிப்பா...?


Monday, October 19, 2015

நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா?



ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையிலே ...

அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
இவன் விழிகளில் விடுகதையோ ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?

ஒத்தையிலே ...

நமக்கென இருந்தோமே தினசை பிரிந்தோமே
திசைகளை பிரிந்தோமே
கல்யாண காற்றினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

ஒத்தையிலே ....

Wednesday, September 30, 2015

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு..

வெள்ளை முளி வெளிய தெரிய
கள்ள முளி முளிக்கும் போது
என் உசிரு ஒடுங்குது
ஈரக்குல நடுங்குது....
 
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்கிற?
 
 

Wednesday, March 11, 2015

இனிமையே வா வா


மாலை விளக்கேற்றும் நேரம், மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம், தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ
இனிமையே வா வா