Saturday, November 10, 2012

வெற்றிக்கனிகள் பறிப்போம்.

எவனொருவன் ஒன்றை விரும்பி விட்டால்

அதனை தடுப்பதற்கு யாராலும் முடியாது - அணு

குண்டுதான் திடீரென வீழ்ந்தங்கு வெடித்தாலும்

தூளாகிப் போகுமது அவன்முயற்சியின் முன்னாலே.



எவற்றையும் மனதார விரும்பிநாம் ஆசைப்பட்டால்

எப்போதும் அவற்றையே உள்ளத்தில் நினைத்திருந்தால்

தானாக வந்துதிக்கும் பெரும்பெரும் ஐடியாக்கள்

தரமாக வடிவமைக்கும் அவ்வனைத்தையும் அடைவதற்கு.



முதலிலே நாமதனை காதல்செய்ய வேண்டும் - எம்

சிந்தனை அவற்றையே நாடியிருக்க வேண்டும்

பந்தினை நீரிலமிழ்த்த மேலெழுந்து வருவதுபோல்

உந்தித்தள்ளும் எம்மனம் பற்பல வழிமுறைகளையும்.



தோல்வியொன்று வந்துவிட்டால் சோர்ந்து வீழ்ந்திடாது

மீண்டும் முயற்சிகளை தொடர்ந்திட வேண்டும்.

படர்ந்து காய்க்கும் பயற்றங்கொடி போல்

வளரும் நமக்குள்ளே நாம்விரும்பும் அறிவு



தோல்வியைக் கண்டு மனம் சோர்ந்திடாது

வெற்றியைக் கொண்டு திமிர் சேர்த்திடாது

கொற்றத் தேவியின் அருள் ஆசியுடன்

பற்றிப்பிடித்துப் படர்வோம்

வெற்றிக்கனிகள் பறிப்போம்.

Print this post

No comments: