Thursday, December 27, 2012

என் உதடுகள் மௌனமாகின்றன.



நான்

வாய் திறந்து சொல்வதெல்லாம்

வால் வைத்து விளங்கிக் கொண்டு

வாரோட்டம் ஓடி வந்து

பாயுதென்மேல் மறுமடியும்


எனக்கொன்றும் விளங்கவில்லை

எப்படித்தான் கதைப்பதென்று

எப்படி நான் கதைத்தாலும்

தப்படியாத்தான் புரிகிறது அனைவருக்கும்


எந்தனது பிழையா அல்லது

என் ஈசனது பிழையா?

தமிழ் மொழியினது திறனா அல்லது

என் அறிவினிலே குறையா?


தமிழ் தலைவனது கூற்று

பிழை பிடி உன்னிலிருந்து என்பது

அடுக்கடுக்காய் நடந்தவற்றை

பகுத்து ஆராய்ந்தும் முடியவில்லை

என்னில் பிழை கண்டு பிடிக்க


உன்னை நீ திருத்து முதலில் என்ற

விவேகானந்தரின் கூற்றுக்கிணங்கி

மௌனமாகின்றன என் உதடுகள்

சிலவற்றைக் கதைப்பதற்கு சிலரிடம்...!!

Print this post

No comments: