Tuesday, July 2, 2013

திருப்தி கொள்




எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்.

எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகு



இறைவன் உனக்குக் கொடுத்த நேரம் சொற்பமே

அந்த நேரத்தினை பிரயோசனமாகப் பயன்படுத்து.



கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே

எதிர்காலத்தைப் பார்த்து ஏங்காதே



உனக்காக இறைவன் கொடுத்தது அவ்வளவே

கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக்கொள்



எதையும் தொடர்ந்து முயற்சி செய்

அந்தந்த நேரத்தில் அதன் பயன் கிடைக்கும்.



அனைவரிடமும் ஆலோசனையைப் பெற்றுக் கொள் - ஆனால்

ஆணித்தரமான முடிவை நீயே எடு



எப்போதும் உன்னருகில் நல்லவரை வைத்துக் கொள்

இல்லையேல் உனைச்சுற்றி கெட்டவர்கள் கூடுவர்



மற்றவருடன் இணங்கிப் போகப் பழகு - ஆனால்

மற்றவருக்காக உன்னை நீ மாற்றாதே



உனக்காக நீ மகிழ்ச்சியாக இரு

நேர அட்டவணையில் இயங்கப்பழகு



எல்லாமே இலகுவாய் இருக்கக் காண்பாய்



நல்ல நண்பர்களைத் தேடிப்பிடி - உன்

வாழ்விலே நல்லாதாய் நடக்கக் காண்பாய்.

Print this post

No comments: