Saturday, June 14, 2008

பெண்ணே கொதித்தெழு....!!!


பெண்ணே!
ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழினம் போல்
ஒடுங்கி நீ படுத்திருப்பது - பெண்களின்
ஒடுக்கு முறையை காட்டவா?

வீராப்பு பேசி, விடுகதை போடும்
வீரத் தலைவிகள், விடுதலை தருவார்கள் என்று
நம்பிக்கையுடன் இருக்கிறாயா?

எல்லாமே அவர்கள் போடும் அரசியல் நாடகம்,
அவர்களை நம்பினால்,
ஒடுக்கமாக இருந்தாலும்,
நிம்மதியாக் நித்திரை அடிக்கும் நீ,
குந்தியிருந்தும் குறட்டை அடிக்க முடியாத
நிலைக்கு,
தள்ளப்படுவாய் புரிந்து கொள்.

இனியும் யோசித்துப் பலனில்லை.
ஒடுக்குமுறையை உடைத்தெறிய கிளர்ந்தெழு..
உனது உரிமை பெற்றிட துள்ளியெழு..
வரும் பகை முடிக்க கொதித்தெழு....!!!

Print this post

No comments: