Sunday, June 22, 2008

வீறு கொண்டெழுவோம்...!!!

தலை தெறிக்க ஓடி
மலை ஏறித் தாண்டினாலும்
தடை தான் தமிழனுக்கு
தரணியிலே எப்போதும்.

துரத்தி துரத்தி அடிக்கிறார்,
குண்டு போட்டு துளைக்கிறார்.
பட்டினி போட்டு வதைக்கிறார்.
தூக்கிலிட்டு கொல்கிறார்.

இதை தட்டிக் கேட்க நாதியில்லை
சர்வதேசத்தின் மனச்சாட்சிக்கு,
சிறுவர் சேர்ப்பு, பணம் வசூலிப்பு என்று
பகட்டுக் கண்ணீர் வடிக்குது.

நடப்பதை அடக்க முனையும்
நலன் விரும்பிகள் அனைவரும்
படியுங்கள் ஏன் நடக்குது என்பதை
அளியுங்கள் நல்ல தீர்ப்பொன்றினை.

நலிந்தவன் எங்கிருக்கின்றானோ
பலிக்கடா அவனே தான்.
வலிந்து அவனை தாக்கிவிட்டு
வலியவன் நான் தான் என்று
மார்தட்டி கொள்கின்றார்.

வீரத்தமிழனுக்கு தமிழனே உதவி
ஒன்று சேர்ந்து தட்டுங்கள்
உங்கள் கைகளை பலமாக
ஓடுவான் எதிரி எம் ஊரை விட்டு.

நாடு தாண்டி வாழும் தமிழர்
வீடு தோண்டி புதைக்கும் வரை
பொறுத்திருந்தால் முடியாது.

வீறு கொண்டெழுவோம் - எம்
வேதனையை தீர்த்திட....
உரிமையை மீட்டிட.....
சுதந்திரம் பெற்றிட....
எம் தேசத்தை ஆண்டிட....!!!

Print this post

No comments: