Monday, June 23, 2008

மனமுருகி வேண்டுகிறேன்.


கருஞ்சிவப்புத் திலகமிட்டு,
வரும் மதி நிலவே - நீ
தரும் அன்புச் சுமைகளாலே
திடும் என பருக்கின்றேன்.

நீ தான் என் உலகமென்று
நினைத்துச் சுழன்றடிக்கின்றேன்.
நான் நினைத்தது சரியென்பதை
காட்டிவிட்டாய் உன் அணைப்பினிலே.

உனது அன்புக் கணைகள்
என்னிடம் கலகங்கள் செய்கின்றன.
தினம் தினம் ஏங்குகின்றேன்
கனம் பொருந்திய உனைப் பார்க்க.

முருகன், ஜேசு, அல்லாவிடம் - மனம்
உருகி வேண்டுகின்றேன்.
பருகிட உன் அன்பினை
தருமாறு என்னிடம் உன்னை.

எல்லோரது கதைகளும் - எனக்கு
எரிச்சலாக இருக்கிறது.
சினிமா பாடல்களும் - ஏனோ
இரைச்சலாக கேட்கிறது.

ஏன் தான் எனக்கு
இவ்வளவு சோதனைகள்?
அவ்வளவும் எனக்கு
தருகிறது வேதனைகள்.

வந்துவிடு என்னிடம்
வாழ்நாள் முழுவதும்.
தருகிறேன் உன்னிடம்
என்னையே முழுமையாக.

Print this post

No comments: