Wednesday, June 18, 2008

கொடுத்துவிடு என்னிடம்...!!!


அன்பே!
கெஞ்சுகிறேன் உன்னிடம்,
கொஞ்சிவிடு என்னை,
இறுக அணைத்து....!

கொஞ்சலிலும் நீ
கஞ்சம் காட்டுகின்றாய்,
பஞ்சிப்படுகின்றாய்,
கொஞ்சம் தந்து விட...!

கொஞ்சலுக்கு உன்னிடம்
பஞ்சமா சொல்....?
வஞ்சிக்கிறாய் என்னை
கொஞ்சுவதில் நீ....!

வஞ்சிக் கொடியிவள் உன்னிடம்
தஞ்சம் அடைந்து விட்டாள்.
சிந்திக்காதே.. வந்துவிடு..,
மஞ்சத்தில் சந்திக்க....!

கொடுத்துவிடு உன்னை
முழுமையாக என்னிடம்,
வாழ்ந்திடுவேன் உன்னுடன்
என் வாழ் நாள் முழுவதிலும்...!!!

Print this post

No comments: