Saturday, June 28, 2008

வாழ்க தமிழ்......!!!


வாசமுள்ள எம்மவர் தமிழைக் காக்க,

பாசமுள்ள தமிழர் துள்ளி எழுந்து,
வேசமின்றி வரவேண்டும் முன்னுக்கு - இல்லையேல்
நாசமாகிப் போகும் நாம் கட்டிக் காத்த தமிழ்..
தோசமாகிவிடும் தமிழருக்கு.. வாழ்நாள் முழுதும்...!

காக்கவென, இப்போதே எழுந்து வராவிட்டால்
தாக்கப்பட்டு, சுக்கு நூறாகி விடும் எம் தமிழ்.
பார்க்கப் பார்க்க எரிச்சலாகும் - எம்
தாக்கப்பட்ட தமிழின் கலப்பை பார்க்கும் போதெல்லாம்...!

மறைவு தான், தமிழுக்கு விதியென்றால்
குறைவு தான் புத்தி, தமிழனுக்கு - விரைவில்
நிறைவு காண்பது அரிதாகும் தெரியுமோ?
பறைவதும் குறைந்து விடும் எம் தங்கத்தமிழில்..!

தரையில் ஊன்றிய காலைத் தூக்கி - உன்
கூரையில் வைத்து, உரக்கக் சொல்..,
பறையடித்துச் சொல், காக்க வா, தமிழை என்று,
விரைவில் சொல் தமிழ், வீழும் முன்னர்...!

மொழியின் முதன் மொழி, தமிழ் மொழி என்று,
வளிக்கு வளி, வாய் கிழியக் கத்தினால் போதாது,
அழிக்கத் துடிக்கும் அரக்கர் கூட்டங்களுக்கு,
பழியைத் தீர்த்து காப்பாற்று, எம்முயிர்த் தமிழை...!

உயிரினும் மேலான எம்முயிர்த் தமிழே...
பயிராய் நினைத்து வளர்க்கிறோம் உனை,
மயிராய் நினைத்து, யாரும் பிடுங்க நினைத்தால்
கயிறாய் ஆகி தூக்குவோம் அவர்களை...!

வாழ்க தமிழ்...! வளர்க தமிழ்...!
முதன் மொழியாக தமிழர்களுக்கு......,
பொது மொழியாக உலகத்தாருக்கு....!!!

Print this post

No comments: