Friday, June 6, 2008

என் மனமே ஆறிவிடு.....!!!


அபலை இவள் நெஞ்சிலே
கவலைகள் ஆயிரம்....!
பின்னப்பட்ட வலைகளாய்
சிக்குப்பட்டு கிடக்கின்றன....!!

அந்த கவலைகளை சொல்லி
மற்றோர் தலையில் ஏற்றிவிட,
இடம் தரவில்லை என்மனம்,
தடுக்கிறது என் சுயநலம்....!!

என்கவலை, துன்பங்கள்..
என்னோடு போகட்டும்...!
யாருக்கும் வர வேண்டாம்,
என் துன்பங்கள் போன்று....!!

கவலைகளை நினைத்து
கண்ணீர் விட்டு அழுகின்றேன்...!
என் மனமே மாறிவிடு,
அனைத்தையும் மறந்து ஆறி விடு...!!

வரப்போகும் காலங்களில் - நீ
தரப்போகும் சந்தோசத்திற்காய்,
திறந்த மனதோடு பார்த்திருக்கின்றேன்
அந்த காலத்தின் நினைவுகளுக்காய்....!!!

Print this post

No comments: