Monday, August 25, 2008

ஆசி வழங்கிடு ....!!!

வள்ளி தெய்வானையுடன்
பள்ளி கொள்ளும் முருகா..,
துள்ளி எழுந்து வா - பகைக்கு
கொள்ளி எடுத்து வைக்க....!

சொந்த வீட்டை இழந்து
பந்த பாசங்களைப பிரிந்து
கந்தக வெளி தாண்டி
குந்தியிருக்கிறோம் தெருவோரம்...!

கொடிய அரக்கர்கள் - எம்மை
துடிக்கத் துடிக்க கொல்ல
வெடி வெடித்துக் கொண்டு
பிடித்து வருகிறார் எம் தேசத்தை....!

இளக்காரம் தமிழன் என்றெண்ணி
பலாத்காரம் பண்ணி, படை அனுப்பி,
ஆரவாரமாக, ஆர்ப்பாட்டம் பண்ணி,
பூதாகாரமாக செய்கிறார், படையெடுப்பு....!

ஓடி ஓடி ஓய்ந்து விட்டோம்,
தேடிப் பகை அழிக்க - நாம்
கூடி வருகின்றோம் எல்லைகளில்
ஆசி வழங்கிடு, தமிழன் வெற்றி பெற்றிட...!

புசிப்பதற்கு ஏதுமின்றி
பசி பட்டினியோடு - நாம்
தூஸி படிந்த தெருவினிலே
நாசி காய படுத்திருக்கிறோம்....!

காற்றுக் குடித்து பசியோடு காத்திருக்கிறோம் - எம்
சோற்றுக்கே உலை வைத்த கொடியவனுக்கு
வேற்று நாடு உனது என்று விளக்கம் சொல்லி,
சாற்றிட உலகுக்கு , எம் தேசம் வேறென்று.....!

வெயில் மழை அனைத்தும் தாங்கி ,
கையில் துப்பாக்கியோடு காத்திருக்கிறோம்
பையில் போட்டு பொட்டலமாக அனுப்பி
தையில் எம் சுதந்திரம் கொண்டாட....!!!

Print this post

No comments: