Friday, August 8, 2008

வாய் திறந்து சொல்லு....!!!

இனிய காலை வணக்கம்,
தனிய சொன்னேன் உனக்கு
கனிய, உந்தன் மனம்...!

வளியில் பார்த்த உன்னை,
வழித்து எடுத்து வந்தேன்.
பழித்து விடாமல், பார்த்தவர் யாரும்..!

விழியாளின் முகத்தை
களித்துப் பார்த்து - தினமும்
விழித்து இருக்கிறேன் ....!

பழைய மரத்தில்,
தழைத்த குருத்துப் போல,
விளைந்த பயிர் நீ...!

சளைக்கவில்லை எனக்கு - உன்னை
வளைக்க நான் பட்ட பாட்டை ,
தழைக்க வைக்க எம் காதலை...!

உன் பொன்னான வாய் திறந்து,
என் உள்ளம் குளிரும் வரை சொல்லு,
"நான் உன்னை விரும்புகின்றேன்".....!!!

Print this post

No comments: