Tuesday, April 13, 2010

ஒருதாய்க்கு கன்றாக
























சான்றாக என்றும் இலக்கணமாய் நட்புக்கு
ஒன்றாக இருந்து ஒருதட்டில் உணவுண்டு
வென்றாக வேண்டும் வேற்றவர் வீம்பிலிருந்து
கன்றாக வேண்டும் ஒருதாய்க்கு உளமாற.

துன்பத்தின் போது துணிவாய் நிமிர்ந்தெழுந்து
இன்பத்தின் போது பணிவாய் மகிழ்ந்திருந்து
இரண்டும் ஒன்றென சமமாய் மதித்திருந்து
துணிவாக வாழணும் வாழ்க்கையின் வழியிருந்து.

நலமாய் எண்ணத்தை நல்லதாய் வளர்த்து
பலமாய் கருத்தை சிலையாய் வார்த்து
திடமாய் மற்றவர் உள்ளத்தை வென்று
விளைவாய் என்றும் உரமாக நன்றே.

சொந்தமாய் நீயும் உழைத்துப் பார்
சாந்தமாய் என்றும் வளர்ந்து பார்
மந்தமாய் நில்லாது கிளர்ந்து பார்
பந்தமாய் வளரும் உன்னுயிர் வேர்.

எல்லோரும் சமமென நினைத்துப் பார்
கல்லாரும் திறமென மதித்துத் தேர்
உள்ளாறும் அவர்மன ஆழத்தின் வேர்
வல்லோரும் உன்னிடம் அடக்கிடுவர் போர்.

Print this post

No comments: