ஒற்றுமையாக வாழ்

எதிர்க்கடை வேண்டும் கீரைக்கடைக்கென்பது
புதிர்போட்டு அவருடன் பொறாமைப்பட அல்ல
மற்றவரை விட முன்னேறிட என்பதே தவிர
உற்றவரை ஏறி மிதித்திட அல்ல.

கற்றவர் பலரில் உள்ள குறை
கல்லாதவரை பலதில் மறைக்கும் முறை
இல்லாதவரை ஏய்த்துப் பிழைக்கும் கறை
செல்லாதவரை தவிர்த்து கசக்கும் துறை

பெட்டிசம் எழுதி பெரியாள் ஆகி
பட்டியில் இருக்கும் மாடுகள் போல
மற்றவரை எல்லாம் துடிக்க வதைத்து
உள்ளவரை செய்வார் துன்பம் தினமும்.

என்ன செய்வான் பாவி அவன்
சொன்ன சொல்லை தாவிக் காத்து
காலம் பூரா துன்பத்தில் தவித்து
சீலம் போவான் சீராக வானில்.

திருந்திட வேண்டும் கல்வி கற்றவர்
மருந்திட வேண்டும் கல்லாதவற்கு
அழுதிட வேண்டும் செய்த பிழைக்கு
உழுதிட வேண்டும் உள்மனம் எல்லாம்.

கழுதை போல் தாழ்ந்து வாழாது
பழுதை நீக்கி வாழ்ந்து நீகாட்டு
தொழுது தினமும கடவுளை நினைத்து
கழுவு உந்தன் பாவ நாசங்களை.

இனியாவது திருந்தி ஒற்றுமையாக வாழ்
இல்லையேல் உன்னினம் மற்றவரினால் பாழ்
செய்தபிழை பொறுக்க மன்னிப்புக்கேட்டு வீழ்
சேர்ந்துவிடும் உன்னுடன் பலம்கொண்ட வேழ்.

உறுதியுடன் நின்றுஉன் இலட்சியம் நிறைவேற்று
அறுதியிட்டு கூறுஉன் இலட்சியம் இதுவென்று
மறதியின்றி நினைத்திரு தினம்தினம் அதுவொன்றை
சுருதியுடன் நிகழும் கிட்டியசில காலத்தில்

முடிந்தவரை நீ பொறாமையின்றி வாழ்
அடுத்தவரை நீ அரவணைத்துச் செல்
கொடுத்தவரை நீ மறந்ததிடாது நினை
கெடுத்தவரை நீ மறந்துவிட்டுக் கனை

வயது போனால் வழிவிடு இளையோர்க்கு
தீயது வந்தால் தேய்த்திடு அழிவதற்கு
நல்லது சொல்லி வழிகாட்டு புதியவர்க்கு
வல்லவன் நீயென்று வையகம் போற்றுதற்கு

0 கருத்து(க்கள்):