Friday, April 9, 2010

என் கனவுக்கன்னி


உன்
கருவிழித் தூண்டலிலே
கருக்கட்டியது என் காதல்.
மெருகூட்டி உருவாக்கி
தருவாக்கினேன் நான்.

உன் பார்வை வீச்சினிலே
என் பாவை சிக்கியது.
விண் உயர மூச்சொன்று
வீசி விட்டு அடங்கியது.

என் கனவுக் கன்னியென
உன்னை நான் வரித்துக் கொண்டேன்.
எந்நாளும் உன்னை நான்
கனவினிலே கண்டு வந்தேன்

உன் மீது ஆசைகள்
பன்மடங்கு வளர்த்து வந்தேன்.
கன்னத்திலே முத்தம் உனக்கு
கனவினிலே இட்டு வந்தேன்.

இப்போதும் துள்ளிக் குதிக்குதடி ஆசைகள்
எப்போதும் நான் வந்து உன்னுடன் இருப்பதற்கு.
பற்பல கனவுக்ள... விதம் விதமாக..
சொல்லவும் வேண்டுமோ வாலிபக் கனவுகளை.

காற்றாக வந்து கசமுசா செய்கின்றாய்
போர்வையுள் புகுந்து பூராயம் காட்டுகின்றாய்.
வேர்வையில் என்னை நனைத்தே விடுகின்றாய்
பார்வையில் எல்லாம் பகல்க் கனவாக..

கத்திக் கத்தி தொண்டைத் தண்ணி வற்ற
பித்துப் பிடித்து பேயாய் அலைகின்றேன்.
பத்துப் பத்தாய் வயதுகள் தாண்டி
மொத்தமாய் முப்பது முடிஞ்சு போச்சடி.

காட்டமாய் நானுன்னை கட்டி அணைக்க
வட்டமாய் நீயும் வளைந்து தாடி
திட்டமாய் நீயென்னை அழைத்துப் போக
கூட்டமாய் வாடி என்னைக் கூட்டிப்போக..

Print this post

No comments: