பிறக்கும்முன்பு கருவறையில் பத்துமாதம் சிறை
இறந்தபின்பு தரையிலுடல் உக்கும்வரை சிறை
இதைஅனைவர் அறிதெளிய உலகமெலாம் பறை
இனியாவது திருந்தட்டும் அவரிலுள்ள குறை.
பயமின்றி செய்கிறார்கள் பெரும்பெரும் கறை
அதைமறைக்க வாளெடுத்து இடுகிறார்கள் உறை
இதுதெரிந்தும் கீழிருக்குமுன் நெஞ்சிலில்லையோ மறை
அவர்கையை எடுத்துவைத்து மரத்தில்வைத்து தறை
அவரிருந்தும் எமக்கு கிடைக்கவில்லை ஒரு கரை
அமைச்சராகி ஆரவாரமாய் அமர்ந்திருந்த வரை
நாம்செய்தோம் வேலையின்றி அப்பூனைகளுக்கு சிரை
இதையெடுத்து உலகறிய ஒவ்வொறுவறுக்கும் உரை.
நான் தான் உங்கள்பிரதியென்று பிச்சை வாங்கும் துரை
வரமாட்டார் அதன்பின்னரெம் தலையில்விழுந்தாலும் நரை
அடுத்ததடவை அவர்வந்தால் தெருநாய்போல் குரை
அவரைப்போட்டு உடைத்துவிடு நடுத்தெருவில்காய்ச் சுரை
எமக்கென்று நிலம்காண உறுதிகொண்டு விரை
உறுதிகொண்டு ஆகிவிடு விவேகம் கொண்ட மரை
அடுக்கடுக்காய் நின்றுகாட்டு எதிரிக்கு உன் நிரை
கிழிந்தவலை பின்னுவது போல் எதிரியைவைத்துப் புரை.
கௌரவம் ஆடம்பரம் நீக்கு அந்தத் திரை
அவற்றையெல்லாம் கட்டுபல சாக்குசாக்காய் சரை
கொண்டுசென்று எறிந்துவிடு கடலில்கிளம்ப நுரை
அனைத்தும் தொலைஞ்சு போச்சுதென்று உன்மனது நிறை
உன்னைநீ வளர்த்துக்கொள் ஒருபெருந் துறை
அதனால்நீ சேர்த்துவிடு என்றுமழியாத் திறை
எல்லோருக்கும் அந்தமர்மம் சொல்லுஒரு முறை
அவர்வலர்ந்து வந்துவிட்டால் உன் பெருமையெண்ணி நிறை.
உலகறிய உரை
Subscribe to:
Post Comments (Atom)













0 கருத்து(க்கள்):
Post a Comment