Sunday, July 20, 2008

நான் கொடுத்து வைத்தவள்.....!!!

கனக்க அன்பு காட்டும் கணவன் கிடைத்தது,
எனக்கு நிறையவே சந்தோசம்
மனத்தின் இறுக்கங்கள் குறைய,
அனைத்தும் சொல்கிறேன் அவனிடம்...!

வேசம் போடும் உறவுகள் மத்தியில் - குன்றாத
பாசம் காட்டும் என் குடும்பம், நண்பர்கள்....! - என்
தேசம் போய் தெருவோரம் நடந்தால்
தாகம் தீருமாப்போல் பறக்குது வேதனைகள்...!

குளித்து வந்ததும் என் முகத்தில்
பனித்து துளித்த தண்ணீர் சொட்டுக்களை,
களித்துப் பார்த்து, தலை துவட்டி,
அணைத்துக் கொடுக்கும் முத்தம் - எத்தனை
பணத்துக்கும் கிடைக்காது யாருக்கும்.....!

அண்ணி, அண்ணி என்று, வாய் நிறைய அழைத்து,
தண்ணி அருவியில் ஓடுமாப்போல், பாசம் கொட்டி - முழு
வெண்ணிலவு போல் என் மனதில் பதிந்து விட்ட
மண்ணின் மைந்தர்கள் என் மைத்துனர்கள்.....!

ஏங்கிய என், மனத்தின் பாசங்களுக்கு,
தாங்கிய ஒத்தடங்கள் போல் - கணவரிடம்
வாங்கிய முத்தங்களும், அணைப்புக்களும்,
தேங்கியே விட்டன, அகலாமல் மனத்திலே....!

கொடுத்து வைத்தவள் நான்..,
எடுத்து வைக்கிறேன், விளக்கு உனக்கு - முருகா
கரும்பு போல் இனிக்கிறது வாழ்க்கை,
வாழ்த்திடு எம்மை, என்றும் சீத்தாராமனாக வாழ்ந்திட...!!!

எழுதியவர் ; ஜெய்

Print this post

2 comments:

ktsnantha said...

சீத்தாராமனாக பல்லாண்டு காலம் வாழ்க...!!!

Unknown said...

திரு/திருமதி/செல்வி நந்தா...!
மிக மிக நன்றி....!
உங்களது வாழ்த்துக்கள், திருமதி.ஜெய் அவர்களின் குடும்பத்தை வளமாக வாழ வைக்கும்..
அது சரி நீங்க, திரு..? திருமதி..? செல்வி..? எது சரி? சொல்லவே இல்லை... ஹா ஹா ஹா..!!