Friday, July 4, 2008

கொடுத்திடு விடை...!!

அன்புள்ள என் துணைக்கு,
நம்முள்ளத்தின் இணைப்பிற்கு,
உன்னுள்ளத்தின் வெளிப்பாடு தான்
என்னுள்ளத்தை ஈர்த்திழுத்தது....!

பார்த்துள்ள உன் கண்களுக்கு,
முன்னுள்ள நான் - தூண்களுக்குப்
பின்னுள்ள மறைவில், ஒளிகிறேன்
உன்னுள்ள, ஊடுருவல் பார்வையினால்...!

முகம் பார்த்து, முழுமையும் பேசி,
அகம் அறிந்து, அன்பினால் கூடி,
சதம் வருடங்கள் ஒன்று கூடி,
விதம் விதமாய், வாழ்ந்திடணும்....!

மிருதுவான உன், அணைப்பினால்,
சாதுவான நான், கட்டுண்டேன்.
பாதுகாக்க, நீ உள்ளாய் என்பதால்
சூது இன்றி தந்தேன், உன்னிடம்...!

பூராவும் நான், உனக்குத் தான்,
வேராக இருந்து, காத்திடு எனை,
நாராக கட்டுவேன், உனை என் அன்பினால்,
பாராளும் மன்னனும், வியக்கும் வகையில்...!

வேரோடி, உலகெல்லாம், விழுதெறிந்து,
பாராளும் வகையில், இரு மன்னர்கள் பெற்று ,
தாலாட்டி, சீராட்டி, அன்போடு வளர்த்து - அவர்கள்
பேயோட்ட வேண்டும், எம்மக்கள் துன்பம் தீர...!

கொடுத்திடு, விடை எனக்கு..,
தகர்த்திடு, தடை உனக்கு...,
தடுத்திடு, தனிமையை எனக்கு....,
வளர்த்திடு, அன்பு உறவினை எமக்குள்....!!!

Print this post

No comments: