Thursday, July 3, 2008

உனக்காக உயிர் வாழ்வேன்....!!!

புரிந்து கொள்கிறேன் நான் - என்மீது
எரிந்து விழும் உன்மீது தவறு இல்லை என்பதை,
சரிந்து விடுவேன் நான் என்ற பரிதாபத்தில்
பரிந்து பேசிய உன்னை வெறுக்கவில்லை நான்...!

எதையும் விட்டுக் கொடுக்கும் பெண் - தன்
"அதையும்" விட்டுக் கொடுக்க வருவாளோ சொல்..
சதையும் கதையும் தான் வாழ்க்கையா?
அசையா நம்பிக்கையும், அன்பும், பாசமும் தானே...!

இதை நீ சொல்லி - என்னிடம்
பதை பதைத்து பேசிய போது - நான் ஒரு
கதை கதைக்கவில்லை. அத்தனையும் எனக்கு நீ
விதைக்கும் விதை என்று ஏற்றுக்கொண்டேன்...!

நொந்து நீ சலித்து விடாதே..
வெந்து வெந்து நான் கருகி விடுவேன்.
பந்து போல் நாம் உலகெலாம் உருண்டோடி
வந்து காட்டுவோம், எமது வெற்றிக் கனிகளை...!

அன்று நான் உன்னிடம் சொன்னது போல்
இன்றும் உன்னிடம் திரும்பவும் சொல்கிறேன்,
என்றும் உனக்காக உயிர் வாழ்வேன் - வாழ்விலே
வென்றும் காட்டுவேன் உன் இலட்சியப் படி...!!!

Print this post

No comments: