Tuesday, April 22, 2008

அவன் கேட்ட சீதனம்


செவ்வாழை நிறத்தவள்
அம்மாளை போன்்றவள்
எந்நாளும் அவள்் முகத்தை
பார்த்தாலும் அவா அடங்கா....!

கரு நிறக் கூந்தலுக்கு
கருவேப்பிலை தைலம் தடவி
நடு உச்சி பிரித்து
ஒற்றைச்சடை பின்னலிட்டு
கன்னக்குழி விழ சிரித்து
என்னை விழ வைத்தவள்.....!

அவள் செல்லக் கதை கேட்டு
இவன் சிறையில் விழுந்தவன்
எழுந்தும் மீள விழுந்தேன்
விழுந்தது சொர்க்கம் என்பதால்...!

கிடைத்த சொர்க்கம் தொடர்ந்திருக்க - அவளை
படைத்த பெற்றோர் சூழ்ந்திருக்க
ஆழ்ந்து பேசி, என் விருப்பம் சொல்லி - அவளுடன்
வாழ்ந்து விட ஆசைப்பட்டேன், என் வாழ்நாள் முழுதும்....!

சீதனம் என்னவென படைத்தவர் கேட்க,
மூலதனம் அவள் தான் அதை கொடுங்கள் போதும்.
சீதனம் என்று இவன் கோபத்தை கிளற வேண்டாம்,
வேதனை தான் மிஞ்சும் என எகிறி நின்றான்...!

அவளிடம் கேட்கிறேன் சீதனம்.....
அதை அவள் கொடுத்தால் போதும் எனக்கு...!

என்றும் என்னருகில் அன்போடு இரு.
என் துன்பம் நீங்க, நீ சிரிப்போடு இரு.
என் கோபம் அடங்க உன் கோபம் அகற்று.
நான் சந்தோசமாக இருக்க நீ சந்தோசாமாக இரு.
ந ீசந்தோசமாக இருந்தால்
நாம் எல்லோரும் சந்தோசமாக இருப்போம்.......!

சீதனம், சீர்வரிசை சிறியோர் பேச்சு,
வேதனை பார் வரிசையில் பெருகிப ்போச்சு
பெண்கள் ஓர் வரியில் பலமாக நின்றால்
ஆண்கள் பின் வரியில் காத்திருப்பர் பெண்களுக்காய்...!

சீதனம் கூடவாங்கி திருமணம் செய்தவன்,
பிழை பிடிக்கிறான் பெண்டிலில் ஈசியாக
வாழ நினைக்கிறான் வாழ்க்கையில் ஓசியாக
தாழ வைக்கின்றார் அவனை, பெண் பெற்றோர்....!

ஊரிலே பல கதைகள் பரவுகின்றன..
அவளில் பல குறைகள் இருக்காம்,
அதனால் சீதனம் பலமாக இருக்காம்.
அவள் குறை தெரிந்து கட்டிகிட்டானாம்.
அதனால் கேட்டானாம் கூடுதல் சீதனம்....!

வீண்வம்பை விலைக்கு வாங்கும் பெற்றோரே
ஊர் வம்பை கேட்டிடுவீர் படைத்தோரே
யார் வம்பும் வராது உங்களுக்கு
நிறூத்திடுவீர் சீதனத்தை - உங்கள்
பிள்ளை நலம் வாழ........!!!

Print this post

3 comments:

Anonymous said...

welcome Mr.sivanaathan.
you are very great. all are must follow like to your poem.
i hope you.
senthishan.

Unknown said...

நன்றி Mr.senthishan,
தங்களது வருகைக்கும், கருத்துக்கும்.

Unknown said...

உண்மையிலேயே அவனுக்கு ஒரு "ஓ" போடலாம்... பெற்றோருக்கும் நல்ல கடி.. வாழ்த்துக்கள்.