Saturday, April 5, 2008

வெறுத்துப்போனாலும் பொறுத்தே போகிறேன்…!



பஞ்சணையில்
நெஞ்சணைத்து
படுத்துறங்கியது பல நேரம்…….!
வேட்கையிலே உதடிணைத்து
கொஞ்சி மகிழ்ந்தது பல நேரம்……!!

விழியோடு விழி பார்தது
விசும்பு பேசியது பல நேரம்……!
மூச்சு முட்ட கட்டிப்பிடித்து
உருண்டு புரண்டது பல நேரம்……!!

கொஞ்சி முடித்து குதூகலித்து
வெறுத்துப் போச்சுதிப்போ……!
நாச்சியாரை வெறுத்துவிட....,
மாமியாரை ஏவுகிறான்…….!!

மாமியாரின் கொடுமையிலே
மண்ணே மக்கி உக்கிப் போகும்…!
தண்ணிக்கே விக்கல் எடுத்து விடும்……!!

சோகத்தில் அவள்…!
போதையில் அவன்…!!

காதலிக்கும் போது
கண்ணியம் கதைப்பார்…!
கல்யாணம் முடிந்ததும்
காலால் உதைப்பார்…!!

ஏனிந்த அவலம்
பெண்களுக்கு மட்டும்…?
பெண்ணவளுக்கு எதிரி
பெண்ணும் கூடத்தான்…..!

அத்தானை…. மச்சானை….
மாமாவை….. நண்பனை…..
யாரைத்தான் நம்புவது
இந்தக் காலத்தில்...…?

பெண் என்றாலே...,
காமப்பார்வை பார்க்கும்,
கயவர் கூட்டம்
பெருகிப் போச்சு…..!

என்ன செய்வேன் நான்…?
பெண்ணாகி விட்டேன்….
வெறுத்துப்போனாலும்
பொறுத்தே போகிறேன்…!

கல்யாணமாகி…..
கருவிலே உரு வரவில்லை….
தருவிலே சந்தேகம்
அந்த அயோக்கியனுக்கு……..!

யோக்கியம் பேசும்
மனிதர்கள் எல்லாம்
யோக்கியர் தானா சொல்லுங்கள்
உங்கள் மனதை தொட்டு…..!!!

Print this post

No comments: