Monday, April 7, 2008

எல்லாமே ஏக்கங்களாய்.....!











எந்த வயதினிலும்,
பாசத்தோடு சோறூட்டி விட,
எப்போதும் என்னருகில் வேண்டும்...,
என் அருமை தாய்.......!

சோகத்தில் நான்..,
துவண்டிருக்கும் போதெல்லாம்....,
அன்போடு... தலை வருடி.... அணைத்து,
ஆறுதல் சொல்ல....,
என் மனைவி....!

என் நெஞ்சினிலே ஏறி....,
தன் பஞ்சுக்கால்களால் உதைத்து....,
மஞ்சமென நினைத்து...,
மெய் மறந்து தூங்க...,
என் மகன்....!

அப்பா.... அப்பா... என்று,
வாய் நிறைய கூப்பிட்டு .,
பாசத்தைப் பொழிந்து...,
குடும்பக் குலவிளக்காக...,
என் மகள்...!

அக்கா.... அண்ணா......,
தம்பி..... தங்கா....,
மச்சான்.... மாமா.....,
பாட்டன்..... பாட்டி... என்று,
பாசமுடன் நானழைத்து....,
அன்போடு ஆதரிக்க...,
என்னருகில்... என்றென்றும்..,
என் உறவுகள்...!

கூடிக்குலாவி கும்மாளமடித்து....,
கிட்டிப்புள்ளு விளையாடி...,
நெஞ்சத்தில் வஞ்சமின்றி...,
பஞ்சியில் படுத்துறங்க...,
என் வீடு...!

நாடு நாடாக, நாயாக அலைந்து....,
தேடும் சொத்து, சீர்வரிசைகளை....,
சீரழியாமல்... ஆண்டு அனுபவிக்க...,
அமைதியாக.. அழகாக...,
என் நாடு......!

எல்லாமே ....,
ஏக்கங்களாய்.....!
என்னை வெல்ல யாருமில்லை......,
என்னருகில் அனைத்தும் இருந்தால்.......!!!

Print this post

No comments: