Saturday, March 15, 2008

தெருத்தெருவாக தமிழர்கள்


தமிழா
!
நீ தமிழனா?
ஒருமுறை உன் மனதிடம் கேட்டுப்பார்.
பிறக்கும்,
உன்னுள் பல வினாக்கள்.

பாரினில்,
புத்திசாலிகள் தமிழன் தான்.
அதேயளவுக்கு ,
முட்டாளும் தமிழன் தான்.
இல்லை என்றால்,
இன்று,
ஈழத்தில், நடந்து கொண்டிருக்கும் அவலங்கள் ஏன்?

ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்ளுங்கள்,
அது தப்பில்லை.
ஏனெனில்,
நீங்கள் அண்ணன் தம்பி......!
இனம் என்று வரும் போது,
சேர்ந்தே இருக்கவேண்டாமோ?
போட்டி போட்டு,
அண்ணன் தம்பியை காட்டிக்கொடுப்பதா?
காலம் காலமாக,
எட்டப்பன் ஆவதா?
காலம் உங்களை மன்னிக்குமா?

உங்களது இனத்தை,
சகோதரர்களை,
விமர்சிப்பதை விடுத்து,
தமிழினம் படும் துன்பத்தை எடுத்துச்சொல்லுங்கள்.
உங்களது இனத்துக்காக,
உங்களது சகோதரர் படும் துன்பத்திற்காக,
ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள்.

உங்களது ஒருகணச்சிந்தனை,
புது ஈழம் பிறக்க,
உலகத்தில் தமிழீழம் மலர,
தமிழனுக்கென்று ஒரு நாடு உருவாக,
வழிவகுக்கும்.

எல்லோரது கொள்கையும்..
தமிழ் ஈழம்,
தனி ஈழம்,
என்பது தானே?

எவருடைய கட்சிப்பெயரிலாவது
ஈழம்,
தமிழர்,
விடுதலை,
என்ற சொற்கள் இல்லாது
பெயரிட்டு இருக்கிறீர்களா?

ஈழவிடுதலை,
தமிழர்விடுதலை,
என்று சொல்லிக்கொண்டு,
ஈழத்தையும்,
தமிழையும்
தமிழரையும் ,
காட்டிக்கொடுப்பதா?

சிங்களவனுக்கு வக்காளத்து வாங்கி,
தமிழர்களின் வயிற்றில் அடித்து,
அவர்களின் உயிரை விலைகொடுத்து,
சொத்துக்குவித்து,
என்ன பயன்?

போகும் போது ,
எதுவும் எம்முடன் சேர்ந்து வருவதில்லை....
நினைவிற் கொள்ளுங்கள்.

பிறந்தோம்,
சுகமாக வாழ்ந்தோம்,
என்று இறந்து போகாமல்,
சாதனை செய்தோம்,
சாதித்தோம்,
எம் இனத்தின் விடிவுக்கு உதவினோம்,,
என்று சிறந்து வாழலாம்.

வாழ்க்கையின்,
கடைசிக்கட்டத்தில்இருக்கும் உங்களுக்கு
ஏன் இந்த வறட்டுக்கௌரவம்?
தூக்கி எறிந்து விட்டு,
துணிந்து குரல் கொடுங்கள்.

இன்று,
ஈழத்ததில் நடந்து கொண்டிருக்கும்,
ஒவ்வொரு கொலைகளுக்கும்
கொள்ளைகளுக்கும்,
காணாமல் போதல்களுக்கும்,
பட்டினி அவலங்களிற்கும்,
பாலியல் வல்லுறவுகளுக்கும் ,
உங்களது ,
கையெழுத்துக்களும் ,
அறிக்கைகளும் ,
சுயமான முடிவுகளுமே,
மறைமுக ஆதரவளிக்கின்றன,
என்பதை மறந்து விடாதீர்கள்....

முடிவெடுங்கள்.......
உதவ முன்வாருங்கள்.......
தமிழரின் விடிவுக்கு.....
தமிழீழத்தின் மலர்வுக்கு.....!

Print this post

No comments: