Monday, March 24, 2008

எனக்கு வேண்டும் புது உறவு (வரவு)














உன்விழி
அசைவிலே
என்னிமை மூடுகின்றாய்
சொர்ப்பனத்தில் நீ வந்து
சொர்க்கங்கள் காட்டுகின்றாய்.

முத்தங்கள் தந்து நீ
மூச்சிரைக்க வைக்கின்றாய்.
பாலும் தேனும் தந்து நீ
வெறி பிடிக்க வைக்கின்றாய்.

என்னருகில் நீயிருந்து
சீராட்டி அணைக்கின்றாய்
உன்னணைப்பில் நானிருந்து
தவியாய் தவிக்கிறேன்...

உன்னை நினைத்து தினம்
கற்பனைகள் வளர்க்கின்றேன்
கனவு உலகினிலே
கண்டதயும் பிதற்றுகின்றேன்.

உனக்கும் கற்பனைகள்
தினமும் வருகிறதா?
தலையணை தான் உன்
இரவுத் துணைவனா?

தடையாக இருப்பதுவோ
தாலிக்கயிறு ஒன்று தானே
அதையும் கட்டி விட்டால்
அதிஸ்டக்காரன் நான் தானே.

தாலியை நான் கட்டி விட்டால்
நீ எனக்குச் சொந்தமடி
நீ எனக்குச் சொந்தமென்றால்
நானும் உனக்குச் சொந்தமடி.

தாலியை நான் கட்டி விட்டால்
வேலி போட யாருமில்லை
கிளிகள் கூடு தாண்டுமாப்போல்
விண்ணுயரப் பறந்திடலாம்.

நீ தான் என் வாழ்வில்
புதிய புது உறவு
உன்னால் எனக்கு வேணும்
புதிய புது வரவு......!

Print this post