Monday, March 17, 2008

இது தான் காதலா?












உன்னை..

பார்த்தது முதல்,
ஒரு மாற்றம்,
எனக்குள்......!

என்னவென்று,
சொல்லத்தெரியவில்லை,
ஆனால் உணர்கிறேன்.
நினைத்துப்பார்க்கிறேன்,
அடிக்கடி உன்னை......!

அலை மோதுகின்றது, என்மனதில்,
நீ செய்த விளையாட்டுக்கள்.....!
செய்ய வந்த வேலை மறந்து,
மூழ்கிவிடுகிறேன், அவற்றிலே.......!

பைத்தியம் பிடித்தவன் போல,
பிதற்றுகின்றேன், ஏதேதோ.....!
இசையை, ரசித்து, முணுமுணுக்கிறேன்....
வாய்விட்டு, பாடுகிறேன், பாத்ரூமிலே.....!

சொல்லி சொல்லி, பார்க்கிறேன்,
உனது பெயரை......!
ஏன் இந்த மாற்றம்?
இதன் பெயர் தான் காதலா?

Print this post

No comments: